இன்பமும் ஓர் கணத் தோற்றம் -இங்கு

இளமையும் செல்வமும் ஓர் கணத் தோற்றம்

துன்பமும் ஓர் கணத் தோற்றம் -இங்கு

தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.

யாரும்மில்லை அது பாரதியின் பாடல் தான் !!!


சில விஷயங்கள் என்னை யோசிக்க வைத்து கொண்டிருக்கிறது.இதை பற்றி எழுதலாமா என்று பல நாள் யோசித்து வேண்டம் என்று விட்டு இருக்கிறேன்.ஆனால் என் வாழ்நாளில் பல நாட்கள் அதனாலே தேங்கி விட்டது என்று சில கனங்கள் யோசித்து உண்டு.


நேற்று என் நண்பன் ஒருவன் தன் வீட்டில் அவன் காதலிக்கும் பெண்ணை பற்றி பேசியது பற்றி என்னிடம் பரிமாறி கொண்டிருந்தான்.அவன் சொல்லும் பொழுது எனக்கு வயதாகி விட்டதா அல்ல என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லையா என்று கூட தோன்றியது.வயதாகி விட்டது என்பது உண்மை தான்.அவன் வீட்டில் பெண்ணும் ஒரே ஜாதி என்பதால் பெரிய அளவில் விவாதம் வர வில்லை.பெண் வீட்டில் தங்கள் பெண் சந்தோசம் தான் முக்கியம் என்பதால் பச்சை கொடி காட்டி விட்டார்கள்.இருவருக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை என்பது அவர்கள் முகத்திலே தெரிந்தது.இருவரும் நேற்று என்னை சந்தித்த பொழுது நான் முந்தைய தின Hangover_ இல் இருந்து தெளியாமல் இருந்தேனோ என்னவோ ,என்னை பார்த்து "Are you OK ?" என்று கேட்டு கொண்டே இருந்தார்கள்.உண்மையில் எனக்கு அவர்கள் மீது அக்கறை உண்டு ,அதனால் எனக்கும் அளவில்லாத சந்தோசம் இருந்தது .


நேற்று வீட்டிற்கு வந்து தனியே அமர்ந்து இருக்கும் பொழுது தான் எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.காதல் வெற்றி பெறும் சந்தோசத்தை பார்த்தாலே என்னால் ரசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் கொஞ்சம் அடி மனதில் பொறாமையாக இருந்தது எனக்கு தெரிந்தது.காரணம் இருக்கலாம் ,அதற்கு வேறு உந்துதலும் இருக்கலாம் ஆனால் உண்மை என்னவென்றால் எனக்கு வெறுப்பு,கோபம்,ஏமாற்றம் ,தவிப்பு,தனிமை ,தேடல் எல்லாம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக காதலில் இருந்து விலக்கி இன்று இருக்கும் ஒரு நிலைக்கு தள்ளி விட்டது.


நான் இழந்து போன நாட்களை பற்றியோ நான் காதலித்த பெண்ணை பற்றியோ எனக்கு பேச விருப்பம் இல்லை.ஆனால் சில நாட்கள் முன் இருவரும் சந்தித்தோம் ஏதோ ஒரு கல்யாணத்தில் இருவரும் பார்த்து கொள்ள அவ்வளவு சிரமப்பட்டோம் .இருவரும் அந்த இடத்தை விட்டு நகர அவ்வளவு முனைப்பு காட்டினோம்.கொஞ்ச நேரத்தில் என்னை நினைத்து பார்த்தேன் " காலம் நகர்ந்து விட்டது,மறுக்கப்பட்டதை தோண்டி எடுத்து மன்னிப்பு கேட்க முடியாது ,மன்னித்தல் என்பது முதலில் உன்னிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் " என்று தோன்றியது.உண்மை காலம் வெகுவாக நகர்ந்து விட்டது.நான் பார்த்த பெண்ணும் அவள் இல்லை.அவள் பார்த்த நானும் அவன் இல்லை.அது தான் உறவுகளுக்கு இருக்கும் வீரியம் ,வெறுமை .வீரியம் நம்மை பற்றிய நினைவுகள் ,வெறுமை நாம் நிரப்பிய நாட்கள் .இதில் எந்த பகுதி மிகுந்து இருக்கிறதோ உறவு நிலைக்கிறது அல்லது இழக்கிறது .


அன்று முதல் என் மனதில் எந்த ஒரு எண்ணமும் அந்த பழைய நினைவுகளுக்கு இல்லை என்று உணர்ந்து கொண்டு திரிந்து வந்தேன்.சில நாட்கள் முன்பு அந்த பெண்ணிற்கு கல்யாணம் என்ற செய்தி வந்த பொழுது கூட நான் மிகவும் சந்தோசம் கொண்டேன்.அந்த நிகழ்வுக்கு காத்திருந்தது என்னவோ உண்மை தான்.என் சார்பில் என் வாழ்த்தை அந்த தம்பதிகளுக்கு சேர்த்துவிட்டேன் என்ற நிம்மதியும் இருந்தது.


இன்றைய நிலைமையில் யோசித்து பார்க்கும் பொழுது காதல் ஒரு பகடை காய் என்றே எனக்கு தோன்றுகிறது.புரிதல் ,அன்பு எல்லா காதலிலும் இருக்கும் ஆனால் அதன் அடுத்த கட்டம் திருமணத்திற்கு முன்னேருபவன் தான் வெல்பவன்.மற்றவன் காதலில் தோற்றவன் என்ற முத்திரை குத்தி திரிய விடபடுகிறான்.இதில் அவன் செய்த குற்றமும் ஒன்றும் இல்லை ,சுற்றம் செய்த குற்றம் ஒன்றும் இல்லை.அவன் தான் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்வான் ,அது வரை காத்திருப்பான்.
பல நாள் நான் யோசித்து இருக்கிறேன்,எனக்கு Arranged marriage சரி பட்டு வராது என்று.உண்மையில் எனக்கு திருமணமே சரி பட்டு வருமா என்பதை நான் மிகவும் யோசித்து கொண்டிருக்கிறேன்.என் தந்தையிடம் சொன்னால் "நானா நீ லவ் பண்ண வேண்டாம்னு சொன்னேன் நீதான் முடியாதுன்னு சொன்ன?" என்கிறார் .

ஆனால் என் பெற்றோரின் வேண்டுதலுக்கு சரி பெண் பாருங்கள் என்று தலை ஆட்டி விட்டேன்.இதில் வேடிக்கை என்னவென்றால் நான் சில பெண்களை வேண்டாம் என்பேன் ,சில பெண்கள் என்னை நிராகரிக்கும்!!! அந்த ஆட்டதிற்கு நானும் தயாராக வேண்டும் .அது தானே அந்த ஆட்டத்தின் விதி.


இதில் எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் தெளிவாக புதிதாக வர வேண்டும் .எனக்கு தெரியவில்லை என் மனம் குழம்புகிறது என்று சொல்ல மாட்டேன் ஆனால் என்னால் ஒரு முடிவு எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.நான் எடுக்காத முடிவுகள் எல்லாம் எனக்கு தோல்வியிலேயே கொண்டு சேர்த்து இருக்கின்றன.


பல நண்பர்களுக்கு என் மீது வேறுபாடு இருக்கலாம் .என் நடவடிக்கை மீது.உண்மை தான் .என்னை ஒருபொருட்டாக கொள்ளாமல் நினைத்து கொண்டு திரிந்த நாட்களில் நான் பல நண்பர்களை இழந்து இருக்கிறேன்.எத்தனையோ நண்பர்கள் இன்றும் என் மீது பகையோ அல்ல நிகழ்வோ அல்லாமல் விலகி இருக்கிறார்கள். அவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கூட கிடையாது.காரணம் தேட முடியாது.சத்தியமாக அவர்களை இழந்து இருக்கிறேன் .வெள்ளித்திரை படத்தில் பிரிதிவிராஜ் முடிவில் பிரகாஷ்ராஜை பார்த்து ஒரு வசனம் சொல்லுவான் " எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும் ஆனால் சில பேருடன் விலகி இருப்பது நல்லது " அது போல் தான் இதுவும்.என் கடந்த காலம் தந்த பரிசுகளில் ஒன்று !


இன்று எனக்கு இருக்கும் நெருக்கமான நண்பர்கள் பலர் நான் கடந்து வந்த வழி முழுவதும் என்னுடன் இருந்தவர்கள்.அவர்கள் ஆர்வம் கொண்டு அல்ல அவர்கள் அக்கறை கொண்டு வந்தவர்கள்.அவர்கள் என்றுமே என் நண்பர்களாக இருப்பார்கள் .இன்று விலகி இருக்கும் பலரும் என்னை பார்த்து கொண்டு தான் இருப்பார்கள் ,ஏன் எனில் அத்தனை பெறும் என்னுடன் மிக மிக நெருக்கமாக இருந்தவர்கள்.இதில் இந்த பதிவில் கமெண்ட் போடும் பல நண்பர்கள் உட்பட .யாரும் ஏன் என்ற காரணம் சொல்ல முடியாமல் விலகி இருந்து என்னுடன் இருப்பவர்கள். வழிகள் மாறுபட பயணத்தை மாற்றி கொண்டவர்கள்.


ஏன் இந்த திடீர் சுய ஆராய்ச்சி என்று யாரும் கேட்க வேண்டாம் .நான் தமிழில் எழுதுவதை நிறுத்தலாம் என்று நினைத்து இருக்கிறேன்.ஏதோ ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.எத்தனையோ முறை இதை மாற்றி கொள்ள வேண்டும் அதை மாற்றி கொள்ள வேண்டும் என்று யோசித்த பல நாட்களில் என்னுடன் இருக்கும் ஒரு வித வெறுமையை மாற்றி கொள்ளலாமா என்று யோசித்து தான் இந்த எழுத்தை மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.


பல பொழுதுகள் தனியே நடந்து செல்லும் பொழுது ,பாக்கெட் பாக்கெட் ஆக சிகரட் புகைக்கும் பொழுது ,கூட்டம் கூட்டமாக அரட்டை அடிக்கும் பொழுது ,சினிமா பார்க்கும் பொழுது ,அந்த ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது எல்லா நாட்களிலும் ஒரு வித எண்ணம் மேலோடி கொண்டுதான் இருந்தது.
அந்த எண்ணம் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ,ஆனால் நான் செய்யும் ஒரு காரியமும் எனக்கு எந்த வித பதிலையோ திருப்தியையோ தரவில்லை.என் தவறுகளில் இருந்து திருந்த எனக்கு தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும்.


மும்பை சென்ற பொழுது விமானத்தில் அமர்ந்து இருந்த ஒரு நண்பர் என்னிடம் ஆன்மிகத்தை பற்றி பேசி கொண்டிருந்தார்.அவர் கேட்ட ஒரு கேள்வி " கடவுள் ஏன் கொடுக்க வேண்டும் ? ஏன் அவனே எடுத்து கொள்ள வேண்டும் ? " உண்மை தானே !


நான் என் விவரங்களுக்கு கடவுளை சொல்லவில்லை , என் செயல்களுக்கு நான் தான் காரணம் .அதற்கு மறுப்பு கிடையாது.


என்னுடன் மேலோடி கொண்டிருந்த எண்ணம் "எங்கே செல்கிறோம் என்ற அந்த எண்ணம்." ஒன்றுமே புலப்படாத ஒரு வழியில் கூடமாக இடித்து கொண்டு செல்ல குமட்டி கொண்டு வருகிறது.என்னை தேடுகிறேனா அல்ல எனக்கான உறவை தேடுகிறேனா அல்ல எனக்காக தேடுகிறேனா ? தெரியாமல் விடை தேடுவது என் தேடலா ?


சொல்லடி சிவசக்தி நிலசுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

അക്ഷര തെറ്റുകള്‍


മറവി അയി പോകുന്നു


അക്ഷങ്ങള്‍ ഇല്ലാതെ


അലയുന്ന വാക്കുകള്‍

அக்ஷர தெட்டுகள்


மறவி ஆய் போகுன்னு


அக்ஷங்கள் இல்லாத


அல்லையுன்ன வாக்குகள்



மறந்து போன

பிழைகள் எல்லாம்

கோட்பாடுகள் இல்லாமல்

திரிந்து கொண்டிருக்கின்றன .

நானும் என் நண்பன் சூரஜும் சனிக்கிழமை இரவுகள் அமர்ந்து எங்கள் வார சுமையை இறக்கி வைக்க பழைய பாடல்களையும் ,படங்களையும் ஒலிக்க வைத்து கொண்டு உலக வரலாறில் இருந்து உள்ளூர் விவகாரம் வரை பேசி கொண்டிருப்பது பழக்கம் ஆகி விட்டது.அவன் சொல்லிய ஒரு கவிதை தான் மேலே !அவனது சொந்த கவிதை என்பதால் அவன் மலையாளத்தில் கூறினான்.அதை கொஞ்சம் சிரமப்பட்டு மொழி பெயர்த்து உள்ளேன்.அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

எத்தனையோ மாதங்களாக தட்டி கழித்து கொண்டிருந்தேன்.வெகு விரைவில் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்.இந்த மன மாற்றத்திற்கு காரணம் இருக்கிறது.

சத்தியமாக இன்னும் பெண் பார்க்கவில்லை.இனிதான் பார்க்க வேண்டும் !

உண்மைக்கும் பொய்க்கும்

இடையே இருக்கும்

ஒரு நூல் இடைவெளியில்

கழிந்து கொண்டிருக்கும் பொழுதுகளுக்கு

நினைவுகள் என்பது கிடையாது !!!

நினைவுகள் எல்லாம்

உண்மையாகவோ அல்லது

பொய்யாகவோ இருக்கிறது.

நான் இப்பொழுது

அந்த இடைவெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

ஆரம்பித்த உடனே

முடிந்த போன வீட்டிற்கு

பத்தாயிரம் ருபாய் வாடகை !

மாதம் பதிமூன்றாயிரம்

இ எம் ஐ கட்டும் ,

பரந்து விரிந்த

சொந்த வீட்டிற்கு இரண்டாயிரம் வாடகை.

சில விஷயங்கள் நம்மை விட்டு மாறவும் செய்யாது மாற்றவும் முடியாது.சிறு வயது முதல் நம் இரத்தத்தில் ஊறி போன விஷயங்கள் அது.ஆனந்தம் கொடுத்த,நம்மை பாதித்த,மனதில் பதிந்த ,நம்முடன் வளர்ந்த விஷயங்கள் என எதை வேண்டும் ஆனாலும் எடுத்து கொள்ளலாம்.ஒரு முறை நம் வாழ்க்கை தடம் மாறும் பொழுது அந்த நினைவுகள் எங்கோ ஒரு இடத்தில் மறைந்து ஒளிந்து கொண்டிருக்கும்.

சொந்த ஊரில் இருந்து வெளி ஊருக்கு வந்து மாற்றம் கொள்ளும் பொழுது பல விஷயங்கள் நம் எண்ண வெளிபாடில் இருந்து மறைந்து போகலாம்.நம் வீட்டை ,சுற்றிய இடங்களை எத்தனையோ விதமாக மாறி போகலாம்.அந்த பழைய எண்ணங்கள் எல்லாம் ஒரு முறை தூண்டிவிடப்படும் பொழுது மீண்டும் துளிர்த்து எழுவது ஒரு ஆச்சரியம்.அதனுடன் சேர்ந்து பழைய கதைகளும் சேர்ந்து வரும்.

முதன் முதலில் நான் பெங்களுர் செல்லும் பொழுது தமிழ் நாட்டை பிரிந்து மிகவும் வருந்தினேன்.தமிழ் நாடு என்றால் ,தமிழ் சினிமா ,தமிழ் சாப்பாடு .ஹோசூர் நகரத்தில் எதாவது என்கொயரி வந்தால் முதல் ஆளாக நான் தான் கிளம்பி நிற்பேன்.என் மேனேஜர் அறையில் சென்று இன்று நான் ஹோசூர் செல்கிறேன் என்றவுடன் அவருக்கு தெரிந்து விடும் நான் தமிழ் நாடு எல்லையை தொடவே செல்கிறேன் என்று.அவரும் அதிகம் கண்டு கொள்ள மாட்டார் .ஹோசூர் சென்று என் வேலையை முடித்து விட்டு ஹோசூர் மீனாக்ஷி பவன் சென்று ஒரு முழு சாப்பாடு சாப்பிட்டு விட்டு ஒரு படம் சென்றால் தான் என் வண்டி பெங்களூர் திரும்ப ஒத்துழைக்கும் .இதில் என்ன விஷயம் என்றால் அடுகோடி தாண்டி செக்போஸ்ட் அருகே தமிழ் நாடு பதிவு வண்டிகள் தென்படும் பொழுதும் சில ஜவுளி விளம்பரங்கள் சுவற்றில் தென்படும் பொழுதும் ஒரு ஆனந்தம் தெரியும் .அது தான் மனதை கிளறி விடும் நினைவுகள்.எங்கோ ஒரு இடத்தில் அன்னியமாக வாழும் பொழுது தான் அந்த ஆனந்தங்கள் புரியும்.

நண்பர்கள் பலர் மற்ற நாடுகளில் வேலை பார்க்கும் பொழுது சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன்." எதோ திரையில் தமிழ் எழுத்தை பார்க்கும் பொழுதே ஒரு வித திருப்தி " என்று .உண்மை தான் யாரும் மறுக்க முடியாது.

நெல்லை மக்கள் எல்லோருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை உண்டு என்றால் அது கண்ணை மூடி கொண்டு சொல்லி விடலாம் அது புரோட்டா தான் என்று.என் பள்ளி பருவத்தில் எனக்கு அதிகம் இருப்பது எல்லாம் நண்பர்களுடன் சென்று புரோட்டா சாப்பிட்டது தான்..

இன்று இதை பற்றி எழுத பல காரணங்கள் உண்டு.ஒன்று சென்னையில் புரோட்டா என்பது ஒரு பெரிய உணவு கிடையாது.பிரியாணிகள் அந்த இடத்தை நிரப்பி வருகின்றன.நெல்லை நகரில் இறங்கிய உடன் உங்களை வரவேற்பது புரோட்டா கடைகள் தான் .பச்சை நிறத்தில் ஒரு Tube light தென்பட்டால் அது ஒரு புரோட்டா கடை.பல விதமான புரோட்டா இருந்தாலும் நெல்லையின் ஒரே புரோட்டா அது சாதா ரொட்டி .புரோட்டா மாஸ்டர் அன்று எல்லாம் எங்கள் கண்களில் ஒரு ஹீரோ போல் தென்படுவார் .அந்த புஜங்களும் அந்த புரோட்டவை புரட்டும் அந்த காட்சிகளும் எல்லா இள வயது மாணவர்களுக்கும் ஒரு சிம்ம சொப்பனம்.இதில் எந்த வகை மிகை படுத்தலும் கிடையாது.பத்து ரூபாய் கிடைத்தால் அதை வைத்து ஐந்து புரோட்டா சாப்பிட்டால் அது அன்றைய சந்தோசம்.கூடவே ஒரு அம்பிலேட் மற்றும் பச்சை வெங்காயம் இருந்தால் சொர்க்கம்.

இன்றும் அங்கு இருக்கும் பல நண்பர்கள் தினசரி இதை தான் சாபிடுகிறார்கள்.பொதுவாக புரோட்டா என்பது பெற்றோர்களுக்கு பிடிக்காத ஒரு உணவு.அதற்கு ஒரு காரணமும் உண்டு ! தன பையன் தன சப்பட்டை விட புரோட்டாவை அதிகம் விரும்பி உண்கிறான் என்ற ஒரு எரிச்சல் என்று கூட சொல்லலாம்.ஆதங்கம் என்று சொல்ல மாட்டேன்.பல நாட்கள் வீட்டில் பெரிய சண்டைகள் எதற்க்காக வந்தது எல்லாம் நினைவில் இருக்கிறது.புரோட்டா சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினால் எதோ குற்றம் செய்தது போல் நிற்க வேண்டும்.சில சமயங்கள் வீட்டை ஏமாற்றி விட்டு புரோட்டா சாப்பிட்டு வீடு திரும்பும் பொழுது அம்மாவின் திருப்திக்காக இன்னொரு முறை வீட்டு சாப்பாடு சாப்பிட்ட காலங்களும் உண்டு.இது எல்லா வீடுகளில் நிகழும் ஒரு சாதரண விஷயம் .

பொதுவாக புரோட்டா கடைகள் மாலை வேளைகளில் தான் திறக்க படும்.சில கடைகள் மதியம் இருந்து ஆரம்பிக்கும்.காலையில் யாரும் புரோட்டா சாப்பிட மாட்டார்கள்.மதியம் புரோட்டா சாப்பிடுபவன் .மைதா மாவில் ஊறி போனவன் என்று கூட சொல்லலாம்.சில நாட்கள் புரோட்டா கடைகளில் தான் சுவாரசியங்கள் நிகழும் ,பள்ளியில் படிக்கும் பெண்ணின் தந்தை அன்று கடைக்கு வந்து புரோட்ட சாப்பிடும் பொழுது நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பது,மாஸ்டர் பழகி விட்டால் கொஞ்சம் அதிகமாக சால்னா வாங்குவது,பிறந்த நாட்கள் புரோட்டா வாங்கி கொடுத்து கொண்டாடுவது ,அன்றைய மிக பெரிய ரௌடி எங்களுக்கு புரோட்டா வாங்கி தருவது என்று பல சம்பவங்கள்.சால்னா என்பது குருமா ,சேரவா என்று பல விதங்களில் அழைக்கப்படுவது உண்டு.

எது எப்படி இருந்தாலும் புரோட்டா என்பது திருநெல்வேலியில் ஒரு மதம் போன்றது.சென்னையிலோ அல்ல இடங்களில் தேடினாலும் அந்த சுவை எங்கும் தென்படாது.இன்று நெல்லை செல்லும் பொழுதெல்லாம் நான் இரவு உணவை புரோட்டா கடைகளில் தான் சாப்பிடுவேன்,என் பெற்றோர்களும் அதற்க்கு பழகி விட்டார்கள்.

அன்று சென்னையில் நான் தங்கி இருக்கும் அண்ணா நகரில் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பழகிய முகம் தென்பட்டது.அவர் எங்கள் வீட்டருகே இருபத்து வருடங்கள் முன் ஒரு புரோட்டா கடை நடத்தி வந்தார்.நாள் போக்கில் அவர் கடையை மூடி சென்று விட்டார் அது தான் நினைவில் இருக்கிறது.

அவர் என்னை பார்த்த உடன் கண்டு பிடித்து விட்டார்.மனிதர் வெகுவாக மாறி போய் இருந்தார்.அவரிடம் பேசி கொண்டிருக்கும் பொழுது சிந்தாமணி சிக்னல் அருகில் ஒரு துரித உணவு கடை ஆரம்பிப்பது பற்றி பேசி கொண்டிருந்தார்.நானும் அவரிடம் ஏன் ஒரு புரோட்டா கடை ஆரம்பிக்கலாமே என்று சொல்ல ,அவரும் பலவாறாக யோசித்து மாசத் கிடைப்பது கஷ்டம் என்று பேசி கொண்டிருந்தார்.
நான் அவரிடம் சொல்லியது ஒன்று தான் " அண்ணே இங்க ஒரு கடையில நம்ம ஒரு ருசி வாராது ,அதுக்கு காரணம் இருக்கு ! ஒன்னு நம்ம ஊரு தண்ணி அப்புறம் மாஸ்டர் பக்குவம்.நீங்க மட்டும் மாஸ்டர் மட்டும் கூட்டி வந்தீங்கன்னா கலக்கலாம் " என்றேன்.அவரும் ஆம் என்றார்.

ஒரு வாரம் முன்னதாக ஒரு அழைப்பு." கார்த்தி கடை போட்டாச்சு ! மாஸ்டர் நம்ம மார்கெட்ல உள்ள ஆளு ! "

"இதோ வர்றேன் ன்னே "கிளம்பி சென்றேன் " அண்ணாச்சி புரோட்டா ஸ்டால் " கண்கள் பளிச் என்று தெரிந்தது.
அன்றில் இருந்து இன்று வரை ஆறு புரோட்டா ,சால்னா,பச்சை வெங்காயம் தான்.

அதிகம் எழுதாமல் இருந்தாலும் கொஞ்சம் வாசித்து கொண்டு இருந்தேன்.இது கிரிக்கெட் காலம் என்பதால் ,கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படும் இணையதள செய்திகள் அதிகம் வாசித்தேன்,பேக் ஐ பி எல் பிளேயர் என்ற இணையம் பெரிய பரபரப்புக்கு உள் ஆனதால் அதை ஐ பி எல் சமயத்தில் அதிகம் வாசித்து வந்தேன்.கிரிக்கெட் நமக்கு அதிகம் ஊட்ட தேவை இல்லை தான்,ஆனால் கிரிக்கெட் பற்றிய கிசு கிசு எப்பொழுதும் சுவாரசியம் தான்.


இவை எல்லாம் இந்த தளத்தில் இருந்து வந்தாலும் அந்த மர்ம மனிதன் யார் என்ற முனைப்பிலே அது அதிகம் படிக்கப்பட்டது.மறைமுகமாக ப்ளாக் செய்வது ஒரு கோழைத்தனம் .ஆனால் அந்த மர்ம மனிதன் தன்னை ஐ பி எல் முடிந்த உடன் வெளிச்சத்திற்கு கொண்டு வர போவதாக அறிவித்து இருந்தான்.ஆனால் எல்லாம் ஒரு விளம்பரம் என்று மிக விரைவில் எப்பொழுது வந்து விட்டது.


இப்பொழுது அவன் உலக கோப்பை பற்றி எழுதுகிறான்.ஒரு சமயத்தில் தினமும் வசித்து வந்த நான் அவனது தொடர் பூச்சாண்டி எனக்கு எரிச்சல் தந்து விட்டது.அந்த கோழைத்தனமும் அந்த மறைமுக கிண்டலும் இனி எனக்கு சுவாரசியம் அளிக்க வில்லை.எதுவாக இருந்தாலும் மறைந்து இருந்து எழுதுவது ஒரு மிக பெரிய கோழைத்தனம்.நேற்று கூட என் நண்பர் படிக்கட்டில் இருந்து இறங்கும் பொழுது கூறினார் " Karthik Do you know Fake Ipl is back ,He is writing abt world cup "

" Yeah I came to know.This time I am not getting fooled.He is no body to tell us on Cricket,I have stopped reading him ,Reading him is Cheap !"

ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.என்னுடைய புதிய ரே பான் கண்ணாடி என் முகத்தில் அருமையாக பொருந்தி இருக்கிறது என்று யார் சொல்ல முடியும் .என் எதிரே இருக்கும் கண்ணாடியை விட.?

ஆட்டோவில் அமர்ந்தவுடன் அந்த சிறிய வட்டமான கண்ணாடியில் கஷ்டப்பட்டு முகம் பார்ப்பது என்பது எல்லோருடைய பழக்கம்.சில நேரம் அந்த கண்ணாடி மட்டும் தான் அழகாய் காட்டும் என்ற நினைப்பில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும்.

இப்பொழுதெல்லாம் சில விஷயங்கள் மறந்தும் மன்னித்தும் ஆக்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது.அன்று கூட என் நண்பன் சொன்னான் " மச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ எப்படி கஷ்டப்பட போறேன்னு பார்க்க தானே போறேன்.!" இதில் பல அர்த்தம் இருக்கும் என்று கொண்டாலும் ஒரே அர்த்தம் தான் ;
கடந்த காலம் என்ற கட்டுப்பாட்டுக்குள் இருந்து வெளி வந்தால் தான் ஒரு அர்த்தம் இருக்கிறது.
அன்று பூங்காவில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தேன் ," அடேய் தனியாக இருக்கிறாய் ! முழுமையாக" அன்று கூட்டமாக இருந்த பொழுதும் தனியாக தோன்றியது ,இன்று தனியாக இருந்தாலும் ஒரு நிறைவுடன் இருக்கிறது ". என்ன முட்டாள் தனமான சிந்தனைகளா ? நீயும் உன் சிந்தனைகளும் ,நாட்கள் சிந்தித்து கொண்டு நகர்வது இல்லை. வாழ்க்கை உன்னையும் உன் சிந்தனைகளையும் தாண்டி உருமாறி செல்வதை உணரும் பொழுது உன் உணர்வுகள் எல்லாம் செத்து போய் இருக்கும்."
மறுபடியும் சிந்தனைகள்.சிந்தனை வேண்டாம் என்ற சிந்தனை.
ஏன் இப்படி யோசித்து கொண்டு ,கவிதை எழுதி கொண்டு ,கற்பனைகளை தோண்டி தோண்டி ருசி பார்த்து கொண்டு ,இயல்பான நாட்கள் என்ற விஷயம் என்ன ? எல்லாம் என்ன??? பெண் உன்னை விட்டு போய் விட்டாள் என்ற சோகமா ? சோகம் என்ன உன்னை சுகப்படுத்தி விட்டதா.திரும்பி பார்த்தால் ஐந்து வருடம் ஓடி இருக்கிறது,ஏன் எதற்கு எப்படி என்ற கணக்கு இல்லாமல் !

ஓடிய வருடங்களை மீண்டும் போய் நிறுத்தி ,இதோ இந்த இடத்தில நான் எப்படி இருந்தேன் என்ற நினைப்பு கூட நினைவில்லாமல் ,ஆனால் பயனற்று சென்று இருக்கிறது சிந்தனைகள்.

பூங்காவில் எங்கிருந்தோ ஒரு பட்டாம் பூச்சி என் அருகில் அமர்ந்தது .அருகில் இருந்து பார்த்தால் தான் அந்த ஓவியம் புரிகிறது.உண்மையில் அந்த நிறங்கள் எங்கிருந்து வருகிறது ,ஏன் எந்த வரைபடம் புரியவில்லை.அடுத்தது ஒரு பட்டாம் பூச்சி வேறு நிறத்தில்,கொஞ்சம் அருகில் சென்ற உடன் இரண்டும் பறந்து விட்டது.ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியும் முன் அடுத்த ஏன் பறந்தது என்ற கேள்வி ?

முகம் கொஞ்சம் தெளிவாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.சில நேரம் சிரித்து கொண்டு நடக்கும் பொழுது தான் தெரிகிறது சிரிக்கும் உலகம் எதை பார்த்து சிரிக்கிறது என்று.ஒரு சில நொடிகள் நின்று போய்விட்டது போல் தோன்றும் அத்தனை சிந்தனைகளும் அபத்தம் என்று தோன்றும் பொழுது சந்தோஷமாக தான் தெரிகிறது.

சில எழுத்துக்குள் என்னிடம் இருந்து தான் வந்ததா ? எதற்காக இதை பாராட்டினார்கள்.கன்றாவியாக இருக்கிறதே ? ஒருத்தன் ஒரு ரயில் பயணம் முழுவதும் லூசு மாதிரி அழுது கொண்டே வருகிறான் ? எதற்கு அவனுக்கு ஒரு கதை ,? காதல் கதையாமே அது ! நானே பிதற்றி கொண்டு பரிதாபம் தேடி இருக்கிறேன்.எல்லாம் எனக்குள் ஒரு மன்னிப்பு தோன்றும் வரை தான் .

எத்தனை முறை கதை தேடி அலைந்தாலும் சொந்த கதை மட்டும் சுகமாக வெளிப்படும் என்பது உண்மை தான்.ஒரு கட்டத்தில் அது சுவாரசியம் தான்.கழுத்து வழியில் படுத்து இருக்கும் பொழுது ஒரு நண்பன் வந்து என்னை பார்த்தான்.அவன் சொன்ன அறுதல் வார்த்தைகள் சுவற்றில் அறைந்த ஆணியை போல் இறங்கியது என்று தான் சொல்ல வேண்டும்.

சாதரணமாக உடல் பற்றி விசாரிக்காமல் அவன் சொன்னது " இந்த இரண்டு மாதம் உனக்கு ஒரு கொடுப்பினை தான்.உன்னை நீ அறிய ! பல வலிகள் எல்லாம் துச்சமாக தெரியும்.இவ்வளவு நாள் முக்கியமாக தெரிந்தது எல்லாம் இனி தெரியாது.உயிர் வலியை விட எதுவும் பெரியது அல்ல ! யோசி நன்றாக யோசி தனியாக அமர்ந்து அமைதியாக இரு ! சிரித்து பழகு !" அன்று அவன் சொன்னது பலவற்றை என்னால் வலியில் அதிகம் கவனிக்க முடியவில்லை ! ஆனால் இந்த மேல் கூறிய வார்த்தைகள் உண்மையாக தங்கிவிட்டது.

சீரோ டிகிரி என்ற புத்தகம் வாசித்து கொண்டிருந்தேன் ,வித்தியாசமாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கற்பனையை மீறி எழுத பட்டிருக்கும் ஒரு குப்பை .அதற்கு அப்படி ஒரு விமர்சனம் ,பப்ளிசிட்டி ! பெண் ,பெண் உறுப்பு, செக்ஸ் இதை தாண்டி புத்தகம் நகரவே இல்லை.அதை ஒரு செக்ஸ் புத்தகம் வகையிலும் சேர்க்க முடியாது.ஏன் எனில் செக்ஸ் புத்தகம் அதன் குறிக்கோள் என்ன வென்று தெளிவாக இருக்கும்.இது எந்த வகை என்று தெரியவில்லை.சம்பந்தம் இல்லாமல் என்னவெல்லாமோ வரும் கடைசியில் செக்ஸ் செக்ஸ் .ஒவ்வொரு பக்கத்திலும் செக்ஸ் செக்ஸ்.
படிக்கும் பொழுது எரிச்சல் வந்தது.குமட்டலாக இருந்தது.இதில் இருப்பது எல்லாம் பிதற்றல் என்று தோன்றியது.ஆனால் ஒன்று பிடித்து இருந்தது.எங்கோ ஏதோ என்று நகரும் அந்த மேதாவித்தனமான ஒரு போலி தனம் பிடித்து இருந்தது.
இந்த போலி தனத்தில் திளைத்து கொண்டு தான் நாட்கள் எல்லாம் வீணாகி விட்டதா ,சில வலிகள் செக்ஸ் என்ற ஒரு மறைமுகமான ஒரு உணர்வில் அடங்கிவிடுகிறதா என்று கூட தோன்றியது.
தோன்றியவரை நல்லது என்று கூட தெரிகிறது.

ஷோபனா ரவி முதல் இன்றைய அர்னாப் வரை நான் பேசி கேட்ட ஒரு வார்த்தை தமிழ் ஈழம் .சில நேரம் யோசித்து பார்த்தது உண்டு என்ன தான் வேண்டும் இவர்களுக்கு என்று.இதன் அர்த்தம் தெரியாமல் உளறிய நாட்கள் என்று சொல்லலாம்.

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையும் ,தமிழ் இன உரிமை மீறலும் எனக்கு தெரிய ஒரு வகையில் புரிய ஆரம்பித்தது என் நண்பன் மூலம்.நாங்கள் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் பொழுது எட்டாம் வகுப்பில் மிக தடிமனாக ஒரு மாணவன் வந்து சேர்ந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.அவனது ஆங்கிலமும் அவனது தமிழ் உச்சரிப்பும் வித்தியாசமாக இருந்தது.அவன் நடவடிக்கைகள் மிக சதுவனதாக இருந்தன.பிறகு தான் அறிந்தோம் அவன் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து இங்கே படிக்க வந்துள்ளான் என்று.
அவனிடம் நண்பனாக எனக்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை.அந்த நட்பு இன்று வரை தொடர்வது எனக்கு பெருமையாகவும் இருக்கிறது.தமிழ் பற்றி அவன் அதிகம் ஆர்வம் இல்லாவிட்டலும் ஈழம் என்ற கோட்பாட்டின் மீதும் தமிழ் நாட்டின் அதன் அசைவுகளை பற்றியும் அவன் நன்றாக அறிந்து வைத்து இருந்தான்.
உண்மையாக ஈழம் பற்றிய கருத்துகளையும் அதன் தேவையையும் சில நாட்கள் முன்னதாக நான் அவன் குடும்பத்துடன் கதைத்துக்கொண்டிருந்தேன் .அவர்கள் தமிழும் அவர்கள் கோபமும் சில வகையில் நியாயம் என்று பட்டாலும் அதன் வரலாற்றை படிக்க வேடும் என்ற தூண்டுதல் எனக்கு இருந்தது.
ஈழம் என்றால் என்ன,தமிழ் இனம் ஏன் அங்கே உருவானது ,அங்கே அவர்கள் நிலைப்பாடு எப்படி இருந்து ஏன் இப்படி ஆனது என்பதை பற்றி படிக்கவேண்டும் என்று தோன்றியது.
பிரபாகரன் யார் என்று தெரியாமலே நாம் அவனை ஒரு தீவிரவாதி என்று கொள்கிறோம்.உண்மையில் சொல்ல போனால் ஒரு நாள் குமுதம் புத்தகத்தை தூக்கம் வராமல் புரட்டி கொண்டிருந்தேன்.அப்பொழுது அதில் வந்த ஒரு வாக்கியம் மனதை வாட்டி எடுத்து விட்டது." இன்று இதை நீங்கள் படிக்கும் பொழுது தூக்கத்தின் பாதியிலோ ,சொந்தங்களை காண பயணத்திலோ அல்ல வேறு சில ஓய்வு நேரத்திலோ இருப்பீர்கள் ,ஆனால இந்த நேரத்தில் அந்த மனிதனும் அவனை சார்ந்தவர்களும் மட்டும் இனத்தை பாதுகாக்க போராடி கொண்டிருப்பார்கள்."
இதில் மேலே யாரை பற்றி கூறினார்கள் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை . இந்த ஜனநாயக நாட்டில் ஒரு புத்தகம் படிக்க நான் சிரமப்பட்டது இந்த ஒரு வாரமாக தான் .நான் படித்து கொண்டிருந்த புத்தகம் பிரபாகரனின் வாழ்க்கை.அதை அடுத்த நாள் முதல் அட்டை போட்டு படிக்க ஆரம்பித்து விட்டேன்.
உண்மையில் கேட்கிறேன், வெளி மாநிலத்திலோ ,அல்ல வெளி நாட்டிலோ தமிழ் பேசும் ஒருவரை நாம் கண்டால் நம் மனம் எப்படி சந்தோசம் கொள்கிறது?.நமக்கு தெரியாத ஒரு இடத்தில அவர் தெரியாதவராக இருந்தாலும் அந்த மொழி நம்மை இணைத்து வைப்பது எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.
இதற்கு காரணம் இருக்கிறது மொழி என்னும் ஒரு விஷயம் ரத்தத்தில் கலந்து இருக்கும் விஷயம்.அதே தமிழ் மொழி பேசும் மனிதர்கள் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தங்கள் உரிமைகளையும்,உறவுகளையும் ,உணர்வுகளையும் ,உயிரையும் இழந்து தவிக்கும் பொழுது மனிதனாக பிறந்த எவனுக்கும் கொஞ்சம் உரைக்க வேண்டும்.
இதில் நான் எழுதியோ அல்ல பேசியோ ஒன்றும் நடக்க முடியாது என்று தெரிந்து தான் இதை எழுதுறேன்.அரசியல் ஆக்கி ,உண்ணாவிரதம் இருந்து ,எல்லாம் செய்து இதோ இவன் சொல்ல வந்து விட்டான் என்று எண்ண வேண்டாம்.
உண்மையில் ஈழம் நாம் கருத்திற் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.என் தந்தையுடன் இன்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரிடம் தேர்தலை பற்றி கருத்தை கேட்டேன்.எதோ நடுவில் அவர் " எதற்காகவும் இல்லை இந்த முறை முப்பது வருடம் மனம் தளராமல் போராடி கொண்டிருக்கும் அந்த மாவீரன் சார்பாக பேசும் கூட்டதிற்க்காக தான் என் ஆதரவு " இதில் எந்த கட்சி என்று ஆராய வேண்டாம்.
ஆனால் படித்தவர்கள் ஈழத்தை கவனிக்கிறார்கள்,ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.செய்ய முடிந்தவர்கள் இன்று அதை வைத்து கபட நாடகம் ஆடுகிறார்கள்.சில நேரம் கோபம் வருகிறது.சில நேரம் இது நமக்கு மீறிய செயல் என்று கூட தோன்றுகிறது.
முத்துகுமரன் தீக்குழித்த இடத்தில இருந்து நூறடி தள்ளி தான் என் அலுவலகம் இருக்கிறது.அன்று அதை அவர் செய்யும் பொழுது என் மனம் ஏன் என்ற கேள்வியை தவிர எதுவும் கேட்க தோன்றவில்லை.ஆனால் இன்று ஏன் நண்பனுடனும் சில இலங்கை நண்பர்களுடனும் பேசிய பிறகு அதன் கோபம் புரிகிறது.
தமிழின் தூய்மையான வடிவம் அழிவின் பிடியில் இருப்பது வருந்த தக்க விஷயம் மட்டும் அல்ல ,வெட்கப்பட வேண்டிய விஷயம்.
ஈழப் போராட்டமும் அறப்போராட்டத்தில் தான் ஆரம்பித்தது என்பதை நம்ப முடிகிறதா ? செல்வநாயகம் ,அமிர்தலிங்கம் என்று பலர் ஆரம்பித்து குட்டிமணி,திலீபன் ,பிரபாகரன்,என்று பலர் போராடிய போராடிக்கொண்டிருக்கும் அந்த வரலாறு நெஞ்சை உலுக்கும் வரலாறு.

மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் எழுத்துக்களை படித்து கொண்டிருக்கிறேன்.என் நண்பன் சூரஜ் சொல்லி தான் படிக்க ஆரம்பித்தேன்.மருத்துவமனையில் இருக்கும் பொழுது என்னிடம் இருந்த இளம் பருவத்து காதலி என்ற புத்தகத்தில் ஆரம்பித்தேன்.

குணம் ஆகி கொண்டிருந்த பொழுது என் நண்பனை சில புத்தகங்கள் வாங்கி வர சொன்னேன்.மதில்கள் என்ற புத்தகம் அடுத்தது.உண்மையில் சொன்னால் உணர்வுகள் எவ்வளவு விதமாக வெளிப்படலாம் என்பதற்கு அவரது எழுத்துக்கள் சான்று.

நான் வேண்டி கொள்வதெல்லாம் அவரது எழுத்துக்களை கண்டிப்பாக நண்பர்கள் படிக்க வேண்டும்.நான் கூறிய இரண்டு புத்தகங்களும் காதலையும் அதை சார்ந்த உணர்வை பற்றியது.அதிகம் இல்லை நூறு பக்கம் தான் .ஆனால் இரண்டு புத்தகங்களும் என்னை கொஞ்சம் அசைத்து விட்டது என்று சொல்லவேண்டும்.
புத்தகம் கிடைக்கும் இடம்.
ஹிக்கின் போதம்ஸ் சென்னை.

இந்த வாரம் ஆனந்த விகடன் படித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வாக்கியம் படிக்க வெட்கமாகவும் இருந்தது அதே நேரம் அது எவ்வளவு உண்மையாகவும் பட்டது.இங்கு அது வெறும் அரசியல் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை என்பது நடந்த பல விஷயங்களில் தெரிந்தது.அந்த வாக்கியம் ஈழத் தமிழ் மக்களை பற்றியது.
"கடலுக்கு அடுத்த பக்கத்தில் எட்டுக்கோடித் தமிழ் மக்கள் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கை பார்கிறார்கள்"

புது இடம் , புது வீட்டிற்கு மாறி இருக்கிறேன்,பல புதிய மனிதர்கள்,பல கட்டுபாடுகள் . எல்லாம் சரியாக பழக ஒரு மாதம் எடுத்து ஆகி விட்டது.அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நகர்ந்து வருகிறேன்.கம்ப்யுட்டர் முன் அமர வேண்டிய கட்டாயம் .எழுத இருக்கிறது.இனி தொடர்ந்து எழுதுவேன்.

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ! மிக பெரிய பெருமூச்சு இப்படி தானே எழுத வேண்டும்.

துவண்டு போன மனம்,

களைத்து போன உடல் ,

உடைந்த சில நம்பிக்கைகள்,

மிக்க கொடூரனமான வலிகள்,

அழ கூட முடியாத வயது

தூங்க முடியாத விழிகள் .

நம்பிக்கை சொல்லும் மருந்துகள் ,

ஆனால் கலையாத கனவுகள்

அது தான் இந்த மனிதன் என்று எனக்கு நானே சொல்லிகொள்கிறேன் .


இத்தனை ஆண்டுகள் நான் ஒரு தலைவலிக்கு கூட மருத்துவமனைக்கு ஒதுங்கியது கிடையாது. காய்ச்சலோ அல்ல வேறு பிணியோ எனக்கு கஷ்டப்படுதியாதாக நினைவில் இல்லவே இல்லை .ஆரோக்கியம் எனக்கு இருந்தது .ஒரு சில மாதங்களாக என்னால் தொடர்ந்து எழுத முடியாத நிலைமை இருந்ததற்கு காரணம் இருந்தது.நான் பணியை முடித்து வந்து பத்து மணிக்கு மேல் இரவு இரண்டு மூன்று மணி வரை எல்லாம் தொடர்ந்து எழுதிய மாதங்கள் உண்டு.


என் மனம் எழுத்தில் சுகபட்டு கொண்டிருந்தது ஆனால் என் கழுத்து சுகப்பட வில்லை என்பது சென்ற மாதம் தான் தெரிந்தது.முதுகு வலி கொஞ்சம் பாடாய் படுத்தி வந்தது.வலியை ஒரு மூன்று மாதம் தாங்கி வந்தேன் என்று கூட சொல்லலாம்.ஆனால் எல்லாம் மீறிய செயலாக இரண்டு வாரங்களுக்கு முன் கழுத்தின் ஒரு டிஸ்க் வெளியே வந்து என் வலது கை நரம்புகளை செயல் இழக்க செய்து கொள்ள ஆரம்பித்தன.அப்பொழுது தான் வலி என்ன என்று தெரிய ஆரம்பித்தது.மூன்று நாட்களில் படுத்த படுக்கை ஆகி போன சோகம்.படுக்க கூட முடியாத நிலை.மருத்துவர்களின் உடனடி தீர்வு அறுவை சிகிச்சை .


அந்த நாள் குறிக்க பட்டும் அது வரை வலியை பொறுக்க முடியாமல் தூக்க மாத்திரை யும் வலி நிவாரணியும் ஆறுதல் சொல்ல முடியாமல் இருந்த நிலை.மருத்துவமனையில் வாழ்நாளில் முதல் முறை சேர்க்க பட்டேன்.அந்த வலியிலும் எதாவது தேடி கொண்டிருப்பதை போல் விழித்து இருந்தேன்.இரண்டு நாள் முன்னதாகவே அறுவை சிகிச்சை ,அறிந்தவர்கள் படை சூழ பராமரிக்க பட்டேன்.இதில் விஷயம் என்ன வென்றால் கழுத்தின் நறும்புகள் உடலின் அத்தனை பகுதியையும் செயல் இழக்க செய்ய கூடிய திறன் கொண்டது .அதனால் எல்லோரும் பயந்தார்கள் ,எனக்கு அன்றைய பொழுதில் அந்த நரக வலியில் இருந்து வெளியே வரவேண்டும்.


Neuro Surgeon நம்பிக்கை கொடுத்தார் என்று சொல்லவேண்டும்.எல்லாம் முடிந்தது. மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை.அடுத்த நிமிடம் என் வலி இல்லை. நான் குணம் பெற்று கொண்டிருந்தேன்.வேறு சில வந்து சேர்ந்தன . ஆனால் அந்த சிகிச்சையால் பல பல கட்டுபாடுகள் பல எச்சரிக்கைகள் .பல சோர்வுகள்.இன்று நான் சுகம் தான் ,ஆனால் அந்த நம்பிக்கை இன்று இருக்கிறதா என்று எனக்குள் கேள்வி கேட்டு கொண்டே ஆஸ்பத்திரியில் பத்து நாள் கழித்தேன்.என் தந்தையுடன் பல வருடங்கள் கழித்து நேரம் செலவிட முடிந்தது.என் இயலாமை அவர் அன்பாக வெளிப்பட்ட நாட்கள்.


பல நல்ல இதயங்கள் வந்து ஆறுதல் தந்தன.சொற்ப நாட்களில் நான் துவண்டு போய் விட்டேன்.அந்த உற்சாகம் குறைந்து போனது என்று சொல்லலாம்.நான் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற வார்த்தை என்னை பாடாய் படுத்தியது.அதற்கு காரணம் இருந்தது.கழுத்தில் காலர் ,இடுப்பில் தையல் ,கழுத்தில் தையல் எனக்கே என்னை சுமக்க கடினமாக இருந்தது.உலகம் முழுவதும் எதோ வேளையில் இருக்கும் பொழுது நான் மட்டும் இங்கு படுக்கையில்?


புத்தகங்கள், புத்தகங்கள்!!! படிக்க ஆரம்பித்தேன்.பத்து நாட்கள் தந்தையுடன் விவாதித்து கொண்டிருந்தேன்.மீண்டும் தேடல் போல் இருந்தது.ஆனால் படுத்த நிலையில்.


சென்ற வியாழன் வெளியே வந்து உலகை பார்க்கும் பொழுது கஷ்டமாக இருந்தது.கண்கள் கூசியது.நேராக திருநெல்வேலி பயணம்.இரண்டு வாரம் ஓய்வு.இந்த ஓய்வு காலங்கள் பல நேரத்தை தந்து தந்து இருக்கின்றன.அது தன் இந்த மீண்ட குறிப்புகள்.


தொடரும்


மீண்டும் பழைய வேகத்தில் எழுத முடியாவிட்டாலும் ,குறிப்பு எடுத்து கொண்டிருக்கிறேன்.பின்னாளில் எழுத.

இந்த பாடல் மிகவும் நியாயமாக படுகிறது.மனதை வாசித்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.மனதை வருடுகிறது.

http://www.youtube.com/watch?v=ubtER-ECMwg&feature=related

So close, no matter how far

Couldn't be much more from the heart

Forever trusting who we are

No, nothing else matters

ஒரு தொடர்பற்ற தொலைவில் இருப்பது போல் உணர்கிறேன்,யாரையும் காணாமல் எதுவும் பேசி கொள்ளாமல் மனதுக்குள் எதையும் போட்டு அசை போட்டு கொள்ளாமல் இருப்பது போல் வாழ்ந்து எனக்கு பழக்கம் இல்லை தான்.ஆனால் அது தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை என் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.நன்றாக செல்லும் எல்லாம் ஒரு வகையில் முடிய வேண்டும் என்பது ஒரு விதத்தில் உண்மை தான்.

தனிமை முடிந்தது என்று சொல்லலாம் .அதற்கு காரணம் அடுக்கி கொண்டும் போகலாம்.ஆனால் நான் பதிவுகள் கூட போட முடியாமல் திணறி இருக்கிறேன்.நேரம் இல்லை என்று சொல்ல முடியாது .ஆனால் ஒரு வித உணர்வு என்னை தின்று கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.எதை பற்றி எழுதலாம் என்ற பசி என்னை தேட வைத்து கொண்டிருந்தது இவ்வளவு நாளும். உண்மை என்னவென்றால் நான் செல்லும் இடங்களில் எல்லாம் கதையை தேடி இருக்கிறேன்.இன்று ஏன் என்னால் முடியவில்லை ?

ஒரு வித உணர்வு என்று சொல்வது ,இயலாமை என்று கூட சொல்லலாம்.உருப்படியாக செய்ய முடியவில்லை என்ற எண்ணம் இல்லை.அதற்கு அவசியமும் இல்லை.ஏன் என்றால் நான் உருபடியாக எதுவும் செய்யவில்லை என்று எனக்கு தீர்மானம் ஆகி போன ஒரு விஷயம்.இதில் தோன்றும் இயலாமை என் தேக்க நிலையை பற்றி சொல்கிறேன்.

என் கனவுகளை நான் துரத்த தவறிவிட்டேனா என்று தெரியவில்லை.ஆனால் ஒன்று தெளிவாக தெரிகிறது.நான் இன்று செய்து கொண்டிருக்கும் வேலை எனக்கு உரித்தானது இல்லை .வேறு வகையில் சொல்லவேண்டும் என்றால் நான் இதை செய்ய வந்தவன் இல்லை.என் களம் வேறு என்று தெரிகிறது.ஆனால் என் இடர்களும் ,என் தயக்கங்களும் நியாயமாக தோன்றுவதால் என்னால் அதை விட்டு மீண்டு வரவும் முடியவில்லை.கட்டாயங்களை மிதித்து கனவுகளை மதிக்கும் பக்குவமோ அல்ல தைரியம் எனக்கு இன்னும் வரவில்லை என்று தோன்றுகிறது.அதனாலையே என்னால் புத்தகம் வசிக்க முடியவில்லை,அழகான பெண் என்னிடம் பேசி கொண்டிருக்கும் பொழுது என் எண்ணம் எதையோ யோசித்து கொண்டிருக்கிறது . " கார்த்திக் நீ எதையோ யோசிச்சிட்டு இருக்க ? " என்ற வார்த்தை நான் தினமும் கேட்கும் ஒரு விஷயமாக ஆகி விட்டது.

எதை யோசிக்கிறேன் என்றும் தெரியவில்லை,கருமம் ஆனால் பாடாய் படுத்துகிறது என்று தான் சொல்லவேண்டும்.உத்வேகம் குறைந்து காணப்படுகிறேன்.நிலை இல்லாமல் என்று சத்தியமாக சொல்ல மாட்டேன் .சோகமாக இல்லை .எல்லாம் சாதரணமாக தான் இருக்கிறது ஆனால் ஒரு வித தேக்க நிலை எல்லாவற்றிலும் தோன்றுகிறது.சோம்பல் கொஞ்சம் தொனிக்கிறது.

ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள நேரம் பிடிக்கிறது.நான் ஏன் இப்படி ஆனேன் அல்ல நான் இப்படி தானா ? என் குட்டு வெளி பட்டு விட்டதா தெரியவில்லை.

கடவுளையும் மனிதனையும் ஒரு சேர பார்க்கும் வழக்கத்தில் இருந்து நான் மாறுபட வேண்டும் என்று நினைக்கிறேன்.கடவுள் என்ற சொல்லை நான் பயன்படுத்தும் ஒவ்வொரு தருணத்திலும் என் மனதில் தோன்றும் பயத்தை விட்டு ஒழிந்து ஒரு வித அமைதி பிறக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்.கடவுள் எந்த மதத்தில் வேண்டும் ஆனாலும் இருக்கட்டும் ஆனால் கடவுளை வணங்குவது மனிதன் தானே என்ற கொள்கையில் வழிபடுபவன் நான்.கடவுளை நான் ஒரு நம்பிக்கையாக பார்ப்பவன்.இதை ஒரு அழ்ந்த சிந்தனையாக கொள்ளாமல் ஒரு சாதரண விஷயமாக எண்ணி தான் செய்கிறேன்.

மன்னிக்க வேண்டும் இந்த கடவுள் என்ற சிந்தனையை என் மனதில் இப்பொழுது கொண்டு வந்ததற்கு என் சொந்தகாரர்களை காரணம் சொல்லவேண்டும்.பெரிய அளவில் வாழ்ந்து இன்று ஒரு வித பிணைப்பு இல்லாமல் துவண்டு கொண்டிருக்கும் ஒரு குடும்பம் என்று தான் இன்று பார்க்கும் பொழுது தோன்றுகிறது.என்னவெல்லாமோ சேர்ந்து கொண்டு ஆட்டி படைக்கும் ஒருவித பொருளில் திளைத்து கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.காலம் எங்கோ செல்கிறது என்ற நினைப்பு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது அந்த குடும்பம் என்ற வட்டம்.

ஒரு நாள் விழித்தால் அடுத்த நாள் வேலை இருக்குமா என்ற நினைப்பில் இங்கு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது அருள் வாக்கும், அருள் ஆட்டமும் மனிதனின் கடவுள் நம்பிக்கையை சிதைத்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.திடீர் என்று எழுந்து இந்த ஊர் தான் உனக்கு பூர்வீகம் இன்று முதல் இது தான் உனக்கு கடவுள் என்ற சொற்கள் எனக்கு உடன்பாடு இல்லை.என்னால் இதை எதிர்த்து போய் நிற்கவும் முடியவில்லை.இதில் கட்டுப்பட்டு போகவும் முடியவில்லை.இதனால் விலகி நின்று என்ன நடக்கிறது என்று அயல் பார்வையும் வீசவும் முடியவில்லை.
கடவுள் என்ற நம்பிக்கை என்ன என்று ஆராய்ச்சி செய்தவன் அல்ல நான்.கடவுளை நான் எந்த ரூபத்தில் இருந்தாலும் வணங்கும் மனிதனும் அல்ல.மூட நம்பிக்கைகள் எல்லாம் இந்த நம்பிக்கையில் எப்படி எல்லாம் ஊறி போய் இருக்கிறது என்பதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.ஒவ்வொரு நாள் புதிது புதிதாக கதை கேட்க சொந்தக்காரன் என்பதை தாண்டி எரிச்சல் வருகிறது.
எத்தனையோ நாள் நான் கடவுளே என்று அழைத்திருக்கிறேன்.அன்று நான் எந்த கடவுளை அழைத்தேன் என்று நினைவை புரட்டினால் சத்தியமாக நினைவில் இல்லை.எனில் அன்று நான் முருகனையோ அல்ல அல்லாவையோ யாரை வேண்டும் என்று கொண்டேன் என்று தெரியாது.ஆனால் ஒரு நல்ல ஆன்மாவிடம் நான் முறை இட்டேன்.அந்த ஆன்மாவை நான் கடவுள் என்று மதிக்கிறேன்.வணங்குகிறேன்.
நல்ல மனிதம் ,நல்ல ஆன்மா .நல்ல ஆன்மா மஹாத்மா இது தான் என் வழிபாடு,என் கடவுள் இதில் முரண்பட நான் விரும்பவில்லை.நான் இந்த மூன்று வருடங்களாக ஒரு வித நம்பிக்கையில் ஆன்மாவிடம் வேண்டுகிறேன்.விரதங்களும் ,பழக்கங்களும் நம்மை நாமே ஒரு வித சுய பரிசோதனைக்கு ஆட்படுத்தி கொள்ளும் ஒரு நல்ல பழக்கம்.அதை தான் உண்மையான வழிபாடும் சொல்லித்தந்தது.இன்று இருக்கும் கட்டுபாடுகளும் சில வழிமுறைகளும் எனக்கு பயமுறுத்துகிறது.
உண்மை பற்றி அறியாமல் பேசி இருக்கலாம் அல்ல தெரிந்தே கூட இப்படி எழுதி இருக்கலாம்.ஆனால் எனக்கு தேவை இன்று ஒரு நல்ல ஆன்மா அது எனக்கு தோன்றினாலும் அது கடவுள் தான்.அன்பு என்ற வார்த்தைக்குள் அடங்கும் ஒவ்வொரு விஷமும் அதன் போதனைகள் தான்.

இந்த விழிப்பு கொஞ்சம் கனமாக இருக்கிறது ,காரணங்கள் தெரியவில்லை.ஆனால் தெளிவாக இருக்கிறது. பல விடைகள் தேட வேண்டும் என்ற நினைப்பு இல்லாமல் பல நாள் தேடி துரத்தி கொண்டிருக்கும் கேள்விகள் எல்லாம் எங்கோ தூரத்தில் நின்று முகம் தெரியாமல் முழித்து கொண்டு இருப்பது போல் தெரிகிறது. கனமாக இருந்தால் தெளிவாக இருக்க கூடாது என்று பொருள் இல்லையே .ஆனால் என்னால் என் எண்ணங்களை ஒரு சேர கொண்டு வர முடியவில்லை.நேரம் எங்கோ சென்று இருக்கிறது என்று தெரிகிறது ஆனால் எங்கே என்று தெரியவில்லை. இதோ நான் முழித்து விட்டேன் .

இன்னும் ஒரு காலை என்று நினைக்க முடியாமல் அது என்னை வாட்டி எடுக்கிறது அதற்கு என்னிடம் எந்த காரணமும் தேட முடியாத நிலையில் காற்று வீசி கொண்டிருக்கிறது..இது என்ன விதமான காலை என்று எனக்கு பரிச்சயம் இல்லை.அதை பார்க்க கூட முடியாமல் நான் சோம்பலாக தெரிகிறேன் ,என்னை பார்க்க கூட விருப்பம் இல்லாமல் காலை வேளை அழகாய் தோன்றுகிறதாம். காலையின் அழகை நான் அதிகம் ருசித்தது இல்லை. ஆனால் சில நேரத்தில் அது உண்மை என்று தெரிகிறது.


காலை எழுந்து குளித்துவிட்டு நான் கடவுள் முன் நிற்பது ஒரு வழக்கமான செயல் அல்ல ! சில நாட்கள் அப்படி நிகழும் .அது தான் அன்றும் நடந்தது .நான் எழுந்து கிளம்பிவிட்டேன் .தெளிவாக தெரிகிற வானம் என்னை எந்த விதத்திலும் யோசிக்க வைக்க வில்லை.அலுவலகத்திற்கு இன்னும் அரை மணி நேரம் பறக்க வேண்டி இருக்கிறது.காலை கொஞ்சம் சீகிரமாக கிளம்பிவிட்டோமா என்று நினைக்கிறேன்.

ஒருவிதமாக எல்லாம் சாந்தமாக தெரிகிறது.என் வீட்டை நான் தான் முதலில் திறக்கிறேன்.வெளியே இருந்த நாழிதலை எடுத்து உள்ளே வீசுகிறேன்.காலை உணவருந்தி பல காலம் ஆனது போல் நினைவு.எல்லோரும் வீட்டின் உள் அடைபட்டு இருக்கிறார்களா? .சிலர் மட்டும் வெளியே வருகிறார்கள்.

இதோ

வானம் தெளிவாக இருப்பது அந்த ரோடுகளில் தெரிகிறது .ஆனால் எனக்கு ஒன்றும் பெரிய அளவில் அதில் ஆர்வம் இல்லை.பெண்கள் எல்லாம் மலர்ச்சியாக தெரிகிறார்கள்.ஆண்கள் எல்லாம் வேகமாக தெரிகிறார்கள்.அதற்கு காரணங்கள் தேட நான் முனையவில்லை.யாரோ அழைத்து போல் சிலர் திரும்பி பார்த்து கொண்டு செல்கிறார்கள்.இவர்கள் எல்லோரையும் சுற்றி பார்த்து கொண்டே நான் செல்கிறேன்.என் வாகனத்தை பார்த்து கொண்டே செல்லும் ஒரு சில பள்ளி சிறுவர்கள்.

சில பல சிக்னல் கடந்து சென்று கொண்டிருக்கிறேன்.என்னை துரத்தும் ஒரு ஷேர் ஆட்டோவை நான் வழி விட்டு செல்ல சொல்கிறேன்.வழி எங்கும் வாகனங்கள் நேரம் எடுத்து படை எடுத்து கொண்டிருந்தன.எனக்கு நேரம் ஆகி கொண்டிருந்தது.

இந்த சிக்னலில் தப்பித்தால் நான் சீக்கிரம் போய் சேர்ந்து விடலாம் என்று எனக்கு தெரியும்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக நேரம் ஆகி கொண்டிருக்கிறது.என் கண்ணாடி நனைந்து கொண்டிருக்கிறது.இதோ அந்த நபர் என்னை பார்க்க தன் ஹெல்மட்டை கழட்டுகிறார்.அவர் ஹெல்மட் நனைந்து இருக்கிறது.ஏன் என்று மேலே கண்ணை சுழட்டுவதற்குள் இதோ நாங்கள் எல்லோரும் நனைகிறோம்.காலம் நேரம் இல்லாமல் வரும் ஒரு விஷயத்தில் இந்த மழை எப்படி எல்லாம் முன்னே நிற்கிறது.

மழை சென்னையின் விருந்தாளி,வந்தால் வீட்டை அலங்கோல படுத்தும் ஒரு விருந்தாளி,விருப்பம் இல்லாமல் வரும் ஒரு மனிதன்.பலருக்கு கொண்டாட்டம் ,என்னை போல் வீட்டில் இருந்து அலுவலகம் செல்பவர்களுக்கு கொண்டாட்டம் இல்லாமல் ஒரு வித ஜாக்கிரதை உணர்வுடன் ரசிக்க படும் ஒரு விஷயம்.நனையாமல் அலுவலகம் செல்ல வேண்டும்,சினிமா செல்லவேண்டும்,ரயிலை பிடிக்க வேண்டும்.எல்லாம் மழை இருந்தால் நடக்க சாத்தியம் ஏது?

இதோ இந்த சிக்னலில் நகர கூட முடியாமல் நடுவில் மாடி கொண்டிருக்கிறேன்.சிக்னல் விளக்கு மூன்று நிமிடத்திற்கு ஓடி கொண்டிருக்கிறது.பக்கவாட்டில் உள்ள ரோட்டில் மக்கள் தெறிக்க சிக்னலை தாண்டி விரைகிறார்கள்.வேடிக்கை என்னவென்றால் எல்லோரும் காரில் செல்கிறார்கள்.பைக்கில் உள்ளவர்கள் மெதுவாக செல்கிறார்கள்.பாதுகாப்பு கருதி கூட இருக்கலாம்.ஆனாலும் எல்லாம் நடக்கிறது மணி பத்தை தாண்டி கொண்டிருக்கிறது.எனக்கு வேலை இருக்கிறது.

மழை என்னிடம் எதோ ஒருவித உணர்வுடன் மேலிடுவது என்னால் உணரமுடிகிறது.என்னை கட்டுகோப்பில் சிறை இட்ட சந்தோசம் போல் இருந்தது.என் அலங்காரங்கள் எல்லாம் கரைக்க பட்டுவிட்டன.எதோ நான் கரைந்து போனாலும் என்னுடை ஆடைகள் எடை கூடியது போல் தோன்றுகிறது.நனைந்த பொழுது எதற்கு நாணம் என்ற வரிகள் நினைவில் வருகிறது.வெள்ளை வெளேர் சட்டை என்ன நிலைக்கு ஆளாக போகிறது என்ற கவலை தொற்றி கொள்கிறது.என் செல்போனை எடுத்து என் பைக் பாக்கெட் இல் வைக்கிறேன்.என் பர்ஸ் பத்திரமாக உள்ளே வைக்க படுகிறது.என்னவெல்லாமோ நனையாமல் ஒளிக்க படுகின்றது.என் பையை முன்னே வைத்து என் சட்டையின் முன் பாகம் நனையாமல் இருக்க ஏதோ செய்கிறேன்.

எத்தனையோ முறை மழைக்கு பயந்து ஓடி ஒளிந்து இருக்கிறேன்.இன்று ஓடவும் முடியவில்லை,நகரவும் முடியவில்லை.இப்படி அப்படி முனைகிறேன் முடியவில்லை.இந்தியாவின் வளர்ச்சிக்கு அடையாளமாக ஒரு அயல்நாட்டு கார் கருப்பு நிறத்தில் நின்று கொண்டிருக்கிறது என்னை நகர விடாமல் !

எதை ரசிப்பது ,நனைந்து விட்டேன்,முற்றிலும் அதனையும் நனைந்து கொண்டிருக்கிறது.என் பட்டணதனமும் ,நான் ஒரு போலி மேல் தட்டு இளைஞன் என்ற நினைப்பும் நனைந்து கரைந்து கொண்டிருக்கிறது.என் அந்த பொழுதைய ஆடை ,வேலை பற்றிய கவலைகள் எல்லாம் கரைந்து இதோ என்னை அறியாமல் நான் ரசித்து கொண்டிருக்கிறேன்.

இந்த மழை ஒரு எதிர்பார்க்காத ஒரு மழை ,இது மழை காலமும் அல்ல ,நான் ரசிக்க வேண்டும் என்று பெய்கிறதா.போடா முட்டாளே உன்னை விட நான் பலமானவன் என்ற சப்தத்தில் என்னை நனைத்து விட்டது.நானும் ஒன்றி போகிறேன்.

சிக்னல் விழுகிறது.நகர மனம் வரவில்லை.மழை என் உஷ்ணத்தை குறைத்து விட்டது.எரியும் ஒரு போலி தனத்தை குளிர்வித்து விட்டது.ஆச்சரியம் நான் நனைய விரும்புகிறேன்.இந்த பாலத்தின் அடியில் செல்கிறேன்.மேலே மழை ராக் இசை போல் சப்தம் கூட்டி பெய்து கொண்டிருப்பது கேட்கிறது.அடுத்த விநாடி பாலத்தை தாண்டி வெளியே வருகிறேன்.மழையில் ஒன்றுகிறேன்.

நண்பன் ஆகி விட்டான் மழை.என் கண்ணாடி நனைந்து வழிகிறது.எனக்கு தெளிவாக தெரிய என் கண்ணாடியை துடைத்து கொள்கிறேன்.அலுவலகம் செல்ல மனம் வரவில்லை.திரும்பாமல் நேராக செல்கிறேன்.பெட்ரோல் பங்கில் கூட்டம் கூடமாக மக்கள் என்னை பைத்தியம் என்று நினைத்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்,நான் அசரவில்லை .காரணம் தெரியாமல் எனக்கு மௌனராகம் படத்தில் வரும் ரேவதி நினைவில் வருகிறார்.மழையின் ஆனந்தத்தை ரசிக்கிறேன்.மழையின் வேகத்தில் பயணிக்கிறேன்.மழையின் சமத்துவத்தை ஆர்பரிக்கிறேன்.பயணித்து எங்கோ வந்து இருக்கிறேன்.அவனும் நானும் மாறி மாறி தொடர்ந்து கொள்கிறோம்.கூட்டம் இல்ல்லாமல் சாலைகள் மிதக்கின்றன.

மழை நீர் தெறித்து சாலையில் விழும் பொழுது நட்சத்திர வடிவில் உருபெற்று மறைகிறது.நட்சத்திரத்தை தான் கொண்டு வருகிறதோ மழை? ஒன்று இரண்டு மரங்கள் " வருக வருக " என்ற சப்தம் கூட்டுவது போல் அதன் கீழே செல்லும் பொழுது பன்னீர் தெளிக்கும் ஒரு உணர்வு.

திரும்பி ஒரு சிக்னலில் நிற்கிறேன்.நண்பன் நேரம் ஆகிவிட்டது போல் குறைகிறேன்.சிக்னலை தாண்டுகிறேன்.காணவில்லை.கூட்டம் திடீர் என்று கூடுகிறது.மணி பதினொன்றை நெருங்கி கொண்டது.அலுவலகம் செல்லலாம் என்று திரும்பி வருகிறேன்.

அலுவலகம் வந்து அடைந்து .பைக்கை நிறுத்தி என் வெள்ளை சட்டையை பார்க்கிறேன் ,சொல்ல முடியாத ஒரு நிறத்தில் இருக்கிறது.

" என்னடா நனைஞ்சு போய்டியா ! நாங்க தப்பிச்சிட்டோம் ,என்னைக்கு முழுசும் உனக்கு கஷ்டம் தான் ,சட்டை சூப்பர் மாமு "

போலித்தனம் மீண்டும் தொற்றிகொண்டது.சட்டையை சுத்தம் செல்ல கிளம்புகிறேன்.

என் வெள்ளை சட்டையை பார்க்கிறேன்

சில நேரம் மனிதர்கள் தராத சில சுகம் சில பொருட்கள் தரும்.நான் அடிக்கடி என் தம்பியிடம் சொல்லும் ஒரு விஷயம் " உனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்தா போய் எதாவது ஷாப்பிங் பண்ணு " என்று. நான் கல்லூரி சென்ற நாள் முதல் எனக்குள் அந்த பழக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்து வந்தது.இன்று வரை அது குறைய வில்லை.


வெளியில் சென்று எதாவது நமக்கு பிடித்த ஆடையோ அல்ல எதாவது ஒரு இசை தட்டோ வாங்கினால் உண்மையில் மனம் கொஞ்சம் இளசாக ஆகும் என்பது நான் இந்த பத்து வருடத்தில் கண்டு கொண்டது.சில வருடங்களாக நான் புத்தகமும் அதிகம் வாங்கி வருகிறேன்.அதனையும் மனிதர்களின் துணையை விட அதிக அளவில் சந்தோசம் தருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.


அதில் செலவு இருக்கிறது என்பது உண்மை தான் ஆனால் அதில் ஒரு விதத்தில் நம் மனதை ரசிக்க உடன்படுத்துகிறோம் என்பது உண்மை.இந்த மாதம் எல்லா கடைகளும் தள்ளுபடி விற்பனை விளம்பரம் போட்டிருப்பது கொஞ்சம் அதிகம் செலவு வைக்கும் காரியம் தான்.இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பிராண்ட் வாங்கி முடித்த அடுத்த நாளே நமக்கு பிடித்த அடுத்த பிராண்ட் தள்ளுபடி விற்பனை ஆரம்பித்து இருக்கும்.இதை தவிர்க்க முடியாது.


சில நேரங்கள் நமக்கு பிடித்த ஆடையோ அல்ல எந்த பொருளையோ அணியும் சுகம் வருகிறது அல்லவா .அது ஏன் ? என்று யோசித்து பார்த்து உண்டா ? அதற்கு காரணம் இது தான்.நமக்கு பிடித்தவற்றை செய்யும் பொழுது நமக்கு சந்தோஷம் நேருகிறது.அது பொருட்களிலும் தான் .


இந்த ஒரு மாதத்தில் நான் வாங்கிய சில பொருட்கள் பாசில்(Fossil) கடிகாரம் ,IVth generation IPOD ,நண்பன் அசலம் வாங்கி வந்த போஸ் (Bose Headphone)மற்றும் சென்னை புத்தக கண்காட்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் .

அனைவருக்கும் சொல்லி கொள்வது என்னவென்றால் ,என்னுடைய லேப்டாப் கொஞ்சம் பழுதடைந்து அதை சரி செய்ய தாமதம் ஆனதால் பதிவுகள் இட முடியாமல் போனது.நாளை முதல் பதிவுகள் ஒழுங்காக இடப்படும்.


எத்தனை பேருக்கு அரட்டை அடிக்கவோ அல்ல ஒரு மாலை பொழுதை அமைதியாக கழிக்க காபி ஷாப் போதும் பழக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை.இன்று நான் பார்த்து விட்டேன் ஒரு பெண்ணும் ஆணும் சந்திக்க ஒரு இடம் என்று இதை சொல்கிறார்கள்.உண்மையில் நீங்கள் காபி ஷாப்பில் பல தரப்பட்ட மக்களை அவர்கள் வேலைகளை தங்கள் உலகத்தில் செய்ய முடியாமல் இங்கு செய்து கொண்டிருப்பதை பார்க்கலாம்



நுங்கம்பாக்கம் பாரிஸ்டா சென்றால் அங்கே இயக்குனர் கதிரையும்,இசை அமைப்பாளர் ரகுமான்,ஹரிஸ் ஜெயராஜ் ,நடிகர் ரகுமான்,பரத்,பல எழுத்தாளர்களை பார்க்கலாம்.பல ஓவியர்களை சந்திக்கலாம்.அவர்கள் எல்லாம் அவரவர் சௌகரியத்துக்கு வந்து செல்வார்கள்.முக்கியமான விஷயம் அவர்களை யாரும் அங்கு ஒரு பிரபலமாக பார்க்க மாட்டர்கள் என்றதால் அவர்கள் அங்கு வந்து செல்வார்கள்.





சென்னையில் காபி ஷாப் கலாச்சாரம் என்பது மிக பழமை வாய்ந்தது என்பது எனக்கு " என் பெயர் ராமசேஷன் " புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் பொழுது தெரிந்தது.ஆச்சரியமாகவும் இருந்தது .எழுபதுகளில் காபி குடிக்க செல்லாமல் பேசுவதற்க்காக காபி குடிப்பதை நம் மக்கள் வழக்கத்தில் வைத்து இருந்தார்கள் என்பது ஒரு ஆச்சர்யம்.தமிழ் நாடு Conservative என்ற கூற்றில் இது அடங்காது என்று எனக்கு தெரியும்.



இந்த தலைப்பை பற்றி எழுதவேண்டும் என்று நினைக்கும் பொழுது சில பல எண்ணங்களை சிதற விட்டு கொண்டு தான் எழுதுகிறேன் என்று சொல்லவேண்டும்.காபி குடிக்க அறுபது ரூபாய் கொடுக்க வேண்டுமா என்று நினைத்த காலங்கள் உண்டு.ஆனந்த விகடனில் முதன் முதலில் காபி டே பற்றி ஒரு கட்டுரை வந்த பொழுது நான் கல்லூரியில் அதை படித்தேன் என்று நினைக்கிறேன்.பிறகு நாளடைவில் பல மாற்றங்களை காபி ஷாப் கள் பெற்று இருந்த பொழுது நான் என் கல்லூரி படிப்பை முடித்து கொண்டிருந்தேன்.



சென்னைக்கு நான் வந்து சேர்ந்த பொழுது அதிகளவில் காபி ஷாப்கள் இருந்ததாக எனக்கு நினைவில் இல்லை.பீஜா கடைகள் அதிகம் முளைத்து கொண்டிருந்தன .இன்று திரும்பும் இடங்கள் எல்லாம் காபி ஷாப்புகள்.நான் சொல்ல வருவதை விட்டு விட்டு எங்கோ சென்று கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.



தனிமை வேளைகளிலும் சரி நட்பு வட்டாரத்திலும் சரி எதாவது லயித்து போய் இருக்கும் பொழுதும் சரி எனக்கு தோன்றும் ஒரு இடம் இந்த காபி ஷாப் கள்.என் நண்பன் ஒருவன் இதை மேற்கத்திய கலாச்சாரத்தின் மோகம் என்று சொல்லுவான்.நான் ஒத்துகொள்கிறேன்.ஆனால் இன்று இந்த இடங்களில் கிடைக்கும் அமைதியும் அதன் ஆழமும் நகர வாழ்கையில் எங்கும் கிடைப்பது இல்லை என்பது என் கருத்து.



மின்னலே படத்தில் ரீமா சென்னை மாதவன் ஒரு பூங்காவிற்கு அழைத்து செல்லும் இடம் சிலருக்கு நினைவில் இருக்கலாம்.அந்த இடம் சென்னையில் இருக்குமா என்று சிலர் சந்தேகம் கூட இல்லாமல் அதை ஒதுக்கி தள்ளி இருக்கலாம்.உண்மை அந்த இடம் போன்று ஒரு இடம் சென்னையில் இருக்கிறது.அது ஒரு காபி ஷாப் என்று சொன்னால் நம்புவார்களா ? நானும் என் நண்பர் பரத் அவர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து காபி ஷாப் என்று இருந்தோம்.



அந்த அனுபவம் பற்றி ஒரு சில கருத்துக்கள்.


நீங்கள் யாரையாவது காதலித்து கொண்டிருந்தால் அந்த காதலை சொல்ல ஒரு நேரம் தேடி கொண்டிருந்தால்?


நீங்கள் நினைப்பது சரியா தவறா என்று முடிவெடுக்க முடியாமல் திணறும் பொழுது ?



அமைதியை எப்படி தேடுவுது என்று குழம்பி இருக்கும் பொழுது அமைதி வேண்டும் என்று நினைத்தால்.


மிக மிக முக்கியமாக ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைத்தால்.நல்ல இசை கேட்க வேண்டும் என்று நினைத்தால்?




அமெதிஸ்த் தேடி செல்லவேண்டும்.அது ஒரு காபி ஷாப் என்ற தோற்றத்தை உடைத்து அது ஒரு உலகம் என்று சொல்ல வேண்டும்.பரந்து விரிந்து காணப்படும் அந்த இடத்தில் காபி அருந்துவது என்பது ஒரு சம்பிரதாயம் என்று கொள்ளலாம்.ஆனால் அங்கே இருக்கும் ஓர் நித்திய அமைதியையும் அந்த இயற்கையும் ஒரு முறை உங்களை வேறு உலகத்திற்கு அழைத்து சென்று விடும் என்று சத்தியமாக சொல்லுவேன்.அமைதி என்பதை விட அது ஒரு உண்மை அழகு என்று கூட சொல்லலாம்.




நம்மை மறந்து நம் மனம் எதையோ யோசிப்பதை நாம் மறுக்க முடியாது.நான் ஒரு காலத்தில் காதலித்த பெண்ணை இந்த இடத்திற்கு அழைத்து வந்தது கிடையாது.எந்த பெண்ணையும் இந்த இடத்திற்கு அழைத்து போனது கிடையாது .இது ஒரு பெண்ணுடன் இருப்பதை விட நம் தனிமையை அமைதியாக அலச ஒரு ஆனந்தமான ஒரு இடம்.ஒரு Cafe Lathe வை ஆர்டர் செய்து விட்டு ஒரு பொழுது முழுவதும் அமர்ந்து கொள்ளலாம்.
இந்த இடம் எங்கு இருக்கிறது என்று பலர் என்னிடம் சொன்னது கிடையாது.நானும் இதை பரப்பி பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை.மதி பரத் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இந்த இடம் ஒரு ஆடம்பரம் அல்ல ஒரு ஆனந்தம்.மறுக்க முடியாத ஒரு அமைதி ,ஒரு முறை சென்று வந்தால் நான் சொல்வது உண்மை என்று சொல்வீர்கள்.

பல விஷயங்கள் நமக்கு சினிமாதான் சொல்லிதர வேண்டி இருக்கிறது.நேற்று பாலாவின் நான் கடவுள் பாடல் வெளியீடு நிகழ்ச்சியில் அனைவரின் கண்களை பறித்த ஒரு விஷயம் அஹம் ப்ரஹ்ம ஆஸ்மி என்ற வாக்கியம் .பலர் என்னிடம் இதன் அர்த்தம் என்னவென்று கேட்டு இருந்தார்கள்.நானும் பலரிடம் கேட்டு இருந்தேன்.உண்மையில் இந்த ஒரு வார்த்தையை பற்றி படிக்கும் பொழுது நேர்ந்த உணர்வுகள் மெய் சிலிர்க்க வைத்த அனுபவம் என்றே சொல்ல வேண்டும்.

ஆர்வம் இல்லாமல் நான் மூடி வைத்த ஒரு விஷயம் ஹிந்துத்துவம் .ஹிந்துத்துவத்தை சார்ந்து இருக்கும் வேதங்களையும் கருத்துகளையும் நான் தேடியது இல்லை.எனக்குள் தோன்றிய நம்பிக்கைகளுக்கு என் பிறப்பால் நேர்ந்த மதத்தை கொண்டு நான் சாயம் பூசி கொண்டு நான் ஹிந்து என்று மார் தட்டி கொள்ளவும் விரும்பவில்லை,கூனி குறுகி இருக்கவும் இல்லை.நான் பிறக்கும் பொழுது என் பெற்றோர் ஹிந்துக்கள் அதனால் நான் ஹிந்து என்று இந்த சமுதாயத்தில் ஏற்று கொள்ளப்பட்டேன்.உண்மையில் நான் யார் என்று தேடும் பொழுது நேரும் மதமே ஒருவனின் சொந்தமான அல்லது சூடி கொள்ளும் மதம்.மதம் என்ற ஒரு விஷயம் பின்பற்றுதலின் அடிபடியில்! தேவை படுபவர்களுக்கு இது பொருந்தும்.

அஹம் என்ற வார்த்தைக்கு காஷ்மிரி சைவத்தில் இருந்து வேர்கள் முளைக்கின்றன.அஹம் என்பதன் அர்த்தம் தான் ,உயரிய இருதயம் ,நான் ,என்னுள்ளே என்று பல அர்த்தங்கள் வெளிபடுகின்றன.நேற்று இரவு இதை பற்றி தேடி கொண்டிருக்கும் பொழுது இதில் தோன்றிய ஒரு சில கருத்துக்களை எங்கே பகிர்ந்து கொள்கிறேன்.அஹம் என்ற உணர்தல் கேச்சரி முத்ரா என்ற நிலையை அறிய முற்படும் பொழுது முழுமை கொல்கிறது.

கேச்சரி முத்ரா என்பது தன்னை அறியும் செயலில் அடையும் முக்தி நிலையை போன்றது.அல்லது முழுமையான நிலை என்று கொள்ளல்லாம்.ஆதிசிவன் உலகை படைக்கும் பொழுது படைத்த முதல் விஷயம் ஆன்மாவின் சக்தியான அஹம் என்ற வெளியை தான்.அண்டவெளியும் அஹம் என்ற ஒரு தன்னிலை சகதிக்குள் அடங்க வேண்டும் என்ற கோட்பாட்டின் கீழ் அமைக்க பட்டது தான் இந்த உலகம்.

அஹம் என்ற கொள்கைக்கு சார்ந்து உள்ளது தான் ப்ரித்வி தத்துவம் மற்றும் சதாசிவ தத்துவம்.முந்தையது இந்த பூமியை சார்ந்தது,பின்தையது "நான் தான் அண்டம்" என்ற கொள்கையை கொண்டது .அஹம் என்பதற்கு ஹிந்துவதில் மகா சக்தி என்றும் ,ஆதி என்றும் பல அர்த்தங்கள் உண்டு.

ப்ரஹ்மண் என்பதற்கு பிராமிணன் என்ற சிறிய ஒரு வட்டத்திற்குள் கொண்ட அர்த்தம் அல்ல இந்த வார்த்தை.ப்ரஹ்மண் என்ற வார்த்தைக்கு முடிவில்லா ,மாற்றமில்லா ,அழிவில்லா ,தன்னிலை கொண்ட சக்தி என்ற பொருளை அடக்கி இருக்கும் ஒரு மனிதத்தை தாண்டிய ஒரு மைய கரு என்று பொருள்.முடிவில்லா என்பது அறிவு,தன்னிலை,கட்டுப்பாடுகள் ,சக்திகள் ஆகியவற்றிற்கு முடிவில்லா என்று பொருள்.இந்த கொள்கைகளை அறிந்தவனை நாம் பிராமின் என்று அழைக்கிறோம்.அதனால் அந்த இரண்டு வார்த்தைக்கும் வேறுபட்ட அர்த்தங்கள் உபநிஷத்தில் சொல்லபட்டிருக்கிறது.

இப்பொழுது அஹம்+ப்ரஹமண்+ஆஸ்மி என்ற கருத்துக்களை சேர்க்கும் பொழுது நமக்கு தோன்றும் ஒருமித்த கருத்து நான் கடவுள் ! இந்த ஒரு வார்த்தை தன்னை ஒரு கடவுளாக பிரகடன படுத்தி கொள்ளும் ஒரு சக்தி.ஹிந்து உபநிஷடத்தில் மனிதனை பிரதான கடவுளாகவும் ,புனித ஆன்மாவாகவும் கொள்ள வழக்கங்கள் இருக்கிறது.அம்ருதஸ்ய புத்ரன் என்பதற்கு அர்த்தம் இதுவே .

அஹம் ப்ரஹ்மாஸ்மி என்ற நிலையில் ஒருவன் தன் கட்டுபாடுகளை உடைத்து மனித சக்திகளுக்கு கட்டுகொல்லாமல் ஆசை துறந்து ,முக்தி நிலை பெறுகிறான் என்று அர்த்தம்.இயேசு சிலுவையில் அறைய பட்டதன் காரணம் இது தான் .

ஹிந்து வேதத்தில் சொல்லப்படும் நான்கு மந்திரங்களின் ஒன்று இந்த அஹம் ப்ரஹ்மாஸ்மி.மஹா வாக்கியங்களாக இது அறிய படுகிறது.

ப்ரஜனனம் ப்ரஹ் மண்
ப்ரஹ் மண் என்பது ஆதி சக்தி

அயம் அத்மம் ப்ரஹ்மா
சுயமே ப்ரஹ்மண்
தத் தவம் ஆஸி
நீ அது .அது என்பது உடல் ,பொருள் என்பதை தாண்டி உள்ளார்ந்த ஒரு சக்தியை முக்திநிலையை எடுத்து சொல்வது.
That is what you --Samaveda

அஹம் ப்ரஹ்மாஸ்மி
நான் ப்ரஹ் மண்
I am brahman --Yajur Veda

கீழே கொடுக்க பட்டுள்ள சில வலைபக்கங்களில் நீங்கள் சில தேடல்களை கொள்ளலாம்.
தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும் .

இந்த பகுதிக்கு வந்து வெற்று கையுடன் திரும்பிய என் நண்பர்களுக்கு !

நீண்ட பயணத்திற்கு பிறகு ஒரு நிறுத்தம் தேவை.மூண்ட கனவின் பிறகு ஒரு விழிப்பு தேவை.அழைப்புகளுக்கு ஒரு நாள் திரும்பி தான் ஆக வேண்டும்.இந்த வருடம் ஒரு பயணம் .ஒரு வருடத்தில் எதுவும் மாறாமல் இருந்தது.வாழ்க்கை சக்கரம் சுழலும் விதத்தில் நான் என் பிம்பத்தை கூட வெறுத்து கொண்டிருந்தேன்.இன்பங்களும் ,களிப்பும் போலியாக எனக்குள் தெரிந்து கொண்டிருந்தது.என்னை மீறிய ஒரு வித வயது என்னை ஆக்ரமித்து கொண்டிருந்தது.என்னை ஆர்பரித்து கொண்டிருந்த ஒவ்வொரு காலகட்டங்களும் விடை இல்லாமல் என்னை பார்த்து கொக்கரித்து கொண்டிருந்தது.

இன்று கேட்கலாம் இந்த பகுதியில் இந்த வருடத்தில் எழுதாமல் போன காலங்கள் என்று எடுத்து கொண்டால் இந்த ஒரு மாதம் மட்டுமே .எழுதாமல் போனதற்கு காரணங்கள் இல்லை.ஆனால் மாற்றங்கள் இருக்கின்றன.மாற்றங்கள் நிலையானது இல்லை என்று தெரிந்தே இந்த மாற்றத்தை ஏற்று கொண்டிருக்கிறேன்.என்னை பற்றி படித்து படித்து சலித்து போனவர்களுக்கு இந்த பகுதியில் புதியதாக நான் ஒன்றும் சொல்ல போவதில்லை.

குழப்பவில்லை .இந்த வருடம் மிக மிக தெளிவான ஒரு படிப்பினை எனக்கு.பல விஷயங்கள் எனக்குள் தெளிந்து இருக்கின்றன.சில காயங்கள் ஆறி போகும் என்று தெரிந்து இருக்கிறது.ஒரு முல்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்ற கூற்று உண்மை என்று புரிகிறது.தெரிந்தே ஒரு முள்ளை நான் கையில் எடுத்து இருக்கிறேன்.ரோஜாவை ரசிக்கும் வரை எனக்கு வலி தெரிய போவதில்லை.இந்த வருடம் அதிகமாக யோசித்து இருக்கிறேன்.அதிகமாக தேடி இருக்கிறேன்.தேடல்கள் எனக்கு வடிகாலாக அமைந்து இருந்தது.அதில் இருந்து வழிந்தது எல்லாம் எனக்குள் இருந்த ஒரு வித தேங்கிய வெற்று நிஜங்கள்.


ஒரு சில நாட்கள் என்னால் எழுத தோதாக அமையாமல் போனபோது புலம்பி இருக்கிறேன்.கண்ணீரையும் ,காணலையும் துணையாக கொண்டு நிம்மதியை தொலைத்து கொண்டிருந்தேன்.வித்தியாசமாக செய்கிறேன் என்று நினைத்து கொண்டு ஆதி காலம் முதல் மனிதன் செய்து வந்த அதையே செய்து வந்திருக்கிறேன்.எங்கெல்லாமோ இளைப்பாறி இருக்கிறேன்.எங்கும் தாகம் தீராமல் சுற்றி வந்து இருக்கிறேன்.என்னை சுற்றி இருக்கிறவர்கள் எல்லாம் வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள்.அது தான் அடுத்த கட்டமா என்று கூட ஏற்று கொள்ள மனம் தயங்கி கொண்டிருந்தது.ஆனாலும் அவர்களின் தீர்மானங்கள் மேடை ஏறும் பொழுது நான் உடன் இருந்து வாழ்த்தி வந்து இருந்தேன்.வாழ்த்துக்களில் எத்தனை உண்மை இருந்ததோ அதனை ஏக்கமும் இருந்தது.அந்த ஏக்கங்கள் எல்லாம் என் சிந்தனைகளில் ஊறி கொண்டிருந்தது.என்னால் அந்த தீர்மானங்கள் எடுக்க முடியவில்லை என்று அல்ல ! அந்த தீர்மானங்கள் அவர்களுக்கு கட்டாயமாக படும்பொழுது எனக்கு ஏன் படவில்லை என்று.பல புதிய உறவுகளை அவர்கள் ஒரே நாளில் ஊரறிய உருவாக்கும் பொழுது பரவசம் இருந்தது.ஆனால் என்னால் என்னை அதே போல் ஒரு மேடையில் வைத்து பார்க்க முடியவில்லை.


நான் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு காரியமும் முட்டாள்தனமான ஒரு வித பத்தாம் பசலித்தனமாக இருந்தது.சினிமாவில் வரும் கதாபாத்திரத்தை உருவாக்கி கொண்டு நான் ஏன் அந்த தியாகி வேஷம் போட்டு கொண்டு அலைந்தேன் தெரியவில்லை.ஏன் அந்த வேட்டை நாய் வேஷம் போட்டு கொண்டு வேட்டை ஆடினேன் தெரியவில்லை.கண்கள் பார்த்த எல்லாம் மாயை என்ற கட்டாயமான மன நிலையில் தள்ளப்பட்டு கொண்டிருந்தேன் என்பதை ஒத்து கொள்ளவேண்டும்.உண்மை எதிலும் இல்லை என்பதை முழுமையாக உண்மை என்று கொண்டிருந்தேன்.


எழுதியதும் ,படித்ததும் ஒரு விதத்தில் என்னை பலவாறாக அலசி கொண்டிருந்தது என்று சொல்லவேண்டும்.மாற்றங்கள் ஒரு நாளில் நடக்கலாம் ஒரு யுகத்தில் நடக்கலாம்.பல கருத்துக்கள் எனக்குள் ஒரு வித தேக்க நிலையை மாற்றி ஒரு வித சீரான சிந்தனையை தந்து இருக்கிறது.என் செயல்களுக்கு விளைவுகளை அந்த செயல் செய்யும் முன்னவே எனக்கு தெரிகிறது.இது எவ்வளவு பெரிய மாற்றம்.என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும் என்று நம்புகிறேன்.மிக மிக அற்பமான சிந்தனைகள் அற்பமாக தெரிகிறது.


இவ்வளவையும் சொல்லிவிட்டது இதை சொல்லாமல் போனால் எப்படி ? இன்று கட்டுண்டு இருக்கிறேன்.என்னை என்னால் ரசிக்க முடிகிறது.நேரங்கள் மீதமான பொழுதுகள் போய் நேரங்களை தேடி கொண்டிருக்கிறேன்.நான் கண்காணிக்க படுகிறேன்.ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறேன் .அதிகம் அலட்டி கொள்ளாமல் ,கட்டாயமும் கால கட்டமும் இல்லாமல்
நான் ரசிக்கப் படுகிறேன். எனக்கு புதிய அத்தியாயம் எழுத படுகிறது.யாரோ என் தூக்கத்தை தட்டி எழுப்பி இருக்கிறார்கள்.தூர இருந்தாலும் நெருக்கம் மீண்டும் தெரிகிறது.


முதல் வரியில் சொன்னது போல் ,என் பயணமும், என் தூக்கமும், அழைப்புகளுக்கு திரும்பாமையும் தொடரலாம்.


ஆனால் இப்பொழுதைய நிலவரப்படி


"தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்குநின்செயல் செய்து நிறைவு பெரும் வணம்
துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்பில்லை "

Dec 26, 2008

Merry Christmas

இன்று கிருஸ்துமஸ் .என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நேற்று இரவு அலுவலகத்தில் இருந்து திரும்ப வரும் பொழுது அலங்கார விளக்குகளும் ,பேக்கரி கடைகளும் .ஆலயத்தின் முன் இளைஞர்களும் நாளை கிறிஸ்துமஸ் என்பதை நினைவில் கொடுத்தார்கள்.கிறிஸ்துமஸ் ஒரு மகிழ்ச்சி ,கிறிஸ்துமஸ் ஒரு மதத்தை தாண்டி ஒரு பூரிப்பு என்பது அதை உணர்ந்தவர்களுக்கு தெரியும்.நான் கிறிஸ்துவன் இல்லாவிட்டலும் எனக்குள் சிறு வயது முதலே கிறிஸ்துமஸ் ஒரு வித மகிழ்ச்சி அளித்து வந்தது.அந்நாளில் என் வீட்டை சுற்றி இருந்த நண்பர்கள் வீட்டில் எல்லாம் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கும் பொழுதிருந்தே காகித நட்சத்திரம் வீட்டின் முன் தொங்க விட்டிருப்பார்கள்.

கிறிஸ்துமஸ் அவர்களுக்கு தரும் ஆனந்தம் எனக்கும் தொற்றி கொள்ளும்.நானும் என் தம்பியும் என் தந்தையை பாடாய் படுத்தி நட்சத்திரம் வாங்கி வீட்டின் முன் தொங்க விட்டு அழகு பார்போம்.எங்கள் வீட்டின் அருகில் உள்ள வீட்டில் இருந்து எல்லாம் கேக் செய்வதை முதல் நாள் சென்று ருசி பார்ப்பது ஒரு வழக்கம்.

அடுத்த நாள் காலை நாங்கள் எழும் முன்னவே கேக் எங்கள் வீட்டிற்க்கு வந்து சேர்ந்து விடும்.மதியம் பிரியாணிக்கு அழைப்பு வரும்.சந்தோஷமான உரையாடல்கள் நிகழும்.

எதோ இன்றும் நான் பார்க்கும் அந்த கிறிஸ்துமஸ் பசுமையான நினைவில் இருக்கிறது.கிறிஸ்துமஸ் பண்டிகை என்றும் ஆனந்தத்துடன் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.நானும் எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு "Merry christmas "என்று எஸ் எம் எஸ் அனுப்பி வைத்தேன்.காலை எழுந்து என் நண்பனுடன் வெளியே சென்று வந்து எதாவது கிறிஸ்துமஸ் உணவு சாப்பிடலாம் என்று ஒரு நட்சத்திர ஹோட்டலில் தஞ்சம் புகுந்தேன்.

விலையை பற்றி கவலை கொள்ளாமல் எனக்கு கிறிஸ்துமஸ் உணவை சுவைக்க செல்லலாம் என்று நினைத்த பொழுது ஏமாற்றம் மிஞ்சியது.
" Sorry sir ,we serve on booking "
இரவு இருவருக்காக ஒரு டேபிள் புக் செய்து விட்டு வந்து சேர்ந்தேன்.இப்பொழுதெல்லாம் எனக்கு நேருகிற கிறிஸ்துமஸ் பெரிய கடைகள் போடும் தள்ளுபடி விற்பனைகள் தான்.அந்த சமயத்தில் நடக்கும் Clearance sale ,எனக்கு இந்த வருடம் முடியபோகிறது என்ற எண்ணம் ,புதிய வருடம் தரும் நம்பிக்கைகள் எல்லாம் கண் முன்னே வருவது தவிர்க்க முடியாது ஆகி விடுகிறது,

எல்லோரும் மறக்க நினைக்கும் ஒரு வருடமாக ஆகி விட்டது இந்த 2008.பொருளாதாரம்.சமுதாய சீரழிவு,சட்ட ஒழுங்கு .மத அத்துமீறல்கள் .அரசியல் பூச்சாண்டிகள்,வேலை நீக்கம்,விலைவாசி .எல்லாம் நேர்ந்து விட்டது.தனி மனிதனாக எனக்கு பார்த்தால் என் புதிய வேலை தரும் புதிய கட்டுபாடுகள் புதிய வாழ்வு முறை என்று தான் சொல்ல வேண்டும்.

இரவு நேரம் கிறிஸ்துமஸ் விருந்து நல்லபடியாக ஒரு வித கவித்துவமாக சென்றது என்று தான் சொல்லவேண்டும்.உணவில் இருந்த பிடித்தம் அந்த விலையை பார்த்த உடன் குறைந்து விட்டது.ஒன்றரை மடங்கு அதிகமாக விலை கொடுக்க வேண்டி இருந்தது.

பல நாட்களுக்கு பிறகு சிறுவயது கிறிஸ்துமஸ் நினைவுகள் சில கிறிஸ்துவர்களை பார்க்கும் பொழுது தோன்றியது,
நான் சிறு வயதில் Vaccation bible study (VBS)சென்ற பொழுது படித்து நினைவில் வந்த பைபிள் வரிகள்.
"Praise be to the name of God for ever and ever; wisdom and power are his. He changes times and seasons; he sets up kings and deposes them. He gives wisdom to the wise and knowledge to the discerning. He reveals deep and hidden things; he knows what lies in darkness, and light dwells with him."Daniel 2:20-22.
என்ற நம்பிக்கையில் எனக்கு இந்த நாள் முடிந்தது.அது தானே வாழ்க்கையும்.
Merry Christmas

பாரதி 1919 இல் எழுதிய ஒரு வித்தியாசமான ஒரு பாடல் இன்றைய காலகட்டத்தில் மிக மிக தேவையாக இருக்கிறது.இந்த பாடல் என்றுமே இந்த உலகத்தில் ஒரு தேவையாக மட்டுமே நிலைத்து இருக்கும்.பாரதிக்கு பராசக்தி மீது இருந்த ஒரு நம்பிக்கை மதத்தை தாண்டிய ஒரு நம்பிக்கை.அவர் சுற்றமும் சுழலும் சுகம் பெற வேண்டியது அவளை தான்.மகாசக்தியாக அவர் பார்த்து இருந்த ஒரு நம்பிக்கை அவர் பாடல்களில் ஒரு தரிசனமாக இருந்தது.இருக்கிறது.இந்த பாடல் ஒரு நட்டுப்புறது குறவர் பாடலாக இருப்பது மேலும் வித்தியாசத்தையும் ,அழகையும் கூட்டுகிறது.என் பாரதியார்கவிதைகள் பக்கங்களில் எழுத தேடி கொண்டிருந்த பொழுது இந்த பாடல் மிகவும் ஈர்த்தது.இதற்கு ஒரு ராகம் போட்டு பாடினால் சுகமாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------
குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது ;நல்ல காலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி ,சொல்லடி ,சக்தி மாகாளீ
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு
தரித்திரம் போகுது ;செல்வம் பெருகுது
படிப்பு வளருது ,பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் ,
போவான் ,போவான் ஐயோவென்று போவான் !
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது ;தொழிலாளி வாழ்வான் ;
சாத்திரம் வளருது ;சூத்திரம் தெரியுது ;
யந்திரம் பெருகுது ;தந்திரம் வளருது;
மந்திரமெல்லாம் வளருது ,வளருது ;
சொல்லடி ,சொல்லடி,மலையாள பகவதீ
அந்தரி ;வீரி ,சண்டிகை ,சூலி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது ;
தொப்பை சுருங்குது ;சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது ;
பயந் தொலையுது ,பாவந்தொலையுது
சாத்திரம் வளருது சாதி குறையுது ;
நேத்திரம் திறக்குது ,நியாயம் தெரியுது ;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது ;
வீரம் வருகுது ;மேன்மை கிடைக்குது ;
சொல்லடீ சக்தி மலையாள பகவதி
தர்மம் பெருகுது ;தர்மம் பெருகுது.

நான் சென்னைக்கு திரும்ப வந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது.வந்ததில் இருந்து கடற்கரை பக்கம் நான் செல்லவே இல்லை என்பது நேற்று தான் தெரிந்தது.கடல் அலைகளுக்கு எவ்வளவு வலிமை இருக்கிறது என்பது பார்த்த உடனே தெரிகிறது.நேற்று நான் சென்னையை தாண்டி பல மைல் தூரம் சென்று இருந்தேன்.பல விஷயங்களை பின்னே தள்ளி வைத்து விட்டு பல புதிய அரிதாரத்தை பூசி கொண்டு இந்த வாழ்க்கை எவ்வளவு அழகாய் செல்கிறது என்று தோன்றியது .அழகு என்பது மனதை சார்ந்து இருக்கிறது என்பது புரிகிறது.எண்ணங்கள் அலைகளை போல் எழுந்து அடங்குவதும் அது ஏதோ கரையை தொட்டு கொண்டு மீண்டும் இழுத்து கொண்டு செல்வதும் கடல் அலைகளை பார்த்தால் தான் தெரிகிறது.கடல் அலைகள் சொல்லும் கதைகளுக்கு ஆதாரம் மனிதனின் வாழ்வில் தான் தேட முடியும்.
கடலும் அதன் அலைகளும் அழகானவை என்பதை விட அவை ரகசியமானவை .கடல் ஏன் எப்படி எங்கே என்று எத்தனை கேள்விகள் கேட்டாலும் கடலும் அதன் அலைகளும் தரும் ஒரே பதில் அதன் பிரம்மாண்டம் .முன்னே நின்று பார்க்கும் பொழுது எல்லா கடலும் எல்லா அலைகளும் ஒரே அளவு தான் .

காதல் சொட்டுகிறது,சோகம் வழிகிறது,தென்றல் வீசுகிறது,தனிமை வாட்டுகிறது, கேள்விகள் விடை பெறுகின்றன ,கண்கள் ரசிக்கிறது,மனம் நனைகிறது ,உண்மை தெரிகிறது,பொய்கள் காணாமல் போகிறது, கவிதை பிறக்கிறது,வலிமை புலப்படுகிறது ,நேரம் கழிகிறது .அலைகள் முன்னே அமர்ந்தால் எல்லாம் நடக்கிறது.

என் உடன் அமர்ந்து இருந்த பெண்ணும் என்னை மறந்து கடலை ரசித்து கொண்டிருந்தது எனக்கு நிம்மதியை தந்தது.எங்களுடன் வந்து இருந்த ஒரு ஜோடி எங்கோ ஒரு தொலை தூரத்தில் தங்கள் கால்களை நனைத்து கொண்டிருந்தார்கள். அலைகள் ஓயாமல் இருக்கும் பொழுது மனதில் என்னை அறியாமல் ஒரு கவித்துவம் எழுந்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.சத்தமாக பாட தோன்றியது.திடீர் என்று அந்த பெண் என்னை திரும்ப பார்த்து சிரித்து கொண்டு அவளும் பாட ஆரம்பித்தாள். Nothings gonna change my love for you என்ற பாடல் ஆரம்பித்த பொழுது என் குரல் ஆங்கில பாடல்களுக்கு எதுவாக இருக்காது என்று தெரிந்தும் என் மனம் பாடி கொண்டிருந்தது .Ghar se Nikalthey hi என்ற பாடல் அழகாய் முடிந்தது.கடலோர கவிதைகள் பாடல்கள் அழகாய் பாடி அரங்கேற்றம் நடந்தது.

மனம் மிக மிக இளசாக இருந்தது.என் மீது சாய்ந்து இருந்த பெண் " ஏன் கார்த்திக் ஒரு உண்மைய பார்த்தாயா ? " என்று கேட்டாள் .

கடல் முன்னே நாம் அமரும் பொழுது நமக்கு முன்னே இருக்கும் உலகில் நாம் மட்டும் தான் இருக்கிறோம் .எல்லோரும் நம் பின்னே தான் இருக்கிறார்கள் .நம் உலகம் நம் முன்னே எப்படி விரிந்து இருக்கிறது ! இந்த உலகத்தில் இந்த நொடியில் யாரும் என்னை தவிர இல்லை என்ற எண்ணம் எனக்குள் எழுகிறது !" என்று ஒரு கவிதையை மிக சாதரணமாக சொல்லிவிட்டாள்.

நான் பதில் எதுவும் சொல்லாமல் அவளை ஒரு முறை பார்த்தேன். அணைத்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது ,ஆனால் அதை மீறிய ஒரு சிந்தனை அவள் சொல்லிய வார்த்தைகளால் ஏற்பட்டது.எவ்வளவு ஆழமான சிந்தனைகள் அந்த அழமான கடலில் இருந்து கிளம்பி அவள் மனதில் தோன்றி இருக்கிறது என்று நினைத்து கொண்டு ஒரு புன்னகையில் அவளை ஆமோதித்தேன்.எத்தனை முறை இந்த கடல் அலைகளை நான் பார்த்து இருப்பேன் ஆனால் ஏன் சிந்தனைகள் வேறுபடுகின்றன என்று தோன்றும் .இந்த முறை மிக அமைதியாக எண்ணங்கள் சீராக செல்வது நன்றாக இருந்தது.

கற்பனை உலகம் எதுவும் விரித்து கொள்ளாமல் உண்மையில் நடை பயில்வது புத்துணர்ச்சி தருகிறது.
கடல் அலைகள் -
கவிதைகள் -
பெண்- தனிமை -
வேறு என்ன வேண்டும்
ஒரு மாலை வேளையில் .

என் நண்பன் மதி எழில் தன் ஜிமெயில் நிலை செய்தியில் இதை எழுதி இருந்தான்.எனக்கு இந்த வார்த்தை ஒரு படத்தில் வந்ததால் இதை பற்றி என்னவென்று அர்த்தம் மட்டும் தெரிந்து வைத்து இருந்தேன்..அதை சூட்டியவர் ரோமானிய புலவர் ஹோரஸ் என்ற செய்தி மட்டும் எனக்கு தெரிந்து இருந்தது. ஹோரஸ் மாமன்னர் அகஸ்டஸ் காலத்தில் வாழ்ந்த ஒரு புலவராக அறிய படுகிறார்.இன்று நான் இந்த வார்த்தைகளை பார்த்த உடன் அதை பார்த்தவுடன் அதை பற்றி படிக்கலாம் என்று விக்கியை திறந்து பார்த்த பொழுது கொஞ்சம் படித்து வந்தேன்.

கார்பே தீயும் என்றால் எடு ,பிடுங்கு ,சேகரி என்று அர்த்தம்.ஆனால் அது வழக்கத்திற்கு வரும் பொழுது அதன் அர்த்தம் மகிழ்வாய் இரு ,கொண்டாடு ,திரட்டு.இதற்கு மிக பிரபலமான அர்த்தம் ' Seize the day "என்பதாகும்.
லத்தீன் வார்த்தை மொமண்டோ மோரி Momento Mori என்றாலும் இதன் அர்த்தத்தை சார்ந்தே வரும்.ஆனால் மொமண்டோ மோரி என்ற வார்த்தையில் நிலையான எண்ணமும் ,கடந்த காலத்தின் நடத்தைகளுக்கு சுய ஒப்புதல் மற்றும் தண்டனை பெற்று கொள்ளும் நிலையில் அமையும் ஒரு வார்த்தை."Remember that you are mortal," "Remember you will die,"
ஒரு நாளை உன் வசம் ஆக்கி கொள் என்பது ஒரு உள்ளார்ந்த அர்த்தம்.அதன் கரு அதுவே ! .ஒரு நாளை உன் வசம் ஆக்கி கொள்வது யார் கையில் என்ற விவாதத்திற்கு செல்லாமல் நான் சொல்ல வந்தது இந்த வார்த்தையை சிலரிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒரு முயற்சியில் எழுதி இருக்கிறேன்.

நாளை நீ இல்லை என்றாகி விட்ட நிலையில் நீ இன்றைய பொழுதை கொண்டாடு !!!!

எல்லா பத்திரிக்கைகளும் எல்லா தலைவர்களும் சொல்லும் வார்த்தைகள் நாம் ஒன்று திரண்டு நிற்க வேண்டும்.நாம் ஒன்று பட்டு இதை எதிர்க்க வேண்டும் ,இது ஒரு தேசிய இடர்பாடு, இது அரசியலுக்கு அப்பாற்ப்பட்டது என்பதை தான்.


என்ன செய்ய வேண்டும் நாம் ? மனித சங்கிலி கோர்த்து கொண்டு இந்த சென்னை மழையில் நின்று நமக்கு தெரிந்த விளம்பரத்தை செய்து கொள்ளவேண்டுமா ? புரியவில்லை.

இணையத்தில் இன்று மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தாஜ் ஹோட்டலை பார்வை இடுகிறார் என்ற செய்தியை படித்தேன் .அவருடன் பல காவல் அதிகாரிகள் உடன் பல அரசியல் அதிகாரிகள் .இது ஒரு முதல்வரின் வருகை .இதில் சினிமா இயக்குனர் ராம் கோபால் வர்மா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லை.ராம் கோபால் வர்மாவின் அடுத்த படத்தில் நடிக்கும் முதல்வரின் மகன் ஹ்ரிடேஷ் தேஷ்முக்கும் அந்த கூட்டத்தில் இருக்கிறார்.அவர்கள் பார்த்து என்ன செய்து விட போகிறார்கள் .

அந்த ஹோட்டலின் உரிமையாளர் ரத்தன் டாடா நேற்று வரை உள்ளே செல்லவில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.இதை மேலும் கொடுமையாக்க மகாராஷ்ட்ராவின் உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பாட்டில் என்பவர் கொடுத்த பதில்." small incidents like this do happen in big cities " How ridiculous comment . அதற்கு அவர்கள் அரசியல் கட்சி சொன்ன பதில் " அமைச்சருக்கு ஹிந்தி பேச தெரியாது " என்பது !

நரேந்திர மோடியின் உதவி தொகையை காக்கரே குடும்பம் மறுத்ததை ஒட்டி அமர் சிங்க் என்ற விலைபோன அரசியல் வாதியின் வார்த்தைகள் உண்மையில் மன்னிக்க முடியாத வார்த்தைகள்.


கக்கரே இறந்து விட்டார் என்ற செய்தி ரெடிப்ப் செய்தியில் வந்த உடன் கீழே ஒரு கமெண்ட் " நான் என் மனைவியிடம் சொல்லி கொண்டிருந்தேன் ,சத்வியை கைது செய்து கக்கரே தவறு செய்கிறார் ,அவர் தண்டனை அனுபவிக்க போகிறார் என்று.அதே போல் அவர் பாத்து காக்க நினைத்த முஸ்லீம் தீவிரவாதிகளே கொன்று விட்டார்கள்."

பிரியங்கா காந்தி இந்த நிலையை பற்றி ' இந்திரா காந்தி இந்த நிலையை வேறு விதமாக கையாண்டிருப்பார் ! நம்மை எல்லாம் பெருமை கொள்ள செய்து இருப்பார் " என்ற பேட்டி.

இந்தியாவின் அரசியல் அமைப்புவாதிகள் பாகிஸ்தானை பற்றி பேசும் பொழுது ஐ.எஸ் .ஐ என்ற அமைப்பின் ஜெனரல் வருகையை எதிர்பார்த்து கொண்டு அதை பாகிஸ்தான் மறுக்கவே அதே நிலையில் இருந்து பதட்ட நிலையில் இருநாடும் அமைந்து இருப்பது.

ஆபரேஷன் சைக்ளோன் நடந்து கொண்டிருக்கும் பொழுது அத்வானி தாஜ் ஹோட்டல் அருகே சென்றது .

இத்தனையும் நடந்து முடிந்தும் நமது அரசாங்கம் இன்னும் ஒரு பொறுப்பான செய்தி வெளியிட முடியாமல் திணறி கொண்டிருப்பது.

மும்பை போன்ற ஒரு நகரத்தில் உள்ள தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டும் புத்தி வராமல் சென்னை போன்ற நகரங்களில் இன்னும் பாதுக்காப்பை அதிகரிக்காமல் இருப்பது.

குறிப்பாக சென்னை தாஜ் கன்னிமராவில் இன்னும் பாதுகாப்பு போடாதது.
இதை எல்லாம் சாதரண மக்களுக்கு மீடியாக்கள் operational evidence தருவது .

இவை எல்லாம் மும்பை சம்பவங்களை பார்த்து கேலி செய்வது போல் தான் இருக்கிறது.என்னால் எந்த நிலையும் எடுத்து இதை பற்றி எழுத முடியாது.நமக்கு இப்பொழுதைய தேவை ஒன்றும் ஒரு கட்டுப்பாடான சட்டமோ அல்ல அமைச்சர்களின் மாற்றமோ அல்ல .நம் தேவை "பாதுகாப்பு.அப்பாவி மக்கள் எத்தனை முறை மதம் என்ற சாக்கில் கொல்லப்பட வேண்டும் தெரியவில்லை.


ஒரு உண்மை அறிந்து கொள்ள வேண்டும்.தீவிரவாதம் என்பது மதத்தை சார்ந்தது அல்ல அது ஒரு மனசிக்கல் கொண்ட மனிதர்கள் செய்யும் அட்டகாசம் இதில் ஆண்டவனையும் இழுக்க முடியாது ,அவன் கூட்டத்தையும் இழுக்க முடியாது.அமெரிக்கா அல் கொய்தாவின் தாக்குதலில் இருந்து மீண்டு வந்தது ஆச்சரியம் அளிக்கிறது.அதன் பிறகு ஊடுருவல்கள் தடுக்கப்பட்டு இருக்கின்றன.முறியடிக்க பட்டுஇருக்கின்றன .ஆனால் இங்கு இந்த வருடம் மட்டும் இது பதினான்காவது தாக்குதல் .என்ன சொல்கிறது இந்த தாக்குதல்கள் .


நமது அமைப்புக்களும் நமது அங்கங்களும் சகிப்பு தன்மை என்ற சொல்லை தாண்டி அசிங்கமாக முன்னேறி கொண்டிருக்கிறோம்.டெக்னாலஜி என்ற வார்த்தை இந்தியாவில் எப்படி எல்லாமோ வளர்ச்சி கண்டாலும் அந்த வார்த்தையின் முழு பயனை ஒரு இந்தியன் இந்த மாதிரி ஒரு சமயத்தில் பயன் படுத்த முடியாமல் திணறுவது வருத்தம் அளிக்கிறது.நமது மூளை எல்லாம் அடுத்த நாட்டிற்க்கு பணி செய்ய ஏலம் விடப்பட்டிருப்பதால் நம் நாட்டிற்க்கும் அதன் பாதுகாப்பிற்கும் இது வரை நமது மூளை வேலை செய்யவே இல்லை.தீவிரவாதிகள் ஜீ ,பீ .எஸ் பயன்படுத்தி தாஜ் உள்ளே நகர்ந்து கொண்டிருந்தார்கள்.பிளாக் பெர்ரி மூலம் தொடர்பு கொண்டார்கள்.பிளாக் பெர்ரி மூலம் தொடர்பு கொண்டால் முதலில் கால் பிளாக் பெர்ரி செர்வருக்கு சென்ற பிறகே நமது சர்வருக்கு இணைப்பை ஏற்படுத்தும்.

ஆனால் நமது மார்கோஸ் படைகள் உள்ளே செல்லும் பொழுது அவர்கள் கையில் ஒரு வரைபடம் கூட இல்லாமல் இருந்தும் ,அவர்களுக்கு விளக்க ஒரு அதிகாரி கூட இல்லாமல் இருந்தது நம்மை யோசிக்க வைக்கிறது.

நாம் இத்தனையும் ஒரு கணத்தில் இழந்து விட்டோம்.எந்த இதனையின் விலை என்ன ? இது எங்கே செல்கிறது என்பதை நோக்கி இருப்பதும் முட்டாள்தனம்.இதனால் நமக்கு நேர இருக்கும் மாற்றங்கள் மட்டும் நிச்சயங்களாக கண் முன்னே தெரிகிறது.

இந்த ஒரு பொருளாதார சூழ்நிலையில் யாரும் இன்னும் ஒரு போருக்கு தயாராக இல்லை.என் நண்பன் சுந்தர் ராஜனுடன் நேற்று பேசி கொண்டிருந்தேன்.அவன் வைத்த கருத்தும் இதுவே " இரண்டு பேர் கிட்டயும் அணுசக்தி இருக்கிறது அதனால் இருவரும் மோதிக்கொள்ள மாட்டோம் "

நானும் அவனும் அன்று பேசி கொண்டிருந்த நேரம் தாண்டி சில நேரம் இதை பற்றி நினைத்து கொண்டிருந்தேன்.வீண் நேரம் செலவழிக்கப்படாமல் இந்த நேரத்தின் தேவைகள் பேச்சுவார்த்தைகள் அல்ல என்பதை மனதில் கொண்டாலே பாதிக்கு மேல் பாதுகாப்பு ஏற்படும் என்பது என் கருத்து.இதை ஒன்றும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கொண்டு செல்ல முடியாது தான்.ஆனால் இந்த நிகழ்வுக்கு இதை ஏற்படுத்திய தீவிரவாத கும்பலை தாண்டி பதில் சொல்ல வேண்டியது நாம் தான்.நாம் என்றால் நாம் உருவாக்கிய அரசு ,அமைப்பு ,ஜனநாயகம் எல்லாம் தான்.

நாளையும் இதை மும்பையில் நடந்த ஒரு ரயில் விபத்து போல் ஆற போட்டு கொண்டோ அல்ல 1993 இல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு போல் இழுத்து அடித்து ஆதாரம் சேர்கவே பல வருடங்கள் ஆகி கொண்டிருந்தால் பாலிவுட் சினிமா மூன்று படம் எடுத்து விடுவார்கள் ,எனக்கு பிறக்க போகும் பிள்ளை அதை பற்றி பேசி கொண்டிருப்பானே தவிர அது முடிந்து இருக்காது.
மும்பை என்ற உலகம் மீண்டு வரும் ,அது எல்லோருக்கும் தெரியும்.மும்பையை இதற்கு மேல் தூங்க வைக்க முடியாது.ஆனால் இனி நேரும் விழிப்பில் தெரியும் ஒரு வித கலக்கம் தான் இந்தியாவின் பாதுகாப்பை வர்ணனை செய்ய போகிற தருணங்கள்.மும்பை எப்படி சுவடுகளை மறைத்து வாழ்கையை திரும்ப மக்களுக்கு தரபோகிறது என்பது ஒரு வித தெளிவில்லா விஷயமாகவே இருக்கிறது.

கண்முன்னே கமலுடன்
அரவிந்த் சாமியுடன்
பறந்து சென்ற
அந்த தாஜ் ஹோட்டல் முன்
வீடு கொண்டிருந்த
புறாகூட்டங்கள் எங்கே ?
எங்கே அமைதிக்கு
தூது செல்லவேண்டும்
என்று தெரியாமல் மாண்டுவிட்டனவோ ?
அல்ல அழிக்கபட்டனவோ ?
மனதில் தோன்றிய ஒரு கவிதை.
எனக்கு இந்த மூன்று நாள் விடுப்பை களிப்பாக கொண்டாட முடியவில்லை.எத்தனை முறை இப்படி நடந்து இருக்கும்.எத்தனை முறை நமக்கு மட்டுமே நேர்ந்து இருக்கும்.நாம் என்ன சகிப்பு தன்மையின் உச்சத்தில் நின்று கொண்டு இருக்கிறோமா அல்ல முட்டாள்தனத்தின் பிடரியில் அமர்ந்து இருக்கிறோமா ? எதுவும் விளங்க வில்லை.நான் இன்று உண்டு ,அமர்ந்து ,உறங்கும் சமயம் என்னை போல் ஒருவன் அந்த நகரத்தை அழிக்க மூளை சலவை செய்ய படுகிறான்.அவன் கண்களில் என்னை போல் ஒரு ஏக்கம் இருந்தாலும் அவன் ஒரு ஆழமான போராளியாக மாற்ற படுகிறான்.

இந்த மும்பை என்ன பாவம் செய்து விட்டது . செய்திகளில் தொலைக்காட்சிகளில் மும்பை தீவிரவாதத்திற்கு அன்னியம் கொண்டது அல்ல என்று சொல்லும் பொழுது எரிச்சல் வருகிறது.மும்பைக்கு என்ன தீவிரவாதம் நேர்ந்து விடப்பட்டதா ? இல்லையே.மும்பை ,வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஒரு சேர காட்டும் ஒரு அதிசியம்.

இந்துவும் முஸ்லிமும் கிறிஸ்துவனும் தன் கனவுக்கு போராடி கொண்டிருக்கும் ஒரு கூடாரம்.காலை உணவில் இருந்து இரவு உறங்கும் நேரம் வரை தன்னை யார் நோட்டம் இடுகிறார்கள் என்று கூட தெரியாமல் சுற்றி திரியும் ஒரு வாகனம். மும்பையில் கனவுகள் பல ஆரம்பம் ஆகி முடிவதால் தான் மும்பைக்கும் மற்ற நகரத்திற்கும் ஒரு வித வித்தியாசம் தெரிகிறது.மும்பை நகரம் என்பதை விட அது ஒரு தனி உலகம்.அதன் உள்ளே அடைந்து கிடக்கும் பல வித கனவுகளை தோண்டி எடுக்க தான் ஒவ்வொரு மனிதனும் தனக்குளே ஒரு வாழ்வை அங்கே அமைத்து கொள்கிறான்.சகிப்பு தன்மையும் சரி ,மதகொள்கையும் சரி அங்கே பெருக்கெடுத்து ஓடுவதற்கு காரணமும் இந்த பல தரப்பட்ட கனவுகள் மோதிகொள்வதால் தான்.

ஷேர் ,பாலிவுட் ,மாடலிங் ,ஹார்பர்,இன்ஜினியரிங் ,ஏற்றுமதி ,கிரிக்கெட் , நீதித்துறை ,பெட்டிங்,நுண்கலை எல்லாவற்றிற்கும் இருக்கும் ஒரே சரணாலயம் மும்பை.அந்த சரணாலயம் அவர்கள் எல்லோரிரடமும் கற்று கொடுக்கும் ஒரு விஷயம் வாழ்கையின் வேகம் ."வேகம்" அவர்கள் அத்தனை பேருக்கும் தொற்றிகொள்வதாலே வேலை தேடும் இளைஞனும் அருகில் இருக்கும் கோடீஸ்வர தொழிலதிபரையும் கண்டு கொள்ள நேரம் இல்லாமல் பயணித்து கொண்டிருப்பான்,ஏக்கத்தில் அலையும் இளைஞனும் அருகில் நிற்கும் பெண்ணை சீண்ட நேரம் இல்லாமல் சென்று கொண்டிருப்பான்,பேரம் பேச இடம் தராமல் ஆட்டோவும் டாக்சியும் நம் முன்னே பறந்து கொண்டிருக்கும்.டப்பாவாலாக்கள் ஊர் முழுக்க சாப்பாட்டு டப்பாவை கொண்டு செல்வது மக்களின் வேகத்தால் ஏற்பட்ட நேர பற்றாகுறையை தீர்க்க தான்.அது மும்பையில் மட்டுமே சாத்தியம் ஆக கூடிய உண்மை ,நிதர்சனம்.

மும்பை என்ற உலகம் வாழ்வின் தரத்தை வைத்து அல்ல ,வாழ்கையை வாழும் விதத்தில் எடை போட படுகிறது.அதன் இடமும் ,நேரமும் தரும் அடையாளங்கள் நம்மை போன்ற வெளி மாநிலத்தவருக்கு ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை தான் தரும்.மும்பை என்பது இந்தியாவின் வணிக தலைநகரம் என்பதை விட அங்கே புரளும் பணத்தை அடக்கி ஆளுவது அந்த மக்கள் அல்ல அவர்கள் கொடுத்த நேரம் என்ற பகடை.மும்பையில் பணத்தை தேக்கி வைப்பது என்பது ஒரு மறந்து போன விஷயம்.இதை என் பல மும்பை நண்பர்களிடம் பார்த்து இருக்கிறேன்.மும்பை பணம் இருந்தாலும் வாழ்வை தரும்,பணம் இல்லாவிட்டலும் வாழ்வை தரும்.அது தான் அதன் வீரியம்.மனிதனின் சொர்க்கபுரி ,மிருகத்தின் நரகம்.அது தான் இங்கு நடந்தது.

நான் ஒவ்வொரு முறை மும்பை செல்லும் பொழுதும் நான் சென்ற விமானம் அந்த தாராவி மேல் பறந்து சாண்டா க்ருஸ் விமான நிலையத்தில் இறங்கும் பொழுதும் என் நேரங்கள் அளவிட படுவதை உணர்ந்து இருக்கிறேன்.மும்பையில் மட்டும் நேரத்தை சரியாக கணக்கு செய்யாமல் தரை இறங்கினால் கேலிக்குள் ஆவது நாம் தான்.நம் அத்தனை உலகமும் செயல் இழந்து அப்படியே நிற்க வேண்டியது தான்.

இப்படி பட்ட நகரம் ஸ்தம்பித்து நிற்கிறது.ஒரு முறை அல்ல மூன்று நாட்களாக நிற்கிறது.அந்த கொடூர பழிகள் நீங்க நாட்கள் ,மாதங்கள்,செலவுகள்,நிதிகள்,மனங்கள் ,சந்திப்புகள் எடுக்கும்.மும்பை என்ற நகரம் மீண்டும் திரும்பி பழைய நிலைக்கு சுழலும் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.ஆனால் அப்படி திரும்பும் பொழுது மனங்கள் பெற்ற மாற்றங்களும் அவர்கள் எலும்புகளில் தெரியும் ஒரு வித நடுக்கமும் இந்த மூன்று நாட்கள் நடந்தவற்றை நினைவு படுத்தி கொண்டே இருக்கும்.அது அவர்கள் கண்களிலோ ,அல்ல செயல்களிலோ தெரியா விட்டாலும் அவர்கள் உள்ளே எங்கோ ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டு நடுக்கம் கொடுக்கத்தான் செய்யும்.
மூன்று நாட்களாக யோசித்து கொண்டும் ,படித்து கொண்டும் இருக்கும் இந்த விஷயங்கள் எழுத்துக்களாக ! இதில் ஒரு விஷயம் என்னவென்றால் புதன்கிழமை இரவு சென்னையில் மழை அதிகம் பெய்தமையால் இரவு பதினோரு மணி அளவில் வீடு சென்று நேராக தூங்க சென்று விட்டேன்.காலை ஏழு மணி அளவில் அலுவலகம் கிளம்பி விட்டதால் என் நண்பர்களுடனும் பேச முடியவில்லை.என் இன்பாக்ஸ் ஐ திறந்து பார்த்தால் என் கம்பெனி சி .ஈ .ஒ அமெரிக்காவில் இருந்து மும்பையில் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவம் என்று மெயில் அனுப்பி இருந்தார்.நான் அதை திறந்து படித்த உடன் தான் விபரம் அறிந்தேன்.கேவலமாக இருந்தது.இந்த ஐந்து நாட்களாக நான் டி .வீ சேனல் அருகில் செல்லவே இல்லை.ஒரு விநாடி கூட அந்த காட்சிகளை பார்க்க வில்லை.நான் அறிந்தது எல்லாம் நாளிதழிலும் ,இன்டர்நெட் செய்திகளும் தான்.இந்த நேரத்திலும் இந்த பாழாய் போன அரசியல் இப்படி விளையாடுகிறது.

என் மனதின் கட்டுப்பாட்டை நான் சோதித்து கொண்டிருக்கும் காலம் இது.பல வகையான எண்ணங்கள் எனக்குள் எழுந்து போராடி ரத்தம் சிந்தி மடிந்து போகும் தருணங்கள் .எனக்குள் ஒரு வித கட்டுப்பாடு இருப்பது எனக்கு ஆச்சரியம் அளித்தாலும் என்னை சில விதத்தில் வேட்கை கொள்ள வைக்கும் ஒரு வித பதர் போன்ற ஒரு எண்ணங்கள் என்னை ஸ்தம்பிக்க வைத்து கொண்டிருக்கிறது. நான் தேங்கி நின்று கொண்டு என் முரண்பட்டு போன எண்ணங்களுக்காக வாதாடி கொண்டு வெளியே வந்து முன்னேறி வருகிறேன்.அர்த்தங்களை தேடாமல் அற்பங்களை களைய நினைக்கிறேன்.சுற்றி பார்க்கும் விஷயங்களை ஒதுக்காமல் ஓரம் நின்று நசையறு மனம் வேண்டி நிற்கிறேன் !
என் செல்கள் அத்தனையிலும் அரித்து தங்கிப் போன இச்சைகளை என் தசைகளை சீண்டி எரித்து கொண்டிருக்கிறேன்.தோல்வி யுருகிறேன்.மீண்டும் வருகிறேன்.

பாரதியை விட எனக்கு பெரிய கடவுள் தெரியவில்லை.அறிந்ததும் இல்லை. அவனை படிக்கும் பொழுது என்னை பார்க்கிறேன்.என் எண்ணங்களை எப்படி எழுதி இருக்கிறான் ? இந்த நிலையை பார்க்கும் பொழுது தான் மனித எண்ணங்களின் அற்ப எண்ணங்கள் எப்படி எல்லாம் மாறுபட்டு வித்தியாசப்பட்டு தெரிகிறது! அவை தெரிவது என்னுடைய மன ஜன்னலின் வழியே தான் . சாதரண விஷயங்கள் கூட விஷம் போல் உடலில் ஏறி கொள்வது ஆச்சரியத்தை தாண்டி மனதின் ஆரபரிப்பை கூட்டி விடுகிறது.மனதில் தோன்றும் எண்ணங்கள் சீராக அமைய நான் போராடும் விதமே எனக்கு தோல்வியை கொடுத்து விடுமோ என்ற ஐயம் நேருகிறது .இந்த சொற்ப நேர தேக்கத்திற்கு என் மனம் என்னும் காட்டாறு எப்படி எல்லாம் வளைந்து கொடுக்கிறது .ஆனால் நான் செல்ல நினைக்கும் பெருங்கடலுக்கு ஏன் இத்தனை தடைகள் ?.தெரியவில்லை! என்னை எனக்கு தெரியாமல் யாருக்கு தெரியும், இந்த எழுதுக்களுக்கா ? அல்ல இந்த எண்ணங்களுக்கா ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியாவுயிராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

ஏன் இப்படி எழுதினான்.அவனும் தடுமாறி இருக்கிறான் ,அவனும் போராடி இருக்கிறான் என்னை போல்.என் தோள்களை வலிமையுடையதக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் எனக்குள் ஒரு மேன்மை வேண்டும் என்று வேண்டுகிறேன்.என்னை தாண்டி ஒரு சக்தியை தேடுகிறேன்.என் சுற்றமும் சூழலும் என்னை வழிவிட்டு வாழ்த்தினாலும் என்னுள் புதையுண்டு உறங்கும் அற்ப மானிடன் ஒவ்வொரு முறையும் வாளைக் கொண்டு என் நம்பிக்கையை பிளக்கிறான்.

பொழுதுகள் விழித்து கொண்டு ஒவ்வொரு முறையும் மனதிடம் துதி சொல்லி கொண்டு துடித்து கொண்டு இருப்பது ஒரு வித போராட்டம் என்றால் நான் போர்களத்தில் தான் இருக்கிறேன்.மேன்மைகள் தேடி அலைய புறப்படாமல் அற்பங்களை களைய முற்பட்டு இருக்கிறேன்.என் களைகளை வேரோடு பிடுங்க முனைந்து இருக்கிறேன்.அர்த்தங்களை மெதுவாக நின்று புரிந்து கொள்ள நினைக்கிறேன்.அதற்கு இந்த விண்ணப்பம் .
தயவு செய்து முழுமையாக படிக்குமாறு வேண்டுகிறேன்.

மோகத்தைக் கொன்றுவிடு -அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு

தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்து விடு ;

யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்துவிடு ;

ஏகத் திருந்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்பவளே !

பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு ;

சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
செத்த உடலாக்கு .

இந்தப் பதர்களையே நெல்லா மென
எண்ணி இருப்பேனோ ?

எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே .

உள்ளம் குளிராதோ ? பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ ?

கள்ளம் உருகாதோ -அம்மா ! பக்திக்
கண்ணீர் பெருகாதோ ?

வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ ?

விள்ளற் கரியவளே அனைத்திலும்
மேவி யிருப்பவளே !

Nov 27, 2008

குறை

என்னடா இவன் தனி மனிதத்தின் சுக துக்கத்தை பற்றி பேசி கொண்டிருக்கிறான் என்று நினைக்க வேண்டாம்.தனி மனிதத்தின் சுகமும் துக்கமும் ஒரு வாழ்வுமுறையில் கொண்டு வரும் தாக்கம் நாம் எல்லோரும் அறிந்ததே.இன்றைய நமது சூழலில் நாம் பட்டு கொண்டிருக்கும் பல வித இடருகளில் இருந்து வெளிப்பட நாம் நமது சூழலை குறை சொல்வது இயல்பு.எல்லாம் மீறி போன சமயங்களில் நாம் அரசை குறை சொல்லுவோம்.ஆனால் இயல்பாக நாம் குறை சொல்ல பழகி விட்டோம்.


குறை சொல்வது மிக இயல்பு என்று மட்டும் நினைத்து கொள்ளவேண்டாம்.அதற்கும் நம்மிடம் பல விதமாக வரலாறுகள் இருக்கிறது.இன்று நாம் இருக்கும் இந்த குறை சொல்லும் மனப்பான்மை நம் வாழ்க்கை தரத்தை குறைத்து கொண்டிருக்கிறதோ என்று நினைத்து பார்ப்பேன்.


அன்று ஆட்டோவில் நானும் என் நண்பன் பப்புவும் வந்து கொண்டிருந்தோம்.பப்பு இரண்டு வருடம் அமெரிக்காவில் இருந்து வந்ததால் அவன் வாழ்வு முறை பலவாக மாறி இருந்தது.வெளியே சென்றவுடன் அவன் கைக்குட்டையை எடுத்து மூக்கை பொத்தி கொள்கிறான்.அவன் வைக்கும் விவாதங்களில் ஒரு வித கருத்து இல்லாவிட்டாலும் அவன் சத்தமாக விவாதிக்கிறான். அவனுக்கு இந்தியா பிடிக்கவில்லை.மிக தெளிவாக அவன் அமெரிக்கா அமெரிக்கா என்று அறைகூவல் இட ஆரம்பித்து விட்டான்.எனக்கு கோபம் வருகிறது ஆனால் அவனை புரிய வைக்க முடியவில்லை.கத்திபாறை சந்திப்பில் நடந்து வந்த பாலம் வேலை மூன்று வருடம் சென்றும் ஒழுங்காக முடிக்க முடியவில்லை என்று ஆரம்பித்து இந்தியாவில் த்ரீ ஜீ டெக்னாலஜி இல்லை என்பது வரை குறை கூறினான்.


இது ஒரு வகை அவ்வளவே.நமது விவாதம் பப்புவை பற்றி அல்ல.அவன் குறை சொல்வதும் அதன் மாற்றங்களை பற்றி தான்.ரோடு சரி இல்லை என்றால் நாம் குறை சொல்லுகிறோம்,நம் கை மீறி செலவு நேர்ந்தால் குறை சொல்லுகிறோம்,பேருந்தில் நெரிசல் இருந்தால் குறை சொல்லுகிறோம்.உண்மையில் நாம் குறை சொல்லாமல் இருக்கும் இடங்கள் மிக மிக குறைவு.அவை எல்லாவற்றிலும் குறை இருக்கலாம்.ஆனால் அந்த நிவர்த்திகள் இன்னும் ஆரம்பிக்க படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தது.


நாம் குறை சொல்வது ஏன் ? மேல் நாட்டு மோகமா அல்ல நமது வாழ்வு முறையா அல்ல நமது சுழல் அப்படி அமைந்து விட்டதா அல்ல உண்மையிலே நமது அரசாங்க முறைகேடுகளா ? தெரியவில்லை.

எதை பற்றி எழுதலாம் என்று எல்லோரும் சில நாட்கள் தெரியாமல் முழித்து இருக்கும் நேரங்கள் உண்டு.நேற்று யாரோ ஒரு வித பயணத்தை பற்றி பேசி கொண்டிருக்கும் பொழுது இதை எழுதலாமே என்று தோன்றும் ,ஆனால் என்ன காரணத்திலோ அதில் ஒரு ஊக்கம் இல்லாமல் அது மறந்து போய் விடும்.அப்படி தொலைந்து போன கருத்துக்கள் ,பதிவுகள் பல.

இப்பொழுதெல்லாம் இதை தான் எழுத வேண்டும் என்ற ஊந்துதல் சென்று எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்று தோன்றுகிறது.ஆனாலும் சில நேரம் பஞ்சம் தட்டுபடுகிறது.அப்படி இருந்த காலத்தில் வந்தது தான் இந்த ப்ளாக்.

உலகளவில் மிக பிரபலம் அடைந்து வரும் இந்த பக்கங்களை எழுதுவது சீ.பெத் என்னும் ஒரு பெண்.இவரது தலைப்புகள் ஒன்றும் பெரிய அளவில் ஒரு Complexity கொடுப்பவை அல்ல.மிக சாதரண வாழ்க்கை விஷயங்களை பற்றி எழுத தூண்டுகிறார்.இவர் நினைவு படுத்தும் ஒவ்வொரு விஷயத்திலும் பல கதைகள் ஒளிந்து இருக்கின்றன.இவர் எழுதுவுது நம்மை எழுத தூண்டுவதற்கு.இன்னும் சீ.பெத் கூறிய கருத்துக்களில் இருந்து நான் எழுத ஆரம்பிக்கவில்லை.ஆனால் கண்டிப்பாக இவரது ஒரு நிமிட கருத்துக்குள் என்னை பல விதங்களில் யோசிக்க வைக்கின்றன. நீங்களும் இதில் இருந்து ஒரு முயற்சி கொள்ளலாம்.நீங்கள் விட நினைக்கும் ஒரு பழக்கம் பற்றி எழுதலாம்,உங்களுக்கு நடந்த ஒரு அதிர்ச்சி பற்றி எழுதலாம்,எதை பற்றி வேண்டும் ஆனாலும் எழுதலாம்.ஒவ்வொரு மனிதனும் எழுத வேண்டும் ,ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு எழுத்து இருக்கிறது என்பதற்கு ஒரு தூண்டுகோல் தான் இந்த பக்கங்கள்.நீங்கள் இதை பார்க்கும் பொழுதே இதில் இருந்து எழும் கதைகளை நீங்கள் தடுக்க முடியாது.
இதில் சொடுக்கவும் . Oneminutewriter

எதோ சேத்தன் பகத் எழுதிய புத்தகம் என்று நினைத்து கொள்ள வேண்டாம், முன்பு ஒரு முறை ஒரு பதிவில் எழுதி இருந்தேன் அதாவது நவம்பர் மாதம் முதல் சிகரட்டை விட்டு விலக போகிறேன் என்று,அதன் விளைவு.
குறிக்கப்பட்ட நாள் நவம்பர் பதினாறு .

அதற்கு முந்தைய தினம் என் தோழியுடன் இரவு நேரம் செல்போனில் பேசி கொண்டிருந்த பொழுது சொல்லி வந்தேன் ' நாளை முதல் நோ சிகரட் 'என்று .எங்கள் உரையாடல் பனிரெண்டு மணியை தாண்டி சென்ற பொழுது செல்போனில் இருந்து விடுபட்டேன்.அவளிடம் இருந்து ஒரு எஸ்.எம் .எஸ் .வந்து சேர்ந்தது.அதில் சிகரட் விடுவதை பற்றி எழுத பட்டிருந்தது.நானும் தற்சமயம் என்னிடம் மூன்றே மூன்று சிகரட் இருப்பதாக அனுப்பினேன்.அதற்கு பதிலாக வந்தது தான் இந்த Last Three cigarattes of your life !!! .

உண்மையில் அந்த மூன்று சிகரட்டை புகைத்து முடிக்க மணி இரண்டை தாண்டி விட்டது.அன்று புகை பிடிப்பதை விட்டதற்கு பிறகு நான் அதன் அருகே செல்லவே இல்லை.அது நடந்து ஒரு வாரம் ஆக போகிறது.இது வரை நான் புகை பிடிப்பதை விட வேண்டும் என்று நான் நினைத்தது கிடையாது.இந்த முறை இது ஒரு சுய கட்டுப்பாட்டை நிரூபணம் செய்ய வேண்டிய கட்டாயம்.அதனால் சந்தேகம் வேண்டாம் No smoking இனிமேல்.
இன்று வரை ஒரு நொடிக்கு கூட நான் நினைத்தது கிடையாது .அது ஒரு கெட்ட பழக்கமாக எனக்கு தெரிந்ததே இல்லை.அது உடலுக்கு கெடுதல் .அதனால் அதை கெட்ட பழக்கமாக கொள்ள முடியாது.உண்மை என்னவென்றால் புகைப்பது கெட்ட பழக்கம் அல்ல ,ஆனால் புகை பழக்கம் இல்லாமல் இருப்பது நல்ல ஒழுக்கம்.அதை நான் ஏற்று கொள்கிறேன்.

அந்த கடைசி புகையை மறுபடியும் ஒரு முறை இழுத்து மீண்டும் விட வேண்டும் என்று தோன்றியது.அதோ அந்த புகை வட்டமாக நீந்தி சென்று கொண்டிருந்ததை நான் பார்த்து கொண்டிருந்தேன். என்னதான் கடைசியாக இருந்தாலும் ஒரு பகுதிக்கு பிறகு முடியவில்லை.என் இணை இல்லா நண்பன் ,என் உற்சாக மருந்து என்ன வேண்டும் ஆனாலும் எடுத்து கொள்ளலாம் .என் சுகம் துக்கம் எல்லாவற்றையும் அறிந்த ஒரே துணைவன்.எப்பொழுதும் என் அருகாமையில் இருப்பவன்.அவனை அழித்து என்னை அழித்து கொண்டிருந்தான். ஆனால் என்னை கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு அடிமை ஆக்கி இருந்தேன் .உண்மை தான்.விடுபட வேண்டிய நேரம்.Will miss him !!!

சில நேரம் காது அடைக்கிறது.சில நேரம் வாய் உலர்ந்து போகிறது.என் மனம் என்னை கேட்டு அந்த தலை வலியை கொண்டு வந்து கொடுக்கிறது.தலை வலி மிக மிக ரணமாக இருக்கிறது.என்னால் சீக்கிரம் தூங்க முடிகிறது.பசி எடுக்கிறது.சில புதிய ருசி என் நாக்கிற்கு தெரிகிறது.திடீர் என்று எவ்வளவு மாற்றம் என்றதும் வித்தியாசமாய் இருந்தது.ஒரு நாளைக்கு இரண்டு அல்லது இரண்டரை பாக்கெட் சிகரட் ஊதி கொண்டிருந்தவன் திடீர் என்று பலக்கத்தை விட்டால் என்னவாகும்,இது தான் நேரும்.
எனக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டதால் நான் என் மருத்துவ நண்பனிடம் அழைத்து கேட்டேன் .ஒரே வார்த்தையில் சொல்லி விட்டான் "Withdrawal symptoms மச்சி" என்று .
அப்படியா .எல்லாத்துக்கும் வார்த்தைகள் இருக்குப்பா என்று நினைத்து கொண்டேன்.சிகரட் புகைக்க வேண்டும் என்று தோன்றும் பொழுதெல்லாம் ஒரு மின்ட் அல்லது ஒரு ஹால்ஸ் எடுத்து போட்டு கொள்கிறேன்.ஹால்ஸ் ஒரு நாளைக்கு இருபத்து என்ற விதத்தில் சென்று கொண்டிருக்கிறது.

ஒரு மூன்று மாதம் கழித்து என் நிலையை இதை சார்ந்து எழுதுகிறேன்.

Nov 19, 2008

உண்மை

மனம் கொஞ்சம் இலசாகி இருக்கிறது
காரணம் தெரியாமல் கொஞ்சம் என் எடை கொஞ்சம் குறைந்து இருக்கிறது
கண்களில் ஒரு ஒளி தெரிகிறது
சில கட்டுபாடுகள் விலக்க பட்டிருக்கிறது
ஒரு நிமிடம் ஒரு நிமிடமாக தெரிகிறது
யுகங்களின் அர்த்தங்கள் மறந்து போய் இருக்கிறது
நினைவுகள் தற்காலிக நிறுத்தம் கொண்டிருக்கிறது
என்னை எனக்கு பிடித்து இருக்கிறது
காற்றும் வனமும் என்னிடம் பேசுவது இல்லை
சில உண்மைகளில் திளைக்க கிளம்பி இருக்கிறேன்
.


இந்த கவிதையின் அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்.ஆனால் இதில் அர்த்தங்கள் எனக்கு மட்டுமே தெரியும்.இது வருடா வருடம் நவம்பர் மாதம் நிகழும் ஒரு உண்மை.யூகித்து கொள்ளுங்கள்.

பெண்களை பற்றி எழுதி ரொம்ப நாள் ஆகி விட்டது போல் தோன்றுகிறது.சில நேரம் நம் வாழ்வில் எல்லாம் முடிந்து விட்டதா என்று நினைத்து இருந்த காலங்கள் உண்டு.ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிவது ,மாற்றம் ஒன்றே மாறாமல் இருப்பது.ஒரு அத்தியாயம் முடிந்தால் மற்றொன்று என்ற கணக்கில் தான் எல்லோர் வாழ்வும் செல்ல வேண்டும், சினிமாவை போல் .

சினிமாவும் வாழ்க்கையும் ஒன்று படுத்தி கூற முடியாது,சினிமாவில் இருக்கும் கதாபத்திரங்களை போல் நாம் நடந்து கொள்ள ஆசை படலாம்.ஆனால் அது மிக மிக ஒரு அலங்கரிக்கப்பட்ட ஒரு பொய்யாக தான் உண்மையில் நம் நெஞ்சில் தங்கி விடும்.அதற்கு பல உதாரணங்கள் இருக்கும்.இருந்த படிக்கே நாம் பழைய நிலைக்கு மாறி விடுவோம்.

சென்ற வாரம் பல நாட்கள் கழித்து ஒரு பெண்ணை நான் பார்த்தேன்.அவளிடம் அதிகம் பேசியது இல்லை என்றாலும் அவளும் நானும் பல நாட்கள் கழித்து பார்த்து கொண்டதால் வெகு சுலபமாக சரளமாக பேசி வந்தோம்.அவள் தன் வேளையில் ஆரம்பித்து பேச ஆரம்பித்தாள்.அவளை பார்த்து ஒரு ஐந்து வருடங்கள் இருக்கும்.அந்த ஐந்து வருடத்தில் அவள் வெகுவாக மாறி இருந்தாள்.அந்த மாற்றத்திற்கு அவள் உருவம் வெகுவாக வெளிகாட்டி கொண்டிருந்தது.உண்மையில் அவளிடம் பேசுவது பிடித்து இருந்தது.அவளும் என்னை அதே நிலையில் வைத்து பார்த்து கொண்டிருந்தாள்.ஆனால் எங்கள் பேச்சுவார்த்தை அதிகமாக நீடிக்காமல் ஒரு ஐந்து பத்து நிமிடத்தில் முடிந்தது.எங்கள் செல்போன் நம்பர்கள் பறி மாறி கொண்டன .


இரண்டு நாள் கழித்து என் நண்பனுடன் பேசி கொண்டிருக்கும் பொழுது அவள் அழைத்து இருந்தாள் .என்னால் பேச முடியவில்லை.மறுபடியும் அவளை நான் மறுநாள் அழைத்தேன்.எதோ பேசி கொண்டிருந்து விட்டு அவளிடம் திடீர் என்று
" Probably we should grab a coffee some time "என்று சொல்லி வைத்தேன்.அவளும் அதற்கு ஆம் என்று சொன்னாள்.


நேரம் குறிக்கப்பட்டு அவளை சந்திக்க நான் சென்றேன்.நான் ஏன் அப்படி கேட்டேன் என்று பார்த்தால் என்னை மிக சரளமாக பேசுபவன் போல் காட்டி கொள்ள ஆங்கில படத்தில் வருவது போல் One night stand மாதிரி ஒரு முயற்சி எடுத்து இருந்தேன்.அதுவும் ஒத்துழைக்கவே அவள் வந்ததும் எனக்கு வெற்றி அளிப்பது போல் நான் உணர்ந்தேன்.ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருந்தது.


எனக்கு பாரிஸ்டா ரொம்ப பிடிக்கும்.ஒரு உணர்வு பூர்வ பிடித்தம் உண்டு.மற்றும் "A lot can change over a coffee "என்ற வாக்கியத்தில் மிக நம்பிக்கை உண்டு.அந்த பொழுதில் நானும் ஒரு வித எதிர்பார்புகளுடன் அவளை சந்தித்தேன்.அவளும் என்னை எதிர்நோக்கி இருந்த விதமும் அப்படியே சொல்லியது.ஆனால் அவளிடம் அதிகம் இதற்கு முன் பேசியது கிடையாது.அன்று பேசியது ஒரு மூன்றாவது முறையாக கூட இருக்கலாம்.அவளை பற்றி எதுவும் தெரியாது.என்னை பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது.நான் எப்படி பட்டவன் என்று கூட தெரியாது.


சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலை பற்றி பேச ஆரம்பித்தோம் .பிறகு அவளுக்கும் பாரிஸ்டா பிடிக்கும் என்று கூறினாள்.நான் என்ன வேலை செய்கிறேன் என்பதை பற்றி பேசினேன்.அவளும் அவள் வேலையை பற்றி கூறினாள்.அவளுக்கு சினிமா விருப்பம் இல்லை என்று தெளிவாக சொன்னாள்.புத்தகம் படிப்பது அபூர்வமாம்.Fivepoint some one படித்து இருக்கிறேன் என்று கூறினாள்.இசை கேட்பாளாம் Himesh reshmaiya என்றால் உயிராம்.எனக்கு அந்த இசை அமைப்பாளரை பிடிக்காது.ப்ளாக் சுத்தம் வாசமே கிடையாது என்று கூறினாள்.என்ன பேசுவது.அவள் இந்த முறை சென்னையில் பியுடீ பார்லர் சென்றது பற்றி பேசினாள்.அவள் தாய் தந்தையை மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறினாள்.நானும் தலை ஆட்டினேன்.சில நேரம் காபி யை ரசித்து குடித்தோம்.முதல் முறையாக ஒரு காபி ஷாப்பில் காபியை ரசித்து குடித்தேன்.பக்கத்தில் இருக்கும் பெண்ணை ரசிக்காமல்.


என்ன பேசுவது தெரியவில்லை.எனக்கு உண்மையில் தடுமாற்றத்தை தாண்டி என் எதிர்பார்ப்புகள் இந்த சந்திப்பில் என்னவாக இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.அவளிடம் நான் தந்து பெற போகும் விஷயங்கள் என்ன என்று அசை போட ஆரம்பித்து கொண்டிருந்தேன்.ஒரு ஐந்து நிமிட மௌனத்திற்கு பிறகு நான் மெதுவாக சென்னை வானிலையை பற்றி பேச ஆரம்பித்தேன்.


"When you have nothing to speak ,then speak about the weather". திடீர் என்று என் மண்டையில் உறைத்தது.ஒரு முறை நண்பர் ஒருவர் இதை என்னிடம் கூறினார்.உண்மை என்னிடம் இந்த பெண்ணிடம் பேச எதுவும் இல்லை,என் வெற்று மாலை வேலையை ஒரு பெண்ணுடன் கழிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் அதில் ஒரு வித உந்தூதலும் இல்லை.அவளுக்கும் அதே நிலை.அவள் உலகம் வேறு என் உலகம் வேறு.ஒட்டு போட நினைக்க முடியாது.ஒரு சில மயக்கத்தில் சந்தித்து விட்டேன்.ஆனால் அங்கே ஒரு நிமிடமும் எனக்கு ஒரு யுகம் போல் நகர்ந்து கொண்டிருந்தது.பரிஸ்டா சென்றால் யாரும் காப்பி முடிந்தால் கிளம்ப மாட்டார்கள்.அன்று கிளம்ப தோன்றியது.கிளம்பி விட்டோம்.அவள் என்னிடம் Bye சொல்லிவிட்டு ஆட்டோ வில் கிளம்பினாள்.

இன்று வரை ஒரு அழைப்பும் இல்லை.நானும் அழைக்க வில்லை.எதுவும் தோன்றவில்லை.சில நேரங்களில் நிகழும் உண்மை நமக்கு புரியும் பொழுது எவ்வளவு தெளிவாக மனம் செயல் படுகிறது என்று பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.அதுதான் அன்று நடந்து.மனதிற்கு ஒப்பாத செயல் அல்ல அது,அங்கே ஒரு அலைவரிசை இல்லை.அது வேறு ஒரு அலைவரிசை .அந்த பெண் அழகாய் இருந்தாலும் அவளிடம் எனக்கு இந்த ஒரு விஷயமும் பேசி கொள்ள இல்லை.அவளிடம் எந்த ஒரு சிந்தனையும் இல்லை.அவள் ஒரு பயணி நான் ஒரு பயணி.சந்திகொண்டோம்.அவ்வளவே.சினிமாவில் வரும் One night stand சினிமாவிற்கே .அதை செயல் படுத்துவது எனக்கு அது முட்டாள்தனம்.அந்த பெண்ணை நான் குறை சொல்ல வரவில்லை.என்னையும் குறை சொல்லவில்லை.It was a good experience.

பல எழுத்தாளர்கள் இன்று இணையத்தில் எழுத வந்து விட்டார்கள் என்பது மகிழ்ச்சியை தருகிறது.நம்மால் அவர்கள் எழுத்துக்களை எளிதாக படித்து கொள்ளலாம் என்பது ஒரு வித உண்மை.அவர்கள் இன்று கலை,புத்தகங்கள் ,விரிவுரை ,கருத்தரங்கு.படைப்புகள்,சமுதாய பிரச்சனைகள்,சந்திப்புகள் போன்றவை பற்றி விரிவாக எழுதி வருகிறார்கள்.சில ப்ளாக் புத்தக ஆர்வம் அதிகம் இருப்பவர்களுக்கே உரித்தான சில விஷயங்கள் அடங்கியதாக இருக்கும்.சில சாதரண மனிதனும் புரிந்து கொள்ளும் விதம் இருக்கும் படைப்பாக இருக்கும்.சிலவை தன்னை பற்றி தற்பெருமை பேசி கொள்ளும் எழுத்துக்களாக இருக்கும்.தமிழ் இலக்கிய உலகில் உள்ள உட்பூசல்களை சில ப்லாகுகளில் பார்க்க முடியும்.அதை குறை கூறி ஒன்றும் சாதிக்க முடியாது,அது தான் இன்றைய நிலை இன்று இந்த சமுதாயம் ஏற்று கொள்ள வேண்டியது தான்.நான் படிக்கும் சில எழுத்தாளர்களின் பக்கங்களை நான் கீழே தொகுத்து உள்ளேன் .
பக்கங்களை படிக்க பெயர்களில் சொடுக்கவும்.

எஸ்.ராமகிருஷ்ணன்
இவர் ஒரு மக்கள் எழுத்தாளர்.இவர் எழுதுவுது ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை படிப்பது போல் ஒரு ஈர்ப்பு தரும் ஒரு விதத்தில் அமையும்.விரும்பி படிக்கும் பக்கங்கள்.

நாகர்ஜுனன்
தமிழ் இலக்கிய உலகில் ஒரு மறுக்கமுடியாத விமர்சகர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவரது எழுத்துக்கள் அவரது அறிவை காட்டுவது போல் அமையும்.சில நேரங்களில் கருத்துக்களை complex ஆக மாற்றி விடுவார்.பல எடுத்துக்காட்டுகள் பல பயணங்கள் பல எழுத்துக்கள் அதுவே இவர் பக்கங்கள்.

ஜெயமோகன்
நாகர்கோயிலில் வசித்துவரும் தமிழின் மிக முக்கியமான படைப்பாளி .இவரது எழுத்துக்குள் சாமானியமாக புரிதலுக்காக எழுத பட்டது அல்ல .அவற்றில் ஒரு complexity இருக்கும்.பல தலைப்புகளில் எழுதும் இவர் பாலாவின் நான் கடவுள் படத்தின் வசனகர்த்தா.

ஞாநி
தமிழ் எழுத்துக்களின் முக்கியமான விமர்சகர் அது இலக்கியமோ ,சினிமாவோ ,சமுதாயமோ ஞானியின் விமர்சனம் அங்கு சீறி பாய்ந்து நிற்கும்.

சாருநிவேதிதா
நீங்களே படித்து விட்டு சொல்லுங்கள் .

சில விஷயங்கள் எப்படி பார்த்தாலும் அழகாய் தெரியும்.காலை வேளையில் சூரியன்.நடந்து செல்லும் பெண்கள் , அவசரமாய் தோன்றும் பள்ளி மாணவர்கள்,வயல் வெளியில் பாய்ந்து ஓடும் நீர்,இருட்டி கொண்டு வரும் வானம்,கம்பீரமாய் பறக்கும் கொடிகள்,செடியில் அமர்ந்து ஆர்வம் காட்டும் பட்டம் பூச்சி.இவை எல்லாம் நம் கண்ணில் இருந்து தப்பியது இல்லை.தினம் தினம் பார்க்கும் காட்சிகள் தான்.ஆனால் எத்தனை முறை நின்று ரசித்து இருக்கிறோம்?.

நேற்று என் நண்பன் வெங்கட் திருமணத்திற்கு சென்ற பொழுது சபரி காமெராவை பற்றி பேசி கொண்டிருந்தான்.அப்பொழுது தான் என் நண்பன் ஜெயகுமாரை பற்றி நான் அவனிடம் சொல்லி இருந்தேன்,அவனும் அந்த படங்களை பற்றி பேசி கொண்டிருந்தான்.

என் ப்ளோகில் வலது ஓரமாக ஜெயக்குமாரின் ஒளி கவிதைகள் என்ற ஒரு இடுமையை பார்த்து இருப்பீர்கள்.அதை பற்றி பல நாள் முன்னுரை எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டு மறந்து இருந்தேன்.சரியான சமயம் இன்று அமைந்தது ! ஜெயக்குமார் என்னுடன் பொறியியல் ஒன்றாக படிதான்.அவன் வேறு துறையை சார்ந்தவனாக இருந்தாலும் முதல் வருடம் ஒன்றாக படித்தோம்.கல்லூரியில் எனக்கு கிடைத்த முதல் நண்பன்.தமிழ் ரசனைக்க மிக்க மதுரை நண்பன். எனக்கு முதலாம் ஆண்டு வெளியே செல்ல முடியாததால் கருத்தாக ஆனந்த விகடன் வாங்கி வந்து தருவான்.என் பல இடருகளில் என் பக்கம் இருந்த உண்மையான தோழன்.இப்பொழுது ஜெர்மனி சென்று மேல்படிப்பு முடித்து அங்கே வேலை பார்த்து வருகிறான்.

ஆளை பார்த்தால் நம்பமுடியவில்லை ஆனால் வெகுவாக மாறி விட்டான்.பழங்காநத்தம் ஜெயக்குமாரா இது என்பது போல் இருக்கிறான்.அவனுக்கு புகைப்படம் எடுப்பதில் விருப்பம் என்பதே எனக்கு சில நாட்கள் முன்பு தான் தெரியும்.அதுவும் ஒரு சில கத்துக்குட்டி புகைப்படம் போல் இல்லாமல் அதில் ஒரு ரசனையும் ஒரு வித கலை உணர்வும் மேலோங்கி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இன்று அவனுடன் பேசியபோது அவன் பெர்லினில் இருப்பதாக கூறினான்.அங்கே புகைப்படம் எடுப்பதற்க்காக கிளம்பி வந்தானாம் .வானிலை சரி இல்லாததால் திரும்பி வருவதாக ரயில் நிலையத்தில் இருந்து கூறினான்.அவன் பயன்படுத்தும் கேமரா D800. மேலும் விபரம் அறிய அவனை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.<cpjayakumar@gmail.com>

அவன் எடுத்த புகைப்படங்கள் சில இந்தியா இந்த முறை வந்தபொழுது தேனியிலும் மதுரையிலும் எடுத்தவை.ஆச்சரியமாக இருந்தது.அவை எவ்வளவு அழகாக இருக்கிறது என்று.நான் புகைபடங்களை பற்றி பெரிய அளவில் ஆராய்ச்சி செய்தது இல்லை.ஆனால் அழகான புகைப்படங்கள் நம் மனதில் ஒட்டி விடுவது இயல்பு தான்.அவன் புகைபடத்தில் ஒரு தெருவில் காலியான ஒரு நிலையை அழகாக எடுத்து இருந்த புகைப்படமும் அந்த ஜெர்மனி கொடிகள் பறக்கும் நிலையில் உள்ள புகை படமும் நெஞ்சை அள்ள கூடியவை.அந்த தெருவின் அழகு அந்த வெளிச்சம் அந்த இரவு அமைதி அத்தனையும் ஆச்சரியம்.

அவன் புகை படங்களை பார்க்க கீழே சொடுக்கவும்.

நேற்று அலுவலகம் அருகில் தேநீர் குடிக்க சென்ற பொழுது என் நண்பன் ராமின் கண்கள் சிவந்து காண பட்டது.

"என்னடா கண் இப்படி இருக்கு ?"

"நேத்து தூங்கவே இல்லை ! மூணு மணி ஆயிடுச்சு" என்றான்


'குழந்தை மூணு மணி வரை விளையாடி கொண்டே இருந்தா"


பக்கத்தில் இருந்து அருள் என்ற நண்பனும் அதேயே சொன்னான்.அவன் தங்கை குழந்தையை அவன் அறையில் இரவில் தூங்க வைத்து விடுவதால் அவனும் அந்த குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தான் என்று சொன்னான்.நான் இதை ஆச்சரியமாக கேட்டு கொண்டிருந்தேன்.சில நேரம் யோசித்தும் கொண்டிருந்தேன்.நான் ஆர்வமாக கேட்பதை பார்த்து அருள் " நீ மட்டும் அதை வந்து பார்த்தே அடுத்த நாள் உன் ப்லாக் ல ஒரு பதிவு போட்ருவ என்று சொன்னான் .

நானும் உன்னிப்பாக அந்த கதைகளை கேட்டு கொண்டிருந்தேன்.ராமின் குழந்தை மின்விசிறி சுற்றுவதை பார்த்து சிரிப்பதை பற்றி சொல்லி கொண்டிருந்தான்.அவன் தூங்க நினைக்கும் பொழுது திடீர் என்று திரும்பி சிரிப்பதால் அவன் தூக்கம் காணாமல் போனதையும் அருள் அவன் வீட்டு ஏ .சி ஓடுவதை பார்த்து கை நீட்டி சிரிப்பதை அவன் ரசித்து கொண்டிருந்ததையும் சொல்லி கொண்டிருந்தான்.இரண்டு குழந்தைகளும் பிறந்து ஆறு மாதம் ஆகிறது.

குழந்தைகள் மனதில் என்ன ஓடி கொண்டிருக்கிறது என்பதை அறிய முற்பட்டால் நாம் தோற்று விடுவோம் என்பது உறுதி.இரண்டு மாதத்திற்கு முன்பு மதியின் திருமணத்திற்கு எங்கள் நண்பர் பரத் தன் குடும்ப சகிதமாக வந்து இருந்தார்.நான் அவர் குழந்தையை பற்றி மதி சொல்லி தான் தெரிந்து இருந்தேன்.அன்று வரை பார்க்க வில்லை.பரத் தன் உலகளாவிய வேலைகள் ( சினிமா ,புத்தகம் ,வெளிஊர் செல்வது ) எல்லாவற்றையும் மறந்து விட்டு குழந்தை பிறந்த உடன் அவனுடன் செலவழிப்பதை பார்க்க முடிந்தது.



போபோ(BoBo) என்று தான் அவர் குழந்தையை அழைத்தார்கள்.நான் பார்க்கும் பொழுது மிக மிக சாதுவாக தூங்கி கொண்டிருந்தான்.முழித்த உடன் அவன் உலகம் எங்கே என்று தேட ஆரம்பித்து விட்டான்.அவன் எல்லோரையும் கண் இமைக்காமல் ஒரு பத்து நிமிடத்திற்கு மேல் பார்க்கிறான்,எங்களுக்கு கண் வலிக்கிறது.அவனது ஆச்சரியங்களும் அந்த மழலை தனமும் இலசாக்குகிறது.அந்த கல்யாணத்தின் ஹீரோ அவன் தான். இந்த படம் போடுவதற்கு முன் பரத்திற்கு அழைத்து அனுமதி வாங்கி கொண்டேன்.


சில நேரம் அந்த குழந்தைகள் ஏற்படுத்தும் ஒலிகளை பதிவு செய்து வைத்துவிட்டு பின்னாளில் போட்டு காட்டி நீ என்ன சொன்னாய் என்று அவர்கள் வளர்ந்தவுடன் கேட்கலாமா என்று கூட தோன்றியது.அது சாத்தியம் ஆகா விட்டாலும் என் கற்பனைகளை கொஞ்சம் தீட்டி நேற்று கேக் பாயிண்ட் சென்ற பொழுது ஒரு குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தேன்.


அந்த குழந்தை என்னை பார்த்த உடன் என்னுடன் விளையாட நினைத்தது எனக்கும் சந்தோஷமாக இருந்தது.அலுவலகத்தில் சில கசப்பான அனுபவத்தால் நானும் துவண்டு போய் இருந்தேன்.அந்த குழந்தை என்னை பல விதத்தில் நிகழ்வுகளை மறக்க செய்தது ஆச்சரியம்.அவன் விளையாட ஆரம்பித்து முதலில் குறி வைத்தது என் கண்ணாடியை.நான் அங்கே அமர்ந்து ஒரு புத்தகத்தை படித்து கொண்டிருந்தேன்.அந்த புத்தகம் மிக தடிமனாக இருந்ததால் அவன் சிறு கைகளுக்குள் அடங்காமல் போனது.ஆனாலும் அவன் அந்த புத்தகத்தை பிடி கொள்ள அவன் போராடிய விதம் அந்த கடையே கொஞ்சம் ஸ்தம்பித்து விட்டது என்று தான் சொல்லவேண்டும்.அவன் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை என்று அவன் தந்தை கூறினார்.ஆனால் அவன் எழுப்பிய ஒலிகள் எல்லாம் ஒரு வித அர்த்தத்தையும் ஒரு வித கருத்துக்களை போலவே இருந்தது.அதை அறியும் பொழுது தான் மனிதன் அவன் குரூரத்தை விட்டு தன் இயல்பு மனிதத்திற்கு வந்தேன் என்று கொள்ளமுடியும்.



கடவுளின் எண்ணத்தில் குழந்தைகள் உலகத்தை முன்னே செல்வதின் இயங்குவதின் அடையாளமும்.
கார்ல் சாண்ட்புர்க் என்ற மேலை நாட்டு அறிஞர்


உண்மை தான்.இந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை என்ற கணக்கில் உலகம் சென்று கொண்டு தானே இருக்க வேண்டும்.


சில நேரம் யோசிப்பது உண்டு ! குழந்தைகள் என்பது கணவன் மனைவியின் அடையாளம் என்று.உண்மை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டவன் எல்லோரும் இதை ஒத்து கொள்கிறார்கள்.பெரும்பாலும் என் நண்பர்கள் காதலித்து கல்யாணம் செய்து கொண்டதால் அவர்கள் கருத்தை மட்டும் நான் முன்வைக்கிறேன்.தங்கள் போராட்டம்,கனவுகள் ,ஸ்பரிசம்,இருவருக்கும் இடையில் இருக்கும் ஒரு வித நெருக்கம் ,கண்ணீர்,எல்லாம் ஒரு குழந்தையால் மாறி போய் சந்தோஷமாக இரு துருவங்களும் இணைந்து கொண்டு ஒரே கனவாக ஒரே எண்ணத்துடன் இருக்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது ஆச்சரியம் தருகிறது.

உனக்கு மட்டும் ஒரு குழந்தை பிறக்கட்டும் நீ எப்படி முதல் நாள் படத்துக்கு போறே ன்னு பார்க்கிறேன் " என்று பலர் என்னை பார்த்து சொல்லி இருக்கிறார்கள்.அது உண்மையாக இருக்கலாம்.அந்த தருணத்தில் அதை மீறி உலகம் இல்லை .ஒரு குழந்தை ஒரு மனிதனின் அத்தனை கடந்த காலத்தையும் அழித்து விட்டு புதிதாக கனவு காண சொல்லித்தருகிறது.அவன் தேவைகளும் அவன் ஏக்கங்களையும் புரிந்து கொள்ள கணவனும் மனைவியும் ஒரு வட்டத்திற்குள் இருந்து சமரசம் கொள்வது என்பது அந்த குழந்தையின் இறகுகளை பறக்க பயிற்றுவிக்க தான்.அந்த இறகுகள் அந்த குழந்தையின் கால்கள் வளர வளர சிறியதாக ஆகுவது உண்மை.மழலை தனம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
மழலை என்பது ஒரு மொழி என்பதை விட ஒரு உலகம்.அந்த உலகம் பல மனிதர்களுக்கு இன்று அவர்கள் தினசரி வாழ்கையில் இருந்து ஒரு வடிகாலாக அமைந்து இருக்கிறது.மழலை பேசி கொஞ்சும் குழந்தைகள் இருக்கும் வீடு ஆனந்தமாக இருக்கும் என்பது கூற்று .ஆனால் உண்மை என்னவென்றால் குழந்தைகள் நமக்கு பல விதத்தில் பல அறியாமைகளையும் ,உண்மைகளையும் தோண்டி எடுத்து கற்று தருகின்றன.சில நேரம் குழந்தைகளுக்கு இருக்கும் இன்பங்களும் ,ஆச்சரியங்களும் நமக்கு புரியாமல் போனாலும் அந்த நிமிடத்திற்கு நாம் அதை ரசிப்போமே அது தான் நமக்குள் ஒளிந்து இருக்கும் மழலை தனம்.

ஏன் சிரிக்கிறான் என்று காரணம் தேடாமல் அவனுடன் சிரிக்கும் பொழுதுகள் மழலை தனம் தான்.அதற்கு விளக்கங்கள் வேண்டாம்.குழந்தை என்ற ஒரு அதிசியத்தை பருவத்தின் முதலிலும் கடைசியிலும் வைக்கிறான் ஆண்டவன்.என்ன கடைசியில் இருக்கும் மழலை தனத்தை பிற மனிதர்கள் நேசிப்பது இல்லை.வயதான பிறகு வரும் மழலை தனம் எரிச்சலாக ஆகி போனது இன்று ஒரு மறுக்க முடியாத நிலவரம்.


சில நேரம் இந்த காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.அவர்கள் எங்கோ பிறந்து ,எங்கோ வளர்ந்து,எங்கோ இணைந்து.எனக்கு நீ என்று கொண்டு ஒரு சில கோட்பாடுகள் கொண்டு ,கனவுகள் கொண்டாடி,நினைவுகளை ரசித்து,பெற்றோரை எதிர்த்து,பெற்றோரை மதித்து திருமணம் செய்து உறவு மேலோங்கி, குழந்தை என்று ஒன்று என்ற அவர்கள் வாழ்வு முறை ஆதர்சனமாக இருக்கிறது என்று தோன்றும்.பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் இணைப்பு ஒரு குழந்தையால் நேருகிறது என்ற சம்பவம் இன்றும் உலகம் முழுவதும் நடக்கிறது.நடக்கும்.கோபப்பட்டு தூக்கி எறிந்த அப்பா பேரனின் ஒரு சிரிப்பால் எல்லாவற்றையும் மறந்து மகளை கட்டி அணைப்பது சினிமாவில் மட்டும் அல்ல உண்மையிலும் நடக்கும்.

உண்மை சொல்லவேண்டும் என்றால் நான் பிறந்த பிறகு தான் என் தாய் வீட்டிலும் ,தந்தை வீட்டிலும் என் பெற்றோருடன் பேசினார்கள் என்பது நன்றாக இருக்கிறது அல்லவா.முப்பது வருடத்திற்கு முன்பு பெற்றோரை எதிர்த்து கல்யாணம் செய்து கொள்வது அப்பொழுது தமிழ் சினிமாவில் கூட வரவில்லை. எங்கோ செல்கிறது என் எண்ணங்கள் !!!!!!!!!!

இப்பொழுதெல்லாம் நான் சனி ஞாயிறு கேக் பாயிண்ட் சென்று நேரம் செலவழிப்பது என் சுயநலம் என்று கூட கொள்ளலாம்.ஆனால் குழந்தைகள் என்பது உலகில் ஒரு நிரந்தர அதிசியம் .சந்தோசம்.

Diaper backward spells repaid. Think about it. Marshall McLuhan.

நல்ல இருக்கு அல்லவா .அது தான் உண்மை.

பரத் ,ராம்,அருள் எல்லோரும் கொஞ்சம் குழந்தைக்கு சுத்தி போட்ருங்க என் சார்பாக. :P

இதை சொல்ல வேண்டும் என்ற உந்துதலில் எழுத நினைக்கவில்லை.ஆனால் அன்று நான் என் வேலையில் இருந்து வந்து எதோ ஒரு புத்தகத்தை படித்து கொண்டிருந்தேன்.படித்து கொண்டிருக்கும் பொழுது என் மனம் புத்தகத்தில் ஒட்டவில்லை என்ற எண்ணம் எனக்கு மேலோங்கி கொண்டிருந்தது.சில நினைவுகள் அதை நிலையோடு படிக்க விடாமல் செய்து கொண்டிருந்தன.நான் கடிகாரத்தை பார்த்தேன்.மணி 12.40 நான் என் நினைவு தெரிந்த வரை ராக்கோழி தான்.அதனால் நான் தூங்க நினைத்தாலும் எனக்கு தூக்கம் வராது என்று தெரியும்.புத்தகத்தை மூடி வைத்து விட்டு எதாவது படம் பார்க்கலாம் என்று டி வீ டீ யை தேடினால் என் மனம் அதிலும் ஒப்பவில்லை.அடுத்த நாள் பணிக்கு தாமதமாக செல்லலாம் என்று எனக்கு தெரியும்.அதனால் கொஞ்சம் அதிக நேரம் முழித்து விட்டு காலை மெதுவாக எழும்பலாம்.

ஒரு சிகரட்டை பற்ற வைத்து கொண்டு அண்ணா நகர் ரோட்டை என் பால்கனி யில் இருந்து பார்த்து கொண்டிருந்தேன்.அந்த வாகனங்களும் ,என் வீட்டின் வாசலில் இருக்கும் ஒரு கை ஏந்தி பவனும்,அந்த மூடி இருந்த ஜி ஆர் டி நகை கடையும் சில மனிதர்களும் என் மனதில் ஒரு ஆர்வத்தையும் தரவில்லை.தினமும் பார்க்கும் காட்சி போல் இருந்தது.உண்மை தானே அவர்களை தினமும் தானே பார்க்கிறேன்.கீழே இறங்கி போய் கார்த்திக் டிபன் சென்டெர் சென்று சாப்பிடலாமா என்று யோசித்தேன்.ஆனால் சோம்பலாக இருந்தது.கார்த்திக் டிபன் சென்டெர் திறந்து இருப்பது என் வீட்டின் இருந்து பார்க்கும் பொழுதே தெரிகிறது.

மெட்ரோ பிளஸ் இல் இந்த வாரம் எதாவது படம் வர போகிறதா என்று பார்த்தேன்Quantum of Solace பற்றி விளம்பரம் இருந்தது.சிகரட் முடியும் தருவாயில் நாளிதழை மூடி வைத்து விட்டு என் செல்போனை எடுத்தேன்.சிகரட் முடிந்து போனதால் மேலும் சிகரட் இருக்கிறதா என்ற நினைப்பு தொற்றி கொண்டது.

என் செல்போனில் யாருக்காவது அழைத்து பேசலாம் என்று நினைத்து கொண்டு தேடினேன்.யாரிடமும் பேசவும் மனம் இல்லை.நான் எப்பொழுதும் பேச நினைக்கும் எண்கள் இன்று என் அழைப்பை ஏற்காமல் போகலாம் என்று எனக்கு தெரியும்.சில நேரம் அப்படியே அமர்ந்து விட்டு இந்த இரவில் ஒரு நடை நடக்கலாம் என்று தோன்றியது.சாப்பிட செல்ல இருந்த சோம்பல் ரசிக்க நினைக்கும் பொழுது தோன்றவில்லை.அதற்குள் அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு வர நான் என் கம்ப்யூட்டரில் சில மெயில்கள் அனுப்பி விட்டு மறுபடியும் அந்த அழைப்பு வரவே கொஞ்சம் கொஞ்சமாக இரவு வயதாகி கொண்டிருந்தது.இரவில் புகைக்கும் பொழுது மட்டும் ஏன் மனம் ஒரு விதமாக ஒரு தனிமையுடன் உணருகிறது என்று தெரியவில்லை.அதுவும் அன்று என் நண்பர்கள் யாரும் இல்லாததால் தனிமை என்னை மேலும் தொற்றி கொண்டது போல் உணர்ந்தேன்.

நான் அணிந்து இருந்த ஷார்ட்ஸ் ,டி ஷர்ட் உடனே வெளியே கிளம்பினேன்.மணி ஒன்றை தாண்டி இருந்தது.வீட்டின் சாவியை கையில் எடுத்து கொண்டு ஒரு ஐம்பத்து ரூபாய் மட்டும் எடுத்து கொண்டேன்.என் அபார்ட் மென்டில் இருந்து வெளியே வரும் பொழுது சிலர் நடந்து செல்வதை பார்க்க முடிந்தது.ஒரு போலீஸ் கார் என் முன்னே வேகமாக சென்று கொண்டிருந்தது.மற்ற படியில் வேறு எதுவும் தென்பட வில்லை.மூடப்பட்ட கடைகள்,கை ஏந்தி பவனில் இருந்து கொட்டப்பட்ட இலைகள் ,அதை தாண்டி நிற்கும் சில நாய்கள் என்று கண்ணில் பட்டது.சாலை விஸ்தாரமாக இரவில் தெரிகிறது.இரவில் சாலை மிக பிரமாண்டமாக தெரிவது ஒரு அழகு. ரோட்டில் இருந்து பார்க்கும் பொழுது எல்லா ட்ராபிக் சிக்னலும் மஞ்சள் கண்களால் அடித்து கொண்டிருந்தன.என் நண்பன் சொல்லுவான் அந்த விளக்குகள் எதோ சொல்வது போல் இருக்கும் என்று ,எனக்கு அப்படி தோன்றியது இல்லை ஆனால் அவைகளில் ஒரு ஊமை தனம் ஒளிந்து இருக்கும்.அந்த விளக்குகள் ஒரு அழகு தான்.

ஆட்களே இல்லாத சாலையில் நான் மட்டும் நடந்து செல்கிறேன்.அந்த நிமிடம் நான் மட்டும் தான் இந்த உலகில் விழித்து இருக்கிறேன் என்ற உணர்வு நேருகிறது.சில நேரம் இந்த இரவு அப்படியே இருந்து விட கூடாதா என்று கூட தோன்றுகிறது.இரவில் எத்தனை விஷயம் இருக்கிறது என்று தெரிகிறது.எத்தனை விஷயம் ஒளிந்து இருக்கிறது.எத்தனை விஷயம் சிரிக்கிறது.எத்தனை விஷயங்கள் அழுகிறது.பல உறவுகள் முடிகின்றன ,மூடி மறைகின்றன.உண்மைகளும் பொய்களும் மாறி மாறி வெளியே வருகின்றன.இரவில் எத்தனை நினைவுகள் தோண்ட படுகின்றன.ஆச்சர்யமாக இல்லாவிட்டலும் அது மறுக்க முடியாத நியதி .இரவு மனிதனுக்கு ஒரு வடிகால்.இரவு மனிதனுக்கு ஒரு சுதந்திரம்.இரவை தாண்டி மனிதன் விழிக்கும் பொழுது தான் அவன் நிலைகள் அவன் கண் முன்னே வந்து நிற்கின்றன.இரவில் அவன் சுகிக்கிறான்.

அன்று தோன்றிய இரவும் ஒரு மிக சாதரணமான இரவு தான்.ஆனால் அதில் உண்மைகளை நான் உணர்ந்து கொண்டிருந்தது தான் எனக்கு அந்த இரவின் அருகாமையில் கொண்டு வைத்து கொண்டிருந்தது.ஒரு வித தியானம் போல் சென்று கொண்டிருந்தது அந்த இரவு.என் மனதை ஆர்பரிக்காமல் என்னை எந்த வித சலனத்திலும் கொண்டு போய் விடாமல் இரவை கடக்க உதவி கொண்டிருந்தது அங்கே சூழ்ந்து இருந்த அமைதி.இரவிற்கும் அமைதிக்கும் உள்ள வேறுபாடுகள் அன்று தான் கொஞ்சம் தெளிவாக தெரிந்தது,இரவில் சலனப்படும் எத்தனை இரவுகள் எத்தனை என் முன்னே வந்து போய் இருக்கின்றன என்று என் நினைவில் வந்து சென்றது ஒரு நிமிடம்.

ஒரு மெல்லிய காற்றில் ஒரு சில சிலிர்ப்புகள் நேர்ந்தது உண்மை தான்.ஆனால் அதை எல்லாம் மீண்டு நடை சென்று கொண்டிருந்தது.வீட்டின் விளக்குகள் எல்லாம் அணைந்து இருந்தன.தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.என்ன மணி ஆகி இருக்கும் என்ற ஆர்வத்தில் என் கடிகாரத்தை பார்க்க நினைத்தேன்.கடிகாரத்தை எடுத்து வரவில்லை.சிகரட் பற்ற வைத்து கொண்டேன்.புகைக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்று எனக்கு தெரியும் ,நான் குறித்து இருந்த நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.

காதல் காமம் கோபம் எதை தாண்டி மனம் இருக்கும் பொழுது எவ்வளவு சுமூகமாக மனம் இயங்குகிறது என்று நான் உணர்கிறேன்.ஒரு மூன்று கிலோ மீட்டர் நடந்து இருப்பேன் என்று நினைக்கிறேன்.என் கால்கள் கொஞ்சம் வலிக்கின்றன.கண்கள் இன்னும் தூங்க மறுக்கின்றன.

எதோ ஒரு நினைவில் இது தோன்றியது "பல பொய்கள் உலகை சுற்றி கொண்டிருக்கின்றன , கொடுமை என்னவென்றால் அதில் பாதி உண்மை".அது போல தான் இந்த தனிமையும்.இன்று இந்த தனிமையில் இரவு எனக்கு பகலை விட வெளிச்சமாக தெரிகிறது.இரவு என்னை பற்றி எழுத ஒரு காகித்தை போல் படர்ந்து இருப்பது போல் இருந்தது.யாரோ சொன்ன நினைவு " இரவு நட்சத்திரத்தையும் பெண்ணையும் வெளிச்சமாக காட்டுகின்றன !"

யாரோ எனக்காக இந்த இரவில் மகிழ்ச்சி கொள்ளலாம் ,யாரோ எனக்காக கண்ணீர் சிந்தலாம் ,இந்த இரவில் என்னை கனவில் கொள்ளலாம்.யாரோ தூக்கத்தில் இருந்து விழித்து நான் என்ன செய்கிறேன் என்று யோசிக்கலாம். ஆனால் எனக்கு சத்தியமாக அதை அறிய வாய்ப்பில்லை.ஆனால் இதுவெல்லாம் எங்கோ ஒரு இடத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.அது எல்லாம் உண்மைகள்.கற்பனைகளையும் கனவுகளையும் இணைக்கும் இரவு ஒரு வித மயக்கம் தான்.இரவை ரசிக்கிறேனா அல்ல இரவு என்னை ரசித்து கொண்டிருக்கிறதா என்று தெரியாமல் நான் வீட்டை நோக்கி திரும்பி கொண்டிருந்தேன்.

அதே வெளிச்சங்கள் அதே நிசப்தங்கள் ,அமைதியில் கேட்கும் பேரிரைச்சல் இந்த முறை என் எண்ணங்களில் கேட்கின்றன.இரவு ஒவ்வொரு நொடிக்கும் வித்தியாசமாக தெரிகிறது,போகும் பொழுது இருந்த பக்குவம் வரும் பொழுது என்னிடம் இல்லை.என் மனம் எதோ பெண்ணை பற்றி நினைத்ததாலோ என்று கூட தோன்றுகிறது.வேகம் கூடுகிறது.கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறது.இந்த பயணம் எங்கு முடியும் என்று தெரியவில்லை ஆனால் அந்த சாலைகளும் இந்த சுற்றிஇருக்கும் சார்ந்தவைகளும் நாளை மறைய போவதில்லை.இரவு மடிந்து கொண்டிருக்கின்றது .வீட்டை அடையும் பொழுது மணி மூன்றை தாண்டி இருக்க வேண்டும்.உறங்கி விட்டேன்.எவ்வளவு தான் இரவு அழுத்தினாலும் அடுத்த நாள் விடிந்து தானே ஆக வேண்டும்!!!

நான் அவள் அது ,எங்கே ? என்ற ஒரு கதையை எழுத ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது.இன்றும் அதை என்னால் ஒரு திருத்தப்பட்ட படைப்பாக கொண்டு வர முடியவில்லை .அதற்கு என் சோம்பல் மட்டுமே காரணம் என்று சொல்லலாம்.நான் எழுதியதை திருத்துவதற்கு நானே திரும்ப படிக்கும் பழக்கம் இருந்தது இல்லை.அதனாலே என் எழுத்துக்களில் சில பிழைகள் இருப்பது அதிகமாக இருந்தன.இப்பொழுது அது குறைந்து இருக்கும் என்று நம்புகிறேன்.நான் அவள் அது எங்கே வை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு அதை ஒரு திருத்தப்பட்ட தெளிவாக மறுமுறை edit செய்து விட்டு PDF இல் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்.என்னவோ புதியதாக இந்த பக்கத்திற்கு வருபவர்கள் அதை படித்து விட்டு பல விளக்கங்கள் கேட்டு இருக்கிறார்கள்.பலர் சொல்லும் ஒரே விளக்கம் இது படிக்க கதை மாதிரி தெரியலையே என்ற ஒரே விஷயம் தான்.எது எப்படி இருந்தாலும் ஒரு விஷயம் நான் மீண்டும் ஒரு நல்ல காதல் கதையை தேடி கொண்டிருக்கிறேன்.இந்த முறையும் கிருஷ்ணாவையே மீண்டும் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்.வித்யாவுக்கு விடை கொடுத்து.சில விஷயங்களை கதையில் மட்டுமே சொல்ல முடியும் .அது போல் தான் இந்த ஒரு வருடத்தில் நடந்தவையாக !


"ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கி பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்" - அசோகமித்ரன்

"மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ‘ஜெயகாந்தன்’ என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர் ‘தத்ரூபம்’ என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான சமாச்சாரம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப் புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். " - வண்ணநிலவன்

" பாரதியார் வாழ்ந்த காலங்களில் கௌரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் நோபல் பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கௌரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்பÊடுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கௌரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்." - எஸ்.ராமகிருஷ்ணன

" ஜெயகாந்தன் ஒரு நீராவி என்ஜின் போல ஆற்றலும் வேகமும் கொண்ட படைப்பாளி என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் நீராவி என்ஜின்கள் கடந்த காலத்தின் அடையாளம். " - மாலன்
இதோ இப்பொழுது தான் கங்கை எங்கே போகிறாள் என்ற புத்தகத்தை படித்து முடித்தேன்.ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற மறுக்க முடியாத ஒரு படைப்பின் தொடர்ச்சி.இதை பற்றி எழுதுவதற்கு கூட ஒரு தகுதி வேண்டும் என்று நினைக்கிறேன்.அந்த தகுதி இல்லா விட்டாலும் அதை நான் பின்னோக்கி (புத்தகத்தை ) சென்று விட்டு அதை பற்றி எழுத தயாராகி கொள்கிறேன்.ஜெயகாந்தன் என்ற மனிதனின் எழுத்துக்கள் தான் எப்படி எல்லாம் சீறி பாய்கின்றன.வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் அவர் எழுத்துக்கள் எப்படி எல்லாம் விமர்சிக்கின்றன,எடுத்து உரைக்கின்றன.அவர் எழுத்துக்களை படித்து எனக்கு இது பிடிக்க வில்லை என்று கூறவே முடியாது.அப்படி ஒருவர் இருந்தால் நான் அவரை சந்திக்க நினைக்கிறேன்.

யாரும் இதில் முரண்பட முடியாது.தீபாவளி என்ற குதூகலத்தை ரசிக்காமல் இருந்து இருக்க முடியாது.தீபாவளி என்பது ஒரு பண்டிகை என்பதை தாண்டி மனதளவில் தரும் ஒரு நிறைவாய் எந்த ஒரு நாளும் நமக்கு தந்து இருக்க முடியாது.அந்த நிறைவிற்கு ஒரு வருடம் காத்திருந்த மனிதர்களில் நாம் எல்லோரும் அடங்குவோம் .இந்தியா முழுவதும் அந்த பண்டிகை இருந்தாலும் என் வாழ்க்கை முறைக்கு தெரிந்த வரை நான் தமிழ் நாட்டில் மட்டுமே அதை பற்றி அறிந்து இருக்கிறேன்.பொங்கல் திரு நாளிற்கு நேரும் உற்சாகத்தை விட தீபாவளி ஒரு படி மேல் என்று எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

அன்றைய தினங்களில் அந்த உற்சாகம் ஒரு பதினைந்து நாட்கள் முன்னதாகவே தோற்றி கொள்ளும்.பட்டாசு என்ற ஒரு மாய பொருளிற்கும் நண்பர்களுடன் கூத்தடிக்கும் அந்த பொழுதிற்க்கும் நாட்களை எண்ணி எண்ணி அந்த நாள் வரும் பொழுது எத்தனை ஆர்பரிப்புகள் எத்தனை கும்மாளங்கள் .காலை வீட்டில் நடக்கும் எண்ணை தேய்ப்பு,பூஜை எல்லாம் முடிந்து டி வீ எஸ் சேம்ப்(TVS Champ ) வண்டியை எடுத்து கொண்டு தெரு தெருவாக ஒவ்வொருவனாக அள்ளி போட்டு கொண்டு முதல் நாள் படம் செல்ல ஒரு ராஜ உத்திகளே நடக்கும்.பத்து பதினைந்து படங்களில் இருந்து முதல் படமாக தேர்ந்து எடுத்து பார்ப்பது என்பது ஒரு கடினமான ஒரு வேலை.தளபதி ,குணா போன்ற படங்கள் வந்த பொழுது இருந்த கணிப்புகள் என்னும்மறக்க முடியாதவை.எல்லாம் முடிந்து வெடிகள் ,சக பள்ளி பெண்களின் வீட்டின் வெளியே சுற்றுவது,அவர்களது எரிச்சல் பார்வைகளை எல்லாம் பரிவான பார்வைகள் என்று எடுத்து கொண்டு மிதப்பது ,மாலை நேரம் தூர்தர்ஷனில் எதாவது ஒரு படம் ,பின் இரவில் மீண்டும் ஒரு நண்பர்கள் மாநாடு .அது புரோட்டா சாப்பிடுவதில் சென்று முடியும்.இரவு நேரம் வெடி .பட்டாசு அந்த சந்தோஷமும் அந்த நிறைவும் அடுத்த வருடம் வரை தொடரும்.இது கடந்த காலம்

இன்று ?

மூன்று மாதத்திற்கு முன்பு காலை எட்டு மணிக்கெல்லாம் ஐ .ஆர் .சீ டி .சீ(irctc) இணைய தளத்தை திறந்து வைத்து கொண்டு கிடைக்குமா கிடைக்காதா என்று தவம் இருந்து ஆர் .எ.சீ டிக்கெட் ஆக இருந்தாலும் ஒரு டிக்கெட்டை புக் செய்து கொண்டு தள்ளுபடி விலையில் ஒரு லீவிஸ் ஜீன்ஸ் மற்றும் மெகா மார்டிலோ அல்ல பிராண்ட் பாக்டரி இலோ ஒரு ஷர்டை எடுத்து கொண்டு அமர்ந்து இருப்போம்.நாள் நெருங்கும் பொழுது மேனேஜர் இடம் சென்று பல்லை இழித்து கொண்டு ஒரு நாள் அதிகமாக லீவ் வாங்குவோம்.எல்லாம் முடிந்து தீபாவளிக்கு கிளம்பும் பொழுது டிராபிக் நெரிசலை தாண்டி ரயில் நிலையம் அடைவதற்குள் ஆட்டோ காரனிற்கு இருநூறு ரூபாய் அழுது விட்டு ரயில் ஏறுவோம்.

ஊருக்கு சென்று உற்சாகத்தோடு கொண்டாடலாம் என்று சென்ற எனக்கு நேர்ந்தது எல்லாம் மாறாக.இந்த வருடத்தை போல் தமிழ் சினிமாவிற்கு ஒரு சோகமான தீபாவளி இருந்தது இல்லை.இருபத்து வருடங்களில் நான் பார்க்காத தமிழ் சினிமா.இரண்டே இரண்டு படங்கள் .இரண்டும் அதி நவீன அறுவைகள்.நண்பர்களை பார்க்கலாம் என்று நினைத்தால் சிலர் அமெரிக்காவில் இருக்கிறார்,சிலர் தலை தீபாவளி கொண்டாடி கொண்டிருக்கிறார் ,சிலர் டிக்கெட் கிடைக்கவில்லை என்கிறார்.தம்பியும் தீபாவளி அன்று காலை வந்து இறங்கினான்.வந்த உடன் அவன் அமர்ந்தது டி வி முன்பு.

உலகத் தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்ற விஷயம் நம்மை எவ்வளவு மாற்றி விட்டது.இன்று பல தீபாவளிகள் கொண்டாட படுவது வடிவேலு உடனோ அல்ல ஜோடி நமĮ