ஆரம்பித்த உடனே
முடிந்த போன வீட்டிற்கு
பத்தாயிரம் ருபாய் வாடகை !
மாதம் பதிமூன்றாயிரம்
இ எம் ஐ கட்டும் ,
பரந்து விரிந்த
சொந்த வீட்டிற்கு இரண்டாயிரம் வாடகை.
ஆரம்பித்த உடனே
முடிந்த போன வீட்டிற்கு
பத்தாயிரம் ருபாய் வாடகை !
மாதம் பதிமூன்றாயிரம்
இ எம் ஐ கட்டும் ,
பரந்து விரிந்த
சொந்த வீட்டிற்கு இரண்டாயிரம் வாடகை.
அதிகம் எழுதாமல் இருந்தாலும் கொஞ்சம் வாசித்து கொண்டு இருந்தேன்.இது கிரிக்கெட் காலம் என்பதால் ,கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படும் இணையதள செய்திகள் அதிகம் வாசித்தேன்,பேக் ஐ பி எல் பிளேயர் என்ற இணையம் பெரிய பரபரப்புக்கு உள் ஆனதால் அதை ஐ பி எல் சமயத்தில் அதிகம் வாசித்து வந்தேன்.கிரிக்கெட் நமக்கு அதிகம் ஊட்ட தேவை இல்லை தான்,ஆனால் கிரிக்கெட் பற்றிய கிசு கிசு எப்பொழுதும் சுவாரசியம் தான்.
இவை எல்லாம் இந்த தளத்தில் இருந்து வந்தாலும் அந்த மர்ம மனிதன் யார் என்ற முனைப்பிலே அது அதிகம் படிக்கப்பட்டது.மறைமுகமாக ப்ளாக் செய்வது ஒரு கோழைத்தனம் .ஆனால் அந்த மர்ம மனிதன் தன்னை ஐ பி எல் முடிந்த உடன் வெளிச்சத்திற்கு கொண்டு வர போவதாக அறிவித்து இருந்தான்.ஆனால் எல்லாம் ஒரு விளம்பரம் என்று மிக விரைவில் எப்பொழுது வந்து விட்டது.
இப்பொழுது அவன் உலக கோப்பை பற்றி எழுதுகிறான்.ஒரு சமயத்தில் தினமும் வசித்து வந்த நான் அவனது தொடர் பூச்சாண்டி எனக்கு எரிச்சல் தந்து விட்டது.அந்த கோழைத்தனமும் அந்த மறைமுக கிண்டலும் இனி எனக்கு சுவாரசியம் அளிக்க வில்லை.எதுவாக இருந்தாலும் மறைந்து இருந்து எழுதுவது ஒரு மிக பெரிய கோழைத்தனம்.நேற்று கூட என் நண்பர் படிக்கட்டில் இருந்து இறங்கும் பொழுது கூறினார் " Karthik Do you know Fake Ipl is back ,He is writing abt world cup "
" Yeah I came to know.This time I am not getting fooled.He is no body to tell us on Cricket,I have stopped reading him ,Reading him is Cheap !"
இந்த வாரம் ஆனந்த விகடன் படித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வாக்கியம் படிக்க வெட்கமாகவும் இருந்தது அதே நேரம் அது எவ்வளவு உண்மையாகவும் பட்டது.இங்கு அது வெறும் அரசியல் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை என்பது நடந்த பல விஷயங்களில் தெரிந்தது.அந்த வாக்கியம் ஈழத் தமிழ் மக்களை பற்றியது.
"கடலுக்கு அடுத்த பக்கத்தில் எட்டுக்கோடித் தமிழ் மக்கள் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கை பார்கிறார்கள்"
புது இடம் , புது வீட்டிற்கு மாறி இருக்கிறேன்,பல புதிய மனிதர்கள்,பல கட்டுபாடுகள் . எல்லாம் சரியாக பழக ஒரு மாதம் எடுத்து ஆகி விட்டது.அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நகர்ந்து வருகிறேன்.கம்ப்யுட்டர் முன் அமர வேண்டிய கட்டாயம் .எழுத இருக்கிறது.இனி தொடர்ந்து எழுதுவேன்.
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ! மிக பெரிய பெருமூச்சு இப்படி தானே எழுத வேண்டும்.
துவண்டு போன மனம்,
களைத்து போன உடல் ,
உடைந்த சில நம்பிக்கைகள்,
மிக்க கொடூரனமான வலிகள்,
அழ கூட முடியாத வயது
தூங்க முடியாத விழிகள் .
நம்பிக்கை சொல்லும் மருந்துகள் ,
ஆனால் கலையாத கனவுகள்
அது தான் இந்த மனிதன் என்று எனக்கு நானே சொல்லிகொள்கிறேன் .
இத்தனை ஆண்டுகள் நான் ஒரு தலைவலிக்கு கூட மருத்துவமனைக்கு ஒதுங்கியது கிடையாது. காய்ச்சலோ அல்ல வேறு பிணியோ எனக்கு கஷ்டப்படுதியாதாக நினைவில் இல்லவே இல்லை .ஆரோக்கியம் எனக்கு இருந்தது .ஒரு சில மாதங்களாக என்னால் தொடர்ந்து எழுத முடியாத நிலைமை இருந்ததற்கு காரணம் இருந்தது.நான் பணியை முடித்து வந்து பத்து மணிக்கு மேல் இரவு இரண்டு மூன்று மணி வரை எல்லாம் தொடர்ந்து எழுதிய மாதங்கள் உண்டு.
என் மனம் எழுத்தில் சுகபட்டு கொண்டிருந்தது ஆனால் என் கழுத்து சுகப்பட வில்லை என்பது சென்ற மாதம் தான் தெரிந்தது.முதுகு வலி கொஞ்சம் பாடாய் படுத்தி வந்தது.வலியை ஒரு மூன்று மாதம் தாங்கி வந்தேன் என்று கூட சொல்லலாம்.ஆனால் எல்லாம் மீறிய செயலாக இரண்டு வாரங்களுக்கு முன் கழுத்தின் ஒரு டிஸ்க் வெளியே வந்து என் வலது கை நரம்புகளை செயல் இழக்க செய்து கொள்ள ஆரம்பித்தன.அப்பொழுது தான் வலி என்ன என்று தெரிய ஆரம்பித்தது.மூன்று நாட்களில் படுத்த படுக்கை ஆகி போன சோகம்.படுக்க கூட முடியாத நிலை.மருத்துவர்களின் உடனடி தீர்வு அறுவை சிகிச்சை .
அந்த நாள் குறிக்க பட்டும் அது வரை வலியை பொறுக்க முடியாமல் தூக்க மாத்திரை யும் வலி நிவாரணியும் ஆறுதல் சொல்ல முடியாமல் இருந்த நிலை.மருத்துவமனையில் வாழ்நாளில் முதல் முறை சேர்க்க பட்டேன்.அந்த வலியிலும் எதாவது தேடி கொண்டிருப்பதை போல் விழித்து இருந்தேன்.இரண்டு நாள் முன்னதாகவே அறுவை சிகிச்சை ,அறிந்தவர்கள் படை சூழ பராமரிக்க பட்டேன்.இதில் விஷயம் என்ன வென்றால் கழுத்தின் நறும்புகள் உடலின் அத்தனை பகுதியையும் செயல் இழக்க செய்ய கூடிய திறன் கொண்டது .அதனால் எல்லோரும் பயந்தார்கள் ,எனக்கு அன்றைய பொழுதில் அந்த நரக வலியில் இருந்து வெளியே வரவேண்டும்.
Neuro Surgeon நம்பிக்கை கொடுத்தார் என்று சொல்லவேண்டும்.எல்லாம் முடிந்தது. மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை.அடுத்த நிமிடம் என் வலி இல்லை. நான் குணம் பெற்று கொண்டிருந்தேன்.வேறு சில வந்து சேர்ந்தன . ஆனால் அந்த சிகிச்சையால் பல பல கட்டுபாடுகள் பல எச்சரிக்கைகள் .பல சோர்வுகள்.இன்று நான் சுகம் தான் ,ஆனால் அந்த நம்பிக்கை இன்று இருக்கிறதா என்று எனக்குள் கேள்வி கேட்டு கொண்டே ஆஸ்பத்திரியில் பத்து நாள் கழித்தேன்.என் தந்தையுடன் பல வருடங்கள் கழித்து நேரம் செலவிட முடிந்தது.என் இயலாமை அவர் அன்பாக வெளிப்பட்ட நாட்கள்.
பல நல்ல இதயங்கள் வந்து ஆறுதல் தந்தன.சொற்ப நாட்களில் நான் துவண்டு போய் விட்டேன்.அந்த உற்சாகம் குறைந்து போனது என்று சொல்லலாம்.நான் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற வார்த்தை என்னை பாடாய் படுத்தியது.அதற்கு காரணம் இருந்தது.கழுத்தில் காலர் ,இடுப்பில் தையல் ,கழுத்தில் தையல் எனக்கே என்னை சுமக்க கடினமாக இருந்தது.உலகம் முழுவதும் எதோ வேளையில் இருக்கும் பொழுது நான் மட்டும் இங்கு படுக்கையில்?
புத்தகங்கள், புத்தகங்கள்!!! படிக்க ஆரம்பித்தேன்.பத்து நாட்கள் தந்தையுடன் விவாதித்து கொண்டிருந்தேன்.மீண்டும் தேடல் போல் இருந்தது.ஆனால் படுத்த நிலையில்.
சென்ற வியாழன் வெளியே வந்து உலகை பார்க்கும் பொழுது கஷ்டமாக இருந்தது.கண்கள் கூசியது.நேராக திருநெல்வேலி பயணம்.இரண்டு வாரம் ஓய்வு.இந்த ஓய்வு காலங்கள் பல நேரத்தை தந்து தந்து இருக்கின்றன.அது தன் இந்த மீண்ட குறிப்புகள்.
தொடரும்
மீண்டும் பழைய வேகத்தில் எழுத முடியாவிட்டாலும் ,குறிப்பு எடுத்து கொண்டிருக்கிறேன்.பின்னாளில் எழுத.
இந்த பாடல் மிகவும் நியாயமாக படுகிறது.மனதை வாசித்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.மனதை வருடுகிறது.
http://www.youtube.com/watch?v=ubtER-ECMwg&feature=related
So close, no matter how far
Couldn't be much more from the heart
Forever trusting who we are
No, nothing else matters
சில நேரம் மனிதர்கள் தராத சில சுகம் சில பொருட்கள் தரும்.நான் அடிக்கடி என் தம்பியிடம் சொல்லும் ஒரு விஷயம் " உனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்தா போய் எதாவது ஷாப்பிங் பண்ணு " என்று. நான் கல்லூரி சென்ற நாள் முதல் எனக்குள் அந்த பழக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்து வந்தது.இன்று வரை அது குறைய வில்லை.
வெளியில் சென்று எதாவது நமக்கு பிடித்த ஆடையோ அல்ல எதாவது ஒரு இசை தட்டோ வாங்கினால் உண்மையில் மனம் கொஞ்சம் இளசாக ஆகும் என்பது நான் இந்த பத்து வருடத்தில் கண்டு கொண்டது.சில வருடங்களாக நான் புத்தகமும் அதிகம் வாங்கி வருகிறேன்.அதனையும் மனிதர்களின் துணையை விட அதிக அளவில் சந்தோசம் தருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதில் செலவு இருக்கிறது என்பது உண்மை தான் ஆனால் அதில் ஒரு விதத்தில் நம் மனதை ரசிக்க உடன்படுத்துகிறோம் என்பது உண்மை.இந்த மாதம் எல்லா கடைகளும் தள்ளுபடி விற்பனை விளம்பரம் போட்டிருப்பது கொஞ்சம் அதிகம் செலவு வைக்கும் காரியம் தான்.இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பிராண்ட் வாங்கி முடித்த அடுத்த நாளே நமக்கு பிடித்த அடுத்த பிராண்ட் தள்ளுபடி விற்பனை ஆரம்பித்து இருக்கும்.இதை தவிர்க்க முடியாது.
சில நேரங்கள் நமக்கு பிடித்த ஆடையோ அல்ல எந்த பொருளையோ அணியும் சுகம் வருகிறது அல்லவா .அது ஏன் ? என்று யோசித்து பார்த்து உண்டா ? அதற்கு காரணம் இது தான்.நமக்கு பிடித்தவற்றை செய்யும் பொழுது நமக்கு சந்தோஷம் நேருகிறது.அது பொருட்களிலும் தான் .
இந்த ஒரு மாதத்தில் நான் வாங்கிய சில பொருட்கள் பாசில்(Fossil) கடிகாரம் ,IVth generation IPOD ,நண்பன் அசலம் வாங்கி வந்த போஸ் (Bose Headphone)மற்றும் சென்னை புத்தக கண்காட்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் .
அனைவருக்கும் சொல்லி கொள்வது என்னவென்றால் ,என்னுடைய லேப்டாப் கொஞ்சம் பழுதடைந்து அதை சரி செய்ய தாமதம் ஆனதால் பதிவுகள் இட முடியாமல் போனது.நாளை முதல் பதிவுகள் ஒழுங்காக இடப்படும்.
நீங்கள் நினைப்பது சரியா தவறா என்று முடிவெடுக்க முடியாமல் திணறும் பொழுது ?
மிக மிக முக்கியமாக ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைத்தால்.நல்ல இசை கேட்க வேண்டும் என்று நினைத்தால்?
இந்த பகுதிக்கு வந்து வெற்று கையுடன் திரும்பிய என் நண்பர்களுக்கு !
நீண்ட பயணத்திற்கு பிறகு ஒரு நிறுத்தம் தேவை.மூண்ட கனவின் பிறகு ஒரு விழிப்பு தேவை.அழைப்புகளுக்கு ஒரு நாள் திரும்பி தான் ஆக வேண்டும்.இந்த வருடம் ஒரு பயணம் .ஒரு வருடத்தில் எதுவும் மாறாமல் இருந்தது.வாழ்க்கை சக்கரம் சுழலும் விதத்தில் நான் என் பிம்பத்தை கூட வெறுத்து கொண்டிருந்தேன்.இன்பங்களும் ,களிப்பும் போலியாக எனக்குள் தெரிந்து கொண்டிருந்தது.என்னை மீறிய ஒரு வித வயது என்னை ஆக்ரமித்து கொண்டிருந்தது.என்னை ஆர்பரித்து கொண்டிருந்த ஒவ்வொரு காலகட்டங்களும் விடை இல்லாமல் என்னை பார்த்து கொக்கரித்து கொண்டிருந்தது.
இன்று கேட்கலாம் இந்த பகுதியில் இந்த வருடத்தில் எழுதாமல் போன காலங்கள் என்று எடுத்து கொண்டால் இந்த ஒரு மாதம் மட்டுமே .எழுதாமல் போனதற்கு காரணங்கள் இல்லை.ஆனால் மாற்றங்கள் இருக்கின்றன.மாற்றங்கள் நிலையானது இல்லை என்று தெரிந்தே இந்த மாற்றத்தை ஏற்று கொண்டிருக்கிறேன்.என்னை பற்றி படித்து படித்து சலித்து போனவர்களுக்கு இந்த பகுதியில் புதியதாக நான் ஒன்றும் சொல்ல போவதில்லை.
குழப்பவில்லை .இந்த வருடம் மிக மிக தெளிவான ஒரு படிப்பினை எனக்கு.பல விஷயங்கள் எனக்குள் தெளிந்து இருக்கின்றன.சில காயங்கள் ஆறி போகும் என்று தெரிந்து இருக்கிறது.ஒரு முல்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்ற கூற்று உண்மை என்று புரிகிறது.தெரிந்தே ஒரு முள்ளை நான் கையில் எடுத்து இருக்கிறேன்.ரோஜாவை ரசிக்கும் வரை எனக்கு வலி தெரிய போவதில்லை.இந்த வருடம் அதிகமாக யோசித்து இருக்கிறேன்.அதிகமாக தேடி இருக்கிறேன்.தேடல்கள் எனக்கு வடிகாலாக அமைந்து இருந்தது.அதில் இருந்து வழிந்தது எல்லாம் எனக்குள் இருந்த ஒரு வித தேங்கிய வெற்று நிஜங்கள்.
ஒரு சில நாட்கள் என்னால் எழுத தோதாக அமையாமல் போனபோது புலம்பி இருக்கிறேன்.கண்ணீரையும் ,காணலையும் துணையாக கொண்டு நிம்மதியை தொலைத்து கொண்டிருந்தேன்.வித்தியாசமாக செய்கிறேன் என்று நினைத்து கொண்டு ஆதி காலம் முதல் மனிதன் செய்து வந்த அதையே செய்து வந்திருக்கிறேன்.எங்கெல்லாமோ இளைப்பாறி இருக்கிறேன்.எங்கும் தாகம் தீராமல் சுற்றி வந்து இருக்கிறேன்.என்னை சுற்றி இருக்கிறவர்கள் எல்லாம் வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள்.அது தான் அடுத்த கட்டமா என்று கூட ஏற்று கொள்ள மனம் தயங்கி கொண்டிருந்தது.ஆனாலும் அவர்களின் தீர்மானங்கள் மேடை ஏறும் பொழுது நான் உடன் இருந்து வாழ்த்தி வந்து இருந்தேன்.வாழ்த்துக்களில் எத்தனை உண்மை இருந்ததோ அதனை ஏக்கமும் இருந்தது.அந்த ஏக்கங்கள் எல்லாம் என் சிந்தனைகளில் ஊறி கொண்டிருந்தது.என்னால் அந்த தீர்மானங்கள் எடுக்க முடியவில்லை என்று அல்ல ! அந்த தீர்மானங்கள் அவர்களுக்கு கட்டாயமாக படும்பொழுது எனக்கு ஏன் படவில்லை என்று.பல புதிய உறவுகளை அவர்கள் ஒரே நாளில் ஊரறிய உருவாக்கும் பொழுது பரவசம் இருந்தது.ஆனால் என்னால் என்னை அதே போல் ஒரு மேடையில் வைத்து பார்க்க முடியவில்லை.
நான் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு காரியமும் முட்டாள்தனமான ஒரு வித பத்தாம் பசலித்தனமாக இருந்தது.சினிமாவில் வரும் கதாபாத்திரத்தை உருவாக்கி கொண்டு நான் ஏன் அந்த தியாகி வேஷம் போட்டு கொண்டு அலைந்தேன் தெரியவில்லை.ஏன் அந்த வேட்டை நாய் வேஷம் போட்டு கொண்டு வேட்டை ஆடினேன் தெரியவில்லை.கண்கள் பார்த்த எல்லாம் மாயை என்ற கட்டாயமான மன நிலையில் தள்ளப்பட்டு கொண்டிருந்தேன் என்பதை ஒத்து கொள்ளவேண்டும்.உண்மை எதிலும் இல்லை என்பதை முழுமையாக உண்மை என்று கொண்டிருந்தேன்.
எழுதியதும் ,படித்ததும் ஒரு விதத்தில் என்னை பலவாறாக அலசி கொண்டிருந்தது என்று சொல்லவேண்டும்.மாற்றங்கள் ஒரு நாளில் நடக்கலாம் ஒரு யுகத்தில் நடக்கலாம்.பல கருத்துக்கள் எனக்குள் ஒரு வித தேக்க நிலையை மாற்றி ஒரு வித சீரான சிந்தனையை தந்து இருக்கிறது.என் செயல்களுக்கு விளைவுகளை அந்த செயல் செய்யும் முன்னவே எனக்கு தெரிகிறது.இது எவ்வளவு பெரிய மாற்றம்.என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும் என்று நம்புகிறேன்.மிக மிக அற்பமான சிந்தனைகள் அற்பமாக தெரிகிறது.
இவ்வளவையும் சொல்லிவிட்டது இதை சொல்லாமல் போனால் எப்படி ? இன்று கட்டுண்டு இருக்கிறேன்.என்னை என்னால் ரசிக்க முடிகிறது.நேரங்கள் மீதமான பொழுதுகள் போய் நேரங்களை தேடி கொண்டிருக்கிறேன்.நான் கண்காணிக்க படுகிறேன்.ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறேன் .அதிகம் அலட்டி கொள்ளாமல் ,கட்டாயமும் கால கட்டமும் இல்லாமல்
நான் ரசிக்கப் படுகிறேன். எனக்கு புதிய அத்தியாயம் எழுத படுகிறது.யாரோ என் தூக்கத்தை தட்டி எழுப்பி இருக்கிறார்கள்.தூர இருந்தாலும் நெருக்கம் மீண்டும் தெரிகிறது.
முதல் வரியில் சொன்னது போல் ,என் பயணமும், என் தூக்கமும், அழைப்புகளுக்கு திரும்பாமையும் தொடரலாம்.
ஆனால் இப்பொழுதைய நிலவரப்படி
"தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்குநின்செயல் செய்து நிறைவு பெரும் வணம்
துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்பில்லை "
எல்லா பத்திரிக்கைகளும் எல்லா தலைவர்களும் சொல்லும் வார்த்தைகள் நாம் ஒன்று திரண்டு நிற்க வேண்டும்.நாம் ஒன்று பட்டு இதை எதிர்க்க வேண்டும் ,இது ஒரு தேசிய இடர்பாடு, இது அரசியலுக்கு அப்பாற்ப்பட்டது என்பதை தான்.
என்ன செய்ய வேண்டும் நாம் ? மனித சங்கிலி கோர்த்து கொண்டு இந்த சென்னை மழையில் நின்று நமக்கு தெரிந்த விளம்பரத்தை செய்து கொள்ளவேண்டுமா ? புரியவில்லை.
இணையத்தில் இன்று மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தாஜ் ஹோட்டலை பார்வை இடுகிறார் என்ற செய்தியை படித்தேன் .அவருடன் பல காவல் அதிகாரிகள் உடன் பல அரசியல் அதிகாரிகள் .இது ஒரு முதல்வரின் வருகை .இதில் சினிமா இயக்குனர் ராம் கோபால் வர்மா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லை.ராம் கோபால் வர்மாவின் அடுத்த படத்தில் நடிக்கும் முதல்வரின் மகன் ஹ்ரிடேஷ் தேஷ்முக்கும் அந்த கூட்டத்தில் இருக்கிறார்.அவர்கள் பார்த்து என்ன செய்து விட போகிறார்கள் .
அந்த ஹோட்டலின் உரிமையாளர் ரத்தன் டாடா நேற்று வரை உள்ளே செல்லவில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.இதை மேலும் கொடுமையாக்க மகாராஷ்ட்ராவின் உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பாட்டில் என்பவர் கொடுத்த பதில்." small incidents like this do happen in big cities " How ridiculous comment . அதற்கு அவர்கள் அரசியல் கட்சி சொன்ன பதில் " அமைச்சருக்கு ஹிந்தி பேச தெரியாது " என்பது !
நரேந்திர மோடியின் உதவி தொகையை காக்கரே குடும்பம் மறுத்ததை ஒட்டி அமர் சிங்க் என்ற விலைபோன அரசியல் வாதியின் வார்த்தைகள் உண்மையில் மன்னிக்க முடியாத வார்த்தைகள்.
கக்கரே இறந்து விட்டார் என்ற செய்தி ரெடிப்ப் செய்தியில் வந்த உடன் கீழே ஒரு கமெண்ட் " நான் என் மனைவியிடம் சொல்லி கொண்டிருந்தேன் ,சத்வியை கைது செய்து கக்கரே தவறு செய்கிறார் ,அவர் தண்டனை அனுபவிக்க போகிறார் என்று.அதே போல் அவர் பாத்து காக்க நினைத்த முஸ்லீம் தீவிரவாதிகளே கொன்று விட்டார்கள்."
பிரியங்கா காந்தி இந்த நிலையை பற்றி ' இந்திரா காந்தி இந்த நிலையை வேறு விதமாக கையாண்டிருப்பார் ! நம்மை எல்லாம் பெருமை கொள்ள செய்து இருப்பார் " என்ற பேட்டி.
இந்தியாவின் அரசியல் அமைப்புவாதிகள் பாகிஸ்தானை பற்றி பேசும் பொழுது ஐ.எஸ் .ஐ என்ற அமைப்பின் ஜெனரல் வருகையை எதிர்பார்த்து கொண்டு அதை பாகிஸ்தான் மறுக்கவே அதே நிலையில் இருந்து பதட்ட நிலையில் இருநாடும் அமைந்து இருப்பது.
ஆபரேஷன் சைக்ளோன் நடந்து கொண்டிருக்கும் பொழுது அத்வானி தாஜ் ஹோட்டல் அருகே சென்றது .
இத்தனையும் நடந்து முடிந்தும் நமது அரசாங்கம் இன்னும் ஒரு பொறுப்பான செய்தி வெளியிட முடியாமல் திணறி கொண்டிருப்பது.
மும்பை போன்ற ஒரு நகரத்தில் உள்ள தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டும் புத்தி வராமல் சென்னை போன்ற நகரங்களில் இன்னும் பாதுக்காப்பை அதிகரிக்காமல் இருப்பது.
குறிப்பாக சென்னை தாஜ் கன்னிமராவில் இன்னும் பாதுகாப்பு போடாதது.
இதை எல்லாம் சாதரண மக்களுக்கு மீடியாக்கள் operational evidence தருவது .
இவை எல்லாம் மும்பை சம்பவங்களை பார்த்து கேலி செய்வது போல் தான் இருக்கிறது.என்னால் எந்த நிலையும் எடுத்து இதை பற்றி எழுத முடியாது.நமக்கு இப்பொழுதைய தேவை ஒன்றும் ஒரு கட்டுப்பாடான சட்டமோ அல்ல அமைச்சர்களின் மாற்றமோ அல்ல .நம் தேவை "பாதுகாப்பு.அப்பாவி மக்கள் எத்தனை முறை மதம் என்ற சாக்கில் கொல்லப்பட வேண்டும் தெரியவில்லை.
ஒரு உண்மை அறிந்து கொள்ள வேண்டும்.தீவிரவாதம் என்பது மதத்தை சார்ந்தது அல்ல அது ஒரு மனசிக்கல் கொண்ட மனிதர்கள் செய்யும் அட்டகாசம் இதில் ஆண்டவனையும் இழுக்க முடியாது ,அவன் கூட்டத்தையும் இழுக்க முடியாது.அமெரிக்கா அல் கொய்தாவின் தாக்குதலில் இருந்து மீண்டு வந்தது ஆச்சரியம் அளிக்கிறது.அதன் பிறகு ஊடுருவல்கள் தடுக்கப்பட்டு இருக்கின்றன.முறியடிக்க பட்டுஇருக்கின்றன .ஆனால் இங்கு இந்த வருடம் மட்டும் இது பதினான்காவது தாக்குதல் .என்ன சொல்கிறது இந்த தாக்குதல்கள் .
நமது அமைப்புக்களும் நமது அங்கங்களும் சகிப்பு தன்மை என்ற சொல்லை தாண்டி அசிங்கமாக முன்னேறி கொண்டிருக்கிறோம்.டெக்னாலஜி என்ற வார்த்தை இந்தியாவில் எப்படி எல்லாமோ வளர்ச்சி கண்டாலும் அந்த வார்த்தையின் முழு பயனை ஒரு இந்தியன் இந்த மாதிரி ஒரு சமயத்தில் பயன் படுத்த முடியாமல் திணறுவது வருத்தம் அளிக்கிறது.நமது மூளை எல்லாம் அடுத்த நாட்டிற்க்கு பணி செய்ய ஏலம் விடப்பட்டிருப்பதால் நம் நாட்டிற்க்கும் அதன் பாதுகாப்பிற்கும் இது வரை நமது மூளை வேலை செய்யவே இல்லை.தீவிரவாதிகள் ஜீ ,பீ .எஸ் பயன்படுத்தி தாஜ் உள்ளே நகர்ந்து கொண்டிருந்தார்கள்.பிளாக் பெர்ரி மூலம் தொடர்பு கொண்டார்கள்.பிளாக் பெர்ரி மூலம் தொடர்பு கொண்டால் முதலில் கால் பிளாக் பெர்ரி செர்வருக்கு சென்ற பிறகே நமது சர்வருக்கு இணைப்பை ஏற்படுத்தும்.
ஆனால் நமது மார்கோஸ் படைகள் உள்ளே செல்லும் பொழுது அவர்கள் கையில் ஒரு வரைபடம் கூட இல்லாமல் இருந்தும் ,அவர்களுக்கு விளக்க ஒரு அதிகாரி கூட இல்லாமல் இருந்தது நம்மை யோசிக்க வைக்கிறது.
நாம் இத்தனையும் ஒரு கணத்தில் இழந்து விட்டோம்.எந்த இதனையின் விலை என்ன ? இது எங்கே செல்கிறது என்பதை நோக்கி இருப்பதும் முட்டாள்தனம்.இதனால் நமக்கு நேர இருக்கும் மாற்றங்கள் மட்டும் நிச்சயங்களாக கண் முன்னே தெரிகிறது.
இந்த ஒரு பொருளாதார சூழ்நிலையில் யாரும் இன்னும் ஒரு போருக்கு தயாராக இல்லை.என் நண்பன் சுந்தர் ராஜனுடன் நேற்று பேசி கொண்டிருந்தேன்.அவன் வைத்த கருத்தும் இதுவே " இரண்டு பேர் கிட்டயும் அணுசக்தி இருக்கிறது அதனால் இருவரும் மோதிக்கொள்ள மாட்டோம் "
நானும் அவனும் அன்று பேசி கொண்டிருந்த நேரம் தாண்டி சில நேரம் இதை பற்றி நினைத்து கொண்டிருந்தேன்.வீண் நேரம் செலவழிக்கப்படாமல் இந்த நேரத்தின் தேவைகள் பேச்சுவார்த்தைகள் அல்ல என்பதை மனதில் கொண்டாலே பாதிக்கு மேல் பாதுகாப்பு ஏற்படும் என்பது என் கருத்து.இதை ஒன்றும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கொண்டு செல்ல முடியாது தான்.ஆனால் இந்த நிகழ்வுக்கு இதை ஏற்படுத்திய தீவிரவாத கும்பலை தாண்டி பதில் சொல்ல வேண்டியது நாம் தான்.நாம் என்றால் நாம் உருவாக்கிய அரசு ,அமைப்பு ,ஜனநாயகம் எல்லாம் தான்.
நாளையும் இதை மும்பையில் நடந்த ஒரு ரயில் விபத்து போல் ஆற போட்டு கொண்டோ அல்ல 1993 இல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு போல் இழுத்து அடித்து ஆதாரம் சேர்கவே பல வருடங்கள் ஆகி கொண்டிருந்தால் பாலிவுட் சினிமா மூன்று படம் எடுத்து விடுவார்கள் ,எனக்கு பிறக்க போகும் பிள்ளை அதை பற்றி பேசி கொண்டிருப்பானே தவிர அது முடிந்து இருக்காது.
மும்பை என்ற உலகம் மீண்டு வரும் ,அது எல்லோருக்கும் தெரியும்.மும்பையை இதற்கு மேல் தூங்க வைக்க முடியாது.ஆனால் இனி நேரும் விழிப்பில் தெரியும் ஒரு வித கலக்கம் தான் இந்தியாவின் பாதுகாப்பை வர்ணனை செய்ய போகிற தருணங்கள்.மும்பை எப்படி சுவடுகளை மறைத்து வாழ்கையை திரும்ப மக்களுக்கு தரபோகிறது என்பது ஒரு வித தெளிவில்லா விஷயமாகவே இருக்கிறது.
என்னடா இவன் தனி மனிதத்தின் சுக துக்கத்தை பற்றி பேசி கொண்டிருக்கிறான் என்று நினைக்க வேண்டாம்.தனி மனிதத்தின் சுகமும் துக்கமும் ஒரு வாழ்வுமுறையில் கொண்டு வரும் தாக்கம் நாம் எல்லோரும் அறிந்ததே.இன்றைய நமது சூழலில் நாம் பட்டு கொண்டிருக்கும் பல வித இடருகளில் இருந்து வெளிப்பட நாம் நமது சூழலை குறை சொல்வது இயல்பு.எல்லாம் மீறி போன சமயங்களில் நாம் அரசை குறை சொல்லுவோம்.ஆனால் இயல்பாக நாம் குறை சொல்ல பழகி விட்டோம்.
குறை சொல்வது மிக இயல்பு என்று மட்டும் நினைத்து கொள்ளவேண்டாம்.அதற்கும் நம்மிடம் பல விதமாக வரலாறுகள் இருக்கிறது.இன்று நாம் இருக்கும் இந்த குறை சொல்லும் மனப்பான்மை நம் வாழ்க்கை தரத்தை குறைத்து கொண்டிருக்கிறதோ என்று நினைத்து பார்ப்பேன்.
அன்று ஆட்டோவில் நானும் என் நண்பன் பப்புவும் வந்து கொண்டிருந்தோம்.பப்பு இரண்டு வருடம் அமெரிக்காவில் இருந்து வந்ததால் அவன் வாழ்வு முறை பலவாக மாறி இருந்தது.வெளியே சென்றவுடன் அவன் கைக்குட்டையை எடுத்து மூக்கை பொத்தி கொள்கிறான்.அவன் வைக்கும் விவாதங்களில் ஒரு வித கருத்து இல்லாவிட்டாலும் அவன் சத்தமாக விவாதிக்கிறான். அவனுக்கு இந்தியா பிடிக்கவில்லை.மிக தெளிவாக அவன் அமெரிக்கா அமெரிக்கா என்று அறைகூவல் இட ஆரம்பித்து விட்டான்.எனக்கு கோபம் வருகிறது ஆனால் அவனை புரிய வைக்க முடியவில்லை.கத்திபாறை சந்திப்பில் நடந்து வந்த பாலம் வேலை மூன்று வருடம் சென்றும் ஒழுங்காக முடிக்க முடியவில்லை என்று ஆரம்பித்து இந்தியாவில் த்ரீ ஜீ டெக்னாலஜி இல்லை என்பது வரை குறை கூறினான்.
இது ஒரு வகை அவ்வளவே.நமது விவாதம் பப்புவை பற்றி அல்ல.அவன் குறை சொல்வதும் அதன் மாற்றங்களை பற்றி தான்.ரோடு சரி இல்லை என்றால் நாம் குறை சொல்லுகிறோம்,நம் கை மீறி செலவு நேர்ந்தால் குறை சொல்லுகிறோம்,பேருந்தில் நெரிசல் இருந்தால் குறை சொல்லுகிறோம்.உண்மையில் நாம் குறை சொல்லாமல் இருக்கும் இடங்கள் மிக மிக குறைவு.அவை எல்லாவற்றிலும் குறை இருக்கலாம்.ஆனால் அந்த நிவர்த்திகள் இன்னும் ஆரம்பிக்க படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தது.
நாம் குறை சொல்வது ஏன் ? மேல் நாட்டு மோகமா அல்ல நமது வாழ்வு முறையா அல்ல நமது சுழல் அப்படி அமைந்து விட்டதா அல்ல உண்மையிலே நமது அரசாங்க முறைகேடுகளா ? தெரியவில்லை.
மனம் கொஞ்சம் இலசாகி இருக்கிறது
காரணம் தெரியாமல் கொஞ்சம் என் எடை கொஞ்சம் குறைந்து இருக்கிறது
கண்களில் ஒரு ஒளி தெரிகிறது
சில கட்டுபாடுகள் விலக்க பட்டிருக்கிறது
ஒரு நிமிடம் ஒரு நிமிடமாக தெரிகிறது
யுகங்களின் அர்த்தங்கள் மறந்து போய் இருக்கிறது
நினைவுகள் தற்காலிக நிறுத்தம் கொண்டிருக்கிறது
என்னை எனக்கு பிடித்து இருக்கிறது
காற்றும் வனமும் என்னிடம் பேசுவது இல்லை
சில உண்மைகளில் திளைக்க கிளம்பி இருக்கிறேன் .
இந்த கவிதையின் அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்.ஆனால் இதில் அர்த்தங்கள் எனக்கு மட்டுமே தெரியும்.இது வருடா வருடம் நவம்பர் மாதம் நிகழும் ஒரு உண்மை.யூகித்து கொள்ளுங்கள்.
பெண்களை பற்றி எழுதி ரொம்ப நாள் ஆகி விட்டது போல் தோன்றுகிறது.சில நேரம் நம் வாழ்வில் எல்லாம் முடிந்து விட்டதா என்று நினைத்து இருந்த காலங்கள் உண்டு.ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிவது ,மாற்றம் ஒன்றே மாறாமல் இருப்பது.ஒரு அத்தியாயம் முடிந்தால் மற்றொன்று என்ற கணக்கில் தான் எல்லோர் வாழ்வும் செல்ல வேண்டும், சினிமாவை போல் .
சினிமாவும் வாழ்க்கையும் ஒன்று படுத்தி கூற முடியாது,சினிமாவில் இருக்கும் கதாபத்திரங்களை போல் நாம் நடந்து கொள்ள ஆசை படலாம்.ஆனால் அது மிக மிக ஒரு அலங்கரிக்கப்பட்ட ஒரு பொய்யாக தான் உண்மையில் நம் நெஞ்சில் தங்கி விடும்.அதற்கு பல உதாரணங்கள் இருக்கும்.இருந்த படிக்கே நாம் பழைய நிலைக்கு மாறி விடுவோம்.
சென்ற வாரம் பல நாட்கள் கழித்து ஒரு பெண்ணை நான் பார்த்தேன்.அவளிடம் அதிகம் பேசியது இல்லை என்றாலும் அவளும் நானும் பல நாட்கள் கழித்து பார்த்து கொண்டதால் வெகு சுலபமாக சரளமாக பேசி வந்தோம்.அவள் தன் வேளையில் ஆரம்பித்து பேச ஆரம்பித்தாள்.அவளை பார்த்து ஒரு ஐந்து வருடங்கள் இருக்கும்.அந்த ஐந்து வருடத்தில் அவள் வெகுவாக மாறி இருந்தாள்.அந்த மாற்றத்திற்கு அவள் உருவம் வெகுவாக வெளிகாட்டி கொண்டிருந்தது.உண்மையில் அவளிடம் பேசுவது பிடித்து இருந்தது.அவளும் என்னை அதே நிலையில் வைத்து பார்த்து கொண்டிருந்தாள்.ஆனால் எங்கள் பேச்சுவார்த்தை அதிகமாக நீடிக்காமல் ஒரு ஐந்து பத்து நிமிடத்தில் முடிந்தது.எங்கள் செல்போன் நம்பர்கள் பறி மாறி கொண்டன .
இரண்டு நாள் கழித்து என் நண்பனுடன் பேசி கொண்டிருக்கும் பொழுது அவள் அழைத்து இருந்தாள் .என்னால் பேச முடியவில்லை.மறுபடியும் அவளை நான் மறுநாள் அழைத்தேன்.எதோ பேசி கொண்டிருந்து விட்டு அவளிடம் திடீர் என்று
" Probably we should grab a coffee some time "என்று சொல்லி வைத்தேன்.அவளும் அதற்கு ஆம் என்று சொன்னாள்.
நேரம் குறிக்கப்பட்டு அவளை சந்திக்க நான் சென்றேன்.நான் ஏன் அப்படி கேட்டேன் என்று பார்த்தால் என்னை மிக சரளமாக பேசுபவன் போல் காட்டி கொள்ள ஆங்கில படத்தில் வருவது போல் One night stand மாதிரி ஒரு முயற்சி எடுத்து இருந்தேன்.அதுவும் ஒத்துழைக்கவே அவள் வந்ததும் எனக்கு வெற்றி அளிப்பது போல் நான் உணர்ந்தேன்.ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருந்தது.
எனக்கு பாரிஸ்டா ரொம்ப பிடிக்கும்.ஒரு உணர்வு பூர்வ பிடித்தம் உண்டு.மற்றும் "A lot can change over a coffee "என்ற வாக்கியத்தில் மிக நம்பிக்கை உண்டு.அந்த பொழுதில் நானும் ஒரு வித எதிர்பார்புகளுடன் அவளை சந்தித்தேன்.அவளும் என்னை எதிர்நோக்கி இருந்த விதமும் அப்படியே சொல்லியது.ஆனால் அவளிடம் அதிகம் இதற்கு முன் பேசியது கிடையாது.அன்று பேசியது ஒரு மூன்றாவது முறையாக கூட இருக்கலாம்.அவளை பற்றி எதுவும் தெரியாது.என்னை பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது.நான் எப்படி பட்டவன் என்று கூட தெரியாது.
சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலை பற்றி பேச ஆரம்பித்தோம் .பிறகு அவளுக்கும் பாரிஸ்டா பிடிக்கும் என்று கூறினாள்.நான் என்ன வேலை செய்கிறேன் என்பதை பற்றி பேசினேன்.அவளும் அவள் வேலையை பற்றி கூறினாள்.அவளுக்கு சினிமா விருப்பம் இல்லை என்று தெளிவாக சொன்னாள்.புத்தகம் படிப்பது அபூர்வமாம்.Fivepoint some one படித்து இருக்கிறேன் என்று கூறினாள்.இசை கேட்பாளாம் Himesh reshmaiya என்றால் உயிராம்.எனக்கு அந்த இசை அமைப்பாளரை பிடிக்காது.ப்ளாக் சுத்தம் வாசமே கிடையாது என்று கூறினாள்.என்ன பேசுவது.அவள் இந்த முறை சென்னையில் பியுடீ பார்லர் சென்றது பற்றி பேசினாள்.அவள் தாய் தந்தையை மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறினாள்.நானும் தலை ஆட்டினேன்.சில நேரம் காபி யை ரசித்து குடித்தோம்.முதல் முறையாக ஒரு காபி ஷாப்பில் காபியை ரசித்து குடித்தேன்.பக்கத்தில் இருக்கும் பெண்ணை ரசிக்காமல்.
என்ன பேசுவது தெரியவில்லை.எனக்கு உண்மையில் தடுமாற்றத்தை தாண்டி என் எதிர்பார்ப்புகள் இந்த சந்திப்பில் என்னவாக இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.அவளிடம் நான் தந்து பெற போகும் விஷயங்கள் என்ன என்று அசை போட ஆரம்பித்து கொண்டிருந்தேன்.ஒரு ஐந்து நிமிட மௌனத்திற்கு பிறகு நான் மெதுவாக சென்னை வானிலையை பற்றி பேச ஆரம்பித்தேன்.
"When you have nothing to speak ,then speak about the weather". திடீர் என்று என் மண்டையில் உறைத்தது.ஒரு முறை நண்பர் ஒருவர் இதை என்னிடம் கூறினார்.உண்மை என்னிடம் இந்த பெண்ணிடம் பேச எதுவும் இல்லை,என் வெற்று மாலை வேலையை ஒரு பெண்ணுடன் கழிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் அதில் ஒரு வித உந்தூதலும் இல்லை.அவளுக்கும் அதே நிலை.அவள் உலகம் வேறு என் உலகம் வேறு.ஒட்டு போட நினைக்க முடியாது.ஒரு சில மயக்கத்தில் சந்தித்து விட்டேன்.ஆனால் அங்கே ஒரு நிமிடமும் எனக்கு ஒரு யுகம் போல் நகர்ந்து கொண்டிருந்தது.பரிஸ்டா சென்றால் யாரும் காப்பி முடிந்தால் கிளம்ப மாட்டார்கள்.அன்று கிளம்ப தோன்றியது.கிளம்பி விட்டோம்.அவள் என்னிடம் Bye சொல்லிவிட்டு ஆட்டோ வில் கிளம்பினாள்.
இன்று வரை ஒரு அழைப்பும் இல்லை.நானும் அழைக்க வில்லை.எதுவும் தோன்றவில்லை.சில நேரங்களில் நிகழும் உண்மை நமக்கு புரியும் பொழுது எவ்வளவு தெளிவாக மனம் செயல் படுகிறது என்று பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.அதுதான் அன்று நடந்து.மனதிற்கு ஒப்பாத செயல் அல்ல அது,அங்கே ஒரு அலைவரிசை இல்லை.அது வேறு ஒரு அலைவரிசை .அந்த பெண் அழகாய் இருந்தாலும் அவளிடம் எனக்கு இந்த ஒரு விஷயமும் பேசி கொள்ள இல்லை.அவளிடம் எந்த ஒரு சிந்தனையும் இல்லை.அவள் ஒரு பயணி நான் ஒரு பயணி.சந்திகொண்டோம்.அவ்வளவே.சினிமாவில் வரும் One night stand சினிமாவிற்கே .அதை செயல் படுத்துவது எனக்கு அது முட்டாள்தனம்.அந்த பெண்ணை நான் குறை சொல்ல வரவில்லை.என்னையும் குறை சொல்லவில்லை.It was a good experience.
"ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கி பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்" - அசோகமித்ரன்
"மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ‘ஜெயகாந்தன்’ என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர் ‘தத்ரூபம்’ என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான சமாச்சாரம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப் புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். " - வண்ணநிலவன்
" பாரதியார் வாழ்ந்த காலங்களில் கௌரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் நோபல் பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கௌரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்பÊடுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கௌரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்." - எஸ்.ராமகிருஷ்ணன
" ஜெயகாந்தன் ஒரு நீராவி என்ஜின் போல ஆற்றலும் வேகமும் கொண்ட படைப்பாளி என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் நீராவி என்ஜின்கள் கடந்த காலத்தின் அடையாளம். " - மாலன்
இன்று என் நண்பன் சத்யாவுடன் சாட் செய்து கொண்டிருந்தேன்.பொதுவான படங்கள் நண்பர்களை பற்றி பேசி கொண்டிருந்துவிட்டு எதோ எங்கள் பேச்சு வாழ்க்கையை பற்றி வந்தது.நான் திடீர் என்று புலம்புகிறேன் என்று உணர்ந்து கொண்டேன்.என்னவோ என்னை பற்றி அவன் கேட்க போய் அது என்னவோ எங்கோ என்று பயணிக்க ஆரம்பித்தது.
இந்த வாழக்கையில் என்ன கிழித்து விட்டோம் என்று யோசிக்கும் போது எதுவும் உருப்படியாக செய்ய வில்லை என்றே தோன்றுகிறது.வாழ்கையை என்னால் கையாள முடியவில்லை என்ற உண்மையை என்னால் பகிரங்கமாக ஒத்து கொள்ள முடியாவிட்டாலும் ,அது ஒரு இடத்தில் உண்மையாக தான் ஒளிந்து இருக்கிறது.இதில் என்ன கோழைத்தனம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.உண்மை கோழைத்தனமா என்ன ?
என்ன சொல்லவருகிறேன்,எல்லோரை போல் இன்ஜினியரிங் படித்தேன்.படிக்கும் பொழுதே எனக்கு தெரியும் நான் ஒரு இன்ஜினியரிங் படிக்க கூடாதவன் என்று .தழும்ப தழும்ப ஒரு பெண்ணை காதலித்தேன்,காதலிக்க பட்டேன்.வேலை இல்லை.பின்பு எம் .பி .ஏ .அதை ஒழுங்காக படித்தேன்,அங்கும் அதே காதல் .காம்பஸ் நேர்முகத்தில் வேலை.பிறகு காதலில் மிக முக்கியமாக தீர்மானங்கள் எடுக்க வேண்டிய கட்டாயங்கள்.காதலில் பிரிய வேண்டிய தருணங்கள் கொடுமையானவை அதுவும் பிரிவு உங்கள் அருகில் இருக்கிறது ,அந்த நாள் வருகிறது என்று எதிர் கொண்டு இருக்கும் நாள் சாவை விட கொடுமையான இளமை கொடுமைகள்.இன்ஜினியரிங் ஏன் படித்தேன்.புரியவில்லை.காதல் ஏன் செய்தேன் தெரியவில்லை.ஏன் வேலை இல்லாமல் சுற்றினேன்.புரியவில்லை.ஏன் இன்று இந்த வேலையில் இருக்கிறேன் விளங்கவில்லை.
எங்கோ அமெரிக்காவில் பொருளாதாரம் வீழ்ந்ததால் என் சம்பளம் அடி வாங்குகிறது.எவனோ திருநெல்வேலியில் குண்டு போட்டதால் இரவு நேரத்தில் படம் பார்த்து வரும் போது TN72 registration ஆனதால் என் வண்டியை ஓரம் நிறுத்தி விசாரிக்கிறான்.எல்லோரும் வீடு வாங்குகிறார்கள் என்று நானும் வீடு வாங்குகிறேன்.எல்லோரும் கல்யாணம் செய்கிறார்கள் அதனால் எனக்கும் பெண் பார்க்கிறார்கள்.எல்லாம் நல்லபடியாக இருக்கிறது அதனால் நானும் நல்லபடியாக இருக்கிறேன் என்று ஏற்று கொள்ளபடுகிறது.ஏன் புரியவில்லை.
இது நான் செய்ய வேண்டிய வேலைகள் அல்ல அது மட்டும் நன்றாகவே விளங்குகிறது.வாழ்கையில் சில நேரங்களில் சில கட்டுபாடான தீர்மானங்கள் எடுக்க பட வேண்டும்.அதை நான் தவற விட்டு விட்டேன் என்று தான் நினைக்கிறேன்.இனி இந்த வேலையில் இருந்து அடுத்த வேலை ,அப்புறம் கல்யாணம் அப்புறம் ஒரு கார் ,குழந்தை,அப்புறம் அதற்க்காக ஒரு வாழ்க்கை ,அதே சக்கரத்தில் தான் நானும் சுற்ற போகிறேனா.என்ன சக்கரமோ தெரியவில்லை . எனக்கும் இடமளித்து பயணிக்க வைக்கிறது.ஆனால் என் நிலை ஒரு இடத்தில் தேங்கி நிற்கிறது என்பது மட்டும் எனக்கு தெளிவாக தெரிகிறது.எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை.எனக்கு இந்த நிலை பிடிக்கவில்லை.
என் வாழ்வில் 25% நேரம் பெண்ணுடன் இருந்து விட்டேன்.அது முறிந்து போன பிறகு என் வாழ்கையில் அவ்வபொழுது பெண்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.என்ன செய்வது ஒரு Comparative factor வந்து கொண்டு என்னை முன்னேற விடாமல் தடுக்கிறது.பெண் என்னும் ஒரு விஷயம் மிக மிக Demanding அதற்கு மனம் இடம் கொடுக்க வில்லை என்று சொல்ல மாட்டேன்.அதை என்னால் Handle செய்ய முடியவில்லை.பெண் அழகான விஷயம் தான் ஆனால் புளித்து போய்விட்டதோ என்று தோன்றுகிறது.என்ன பார்த்து விட்டேன் என்று சந்தேக படுபவர்கள் ,ஏளனம் செய்பவர்கள் இருக்கலாம் அதற்கு சத்தியமாக என்னால் கூறு போட்டு சொல்ல முடியாது.பெண்ணை என்னால் இதற்கு மேல வைத்து கொண்டாட எனக்கு பலம் இல்லை.
இப்பொழுதெல்லாம் ஒரு பெண்ணுடன் பேசி அவளுடன் ஊர் சுற்றுவதை விட ஒரு படம் பார்ப்பது பிடிக்கிறது,அந்த நேரத்தை ஒரு புத்தகம் வாசிக்க செலவழித்தாலும் எனக்கு சம்மதம்.பெண் என்னை தேடி எங்காவது வந்து நின்றாலும் எனக்குள் ஒரு வித கலக்கம் தான் ஏற்படுகிறது.மிக சுலபமாக பெண்ணை எதிர் கொள்ளும் மானிடன் எனக்குள் மறைந்து ,வயதடைந்து போவதை நான் உணர்கிறேன்.
சொந்தஊரை விட்டு ஏதோ ஒரு மூலையில் பகிர்ந்து கொண்டு வாழ்வது ஒரு வழக்கம் தான்.எனக்கு சொந்த ஊரையும் பெற்றோருடனும் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.அங்கு ஏதோ ஒரு பத்தாயிரம் ரĭ