இன்பமும் ஓர் கணத் தோற்றம் -இங்கு
இளமையும் செல்வமும் ஓர் கணத் தோற்றம்
துன்பமும் ஓர் கணத் தோற்றம் -இங்கு
தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.
யாரும்மில்லை அது பாரதியின் பாடல் தான் !!!
சில விஷயங்கள் என்னை யோசிக்க வைத்து கொண்டிருக்கிறது.இதை பற்றி எழுதலாமா என்று பல நாள் யோசித்து வேண்டம் என்று விட்டு இருக்கிறேன்.ஆனால் என் வாழ்நாளில் பல நாட்கள் அதனாலே தேங்கி விட்டது என்று சில கனங்கள் யோசித்து உண்டு.
நேற்று என் நண்பன் ஒருவன் தன் வீட்டில் அவன் காதலிக்கும் பெண்ணை பற்றி பேசியது பற்றி என்னிடம் பரிமாறி கொண்டிருந்தான்.அவன் சொல்லும் பொழுது எனக்கு வயதாகி விட்டதா அல்ல என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லையா என்று கூட தோன்றியது.வயதாகி விட்டது என்பது உண்மை தான்.அவன் வீட்டில் பெண்ணும் ஒரே ஜாதி என்பதால் பெரிய அளவில் விவாதம் வர வில்லை.பெண் வீட்டில் தங்கள் பெண் சந்தோசம் தான் முக்கியம் என்பதால் பச்சை கொடி காட்டி விட்டார்கள்.இருவருக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை என்பது அவர்கள் முகத்திலே தெரிந்தது.இருவரும் நேற்று என்னை சந்தித்த பொழுது நான் முந்தைய தின Hangover_ இல் இருந்து தெளியாமல் இருந்தேனோ என்னவோ ,என்னை பார்த்து "Are you OK ?" என்று கேட்டு கொண்டே இருந்தார்கள்.உண்மையில் எனக்கு அவர்கள் மீது அக்கறை உண்டு ,அதனால் எனக்கும் அளவில்லாத சந்தோசம் இருந்தது .
நேற்று வீட்டிற்கு வந்து தனியே அமர்ந்து இருக்கும் பொழுது தான் எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.காதல் வெற்றி பெறும் சந்தோசத்தை பார்த்தாலே என்னால் ரசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் கொஞ்சம் அடி மனதில் பொறாமையாக இருந்தது எனக்கு தெரிந்தது.காரணம் இருக்கலாம் ,அதற்கு வேறு உந்துதலும் இருக்கலாம் ஆனால் உண்மை என்னவென்றால் எனக்கு வெறுப்பு,கோபம்,ஏமாற்றம் ,தவிப்பு,தனிமை ,தேடல் எல்லாம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக காதலில் இருந்து விலக்கி இன்று இருக்கும் ஒரு நிலைக்கு தள்ளி விட்டது.
நான் இழந்து போன நாட்களை பற்றியோ நான் காதலித்த பெண்ணை பற்றியோ எனக்கு பேச விருப்பம் இல்லை.ஆனால் சில நாட்கள் முன் இருவரும் சந்தித்தோம் ஏதோ ஒரு கல்யாணத்தில் இருவரும் பார்த்து கொள்ள அவ்வளவு சிரமப்பட்டோம் .இருவரும் அந்த இடத்தை விட்டு நகர அவ்வளவு முனைப்பு காட்டினோம்.கொஞ்ச நேரத்தில் என்னை நினைத்து பார்த்தேன் " காலம் நகர்ந்து விட்டது,மறுக்கப்பட்டதை தோண்டி எடுத்து மன்னிப்பு கேட்க முடியாது ,மன்னித்தல் என்பது முதலில் உன்னிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் " என்று தோன்றியது.உண்மை காலம் வெகுவாக நகர்ந்து விட்டது.நான் பார்த்த பெண்ணும் அவள் இல்லை.அவள் பார்த்த நானும் அவன் இல்லை.அது தான் உறவுகளுக்கு இருக்கும் வீரியம் ,வெறுமை .வீரியம் நம்மை பற்றிய நினைவுகள் ,வெறுமை நாம் நிரப்பிய நாட்கள் .இதில் எந்த பகுதி மிகுந்து இருக்கிறதோ உறவு நிலைக்கிறது அல்லது இழக்கிறது .
அன்று முதல் என் மனதில் எந்த ஒரு எண்ணமும் அந்த பழைய நினைவுகளுக்கு இல்லை என்று உணர்ந்து கொண்டு திரிந்து வந்தேன்.சில நாட்கள் முன்பு அந்த பெண்ணிற்கு கல்யாணம் என்ற செய்தி வந்த பொழுது கூட நான் மிகவும் சந்தோசம் கொண்டேன்.அந்த நிகழ்வுக்கு காத்திருந்தது என்னவோ உண்மை தான்.என் சார்பில் என் வாழ்த்தை அந்த தம்பதிகளுக்கு சேர்த்துவிட்டேன் என்ற நிம்மதியும் இருந்தது.
இன்றைய நிலைமையில் யோசித்து பார்க்கும் பொழுது காதல் ஒரு பகடை காய் என்றே எனக்கு தோன்றுகிறது.புரிதல் ,அன்பு எல்லா காதலிலும் இருக்கும் ஆனால் அதன் அடுத்த கட்டம் திருமணத்திற்கு முன்னேருபவன் தான் வெல்பவன்.மற்றவன் காதலில் தோற்றவன் என்ற முத்திரை குத்தி திரிய விடபடுகிறான்.இதில் அவன் செய்த குற்றமும் ஒன்றும் இல்லை ,சுற்றம் செய்த குற்றம் ஒன்றும் இல்லை.அவன் தான் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்வான் ,அது வரை காத்திருப்பான்.
பல நாள் நான் யோசித்து இருக்கிறேன்,எனக்கு Arranged marriage சரி பட்டு வராது என்று.உண்மையில் எனக்கு திருமணமே சரி பட்டு வருமா என்பதை நான் மிகவும் யோசித்து கொண்டிருக்கிறேன்.என் தந்தையிடம் சொன்னால் "நானா நீ லவ் பண்ண வேண்டாம்னு சொன்னேன் நீதான் முடியாதுன்னு சொன்ன?" என்கிறார் .
ஆனால் என் பெற்றோரின் வேண்டுதலுக்கு சரி பெண் பாருங்கள் என்று தலை ஆட்டி விட்டேன்.இதில் வேடிக்கை என்னவென்றால் நான் சில பெண்களை வேண்டாம் என்பேன் ,சில பெண்கள் என்னை நிராகரிக்கும்!!! அந்த ஆட்டதிற்கு நானும் தயாராக வேண்டும் .அது தானே அந்த ஆட்டத்தின் விதி.
இதில் எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் தெளிவாக புதிதாக வர வேண்டும் .எனக்கு தெரியவில்லை என் மனம் குழம்புகிறது என்று சொல்ல மாட்டேன் ஆனால் என்னால் ஒரு முடிவு எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.நான் எடுக்காத முடிவுகள் எல்லாம் எனக்கு தோல்வியிலேயே கொண்டு சேர்த்து இருக்கின்றன.
பல நண்பர்களுக்கு என் மீது வேறுபாடு இருக்கலாம் .என் நடவடிக்கை மீது.உண்மை தான் .என்னை ஒருபொருட்டாக கொள்ளாமல் நினைத்து கொண்டு திரிந்த நாட்களில் நான் பல நண்பர்களை இழந்து இருக்கிறேன்.எத்தனையோ நண்பர்கள் இன்றும் என் மீது பகையோ அல்ல நிகழ்வோ அல்லாமல் விலகி இருக்கிறார்கள். அவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கூட கிடையாது.காரணம் தேட முடியாது.சத்தியமாக அவர்களை இழந்து இருக்கிறேன் .வெள்ளித்திரை படத்தில் பிரிதிவிராஜ் முடிவில் பிரகாஷ்ராஜை பார்த்து ஒரு வசனம் சொல்லுவான் " எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும் ஆனால் சில பேருடன் விலகி இருப்பது நல்லது " அது போல் தான் இதுவும்.என் கடந்த காலம் தந்த பரிசுகளில் ஒன்று !
இன்று எனக்கு இருக்கும் நெருக்கமான நண்பர்கள் பலர் நான் கடந்து வந்த வழி முழுவதும் என்னுடன் இருந்தவர்கள்.அவர்கள் ஆர்வம் கொண்டு அல்ல அவர்கள் அக்கறை கொண்டு வந்தவர்கள்.அவர்கள் என்றுமே என் நண்பர்களாக இருப்பார்கள் .இன்று விலகி இருக்கும் பலரும் என்னை பார்த்து கொண்டு தான் இருப்பார்கள் ,ஏன் எனில் அத்தனை பெறும் என்னுடன் மிக மிக நெருக்கமாக இருந்தவர்கள்.இதில் இந்த பதிவில் கமெண்ட் போடும் பல நண்பர்கள் உட்பட .யாரும் ஏன் என்ற காரணம் சொல்ல முடியாமல் விலகி இருந்து என்னுடன் இருப்பவர்கள். வழிகள் மாறுபட பயணத்தை மாற்றி கொண்டவர்கள்.
ஏன் இந்த திடீர் சுய ஆராய்ச்சி என்று யாரும் கேட்க வேண்டாம் .நான் தமிழில் எழுதுவதை நிறுத்தலாம் என்று நினைத்து இருக்கிறேன்.ஏதோ ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.எத்தனையோ முறை இதை மாற்றி கொள்ள வேண்டும் அதை மாற்றி கொள்ள வேண்டும் என்று யோசித்த பல நாட்களில் என்னுடன் இருக்கும் ஒரு வித வெறுமையை மாற்றி கொள்ளலாமா என்று யோசித்து தான் இந்த எழுத்தை மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.
பல பொழுதுகள் தனியே நடந்து செல்லும் பொழுது ,பாக்கெட் பாக்கெட் ஆக சிகரட் புகைக்கும் பொழுது ,கூட்டம் கூட்டமாக அரட்டை அடிக்கும் பொழுது ,சினிமா பார்க்கும் பொழுது ,அந்த ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது எல்லா நாட்களிலும் ஒரு வித எண்ணம் மேலோடி கொண்டுதான் இருந்தது.
அந்த எண்ணம் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ,ஆனால் நான் செய்யும் ஒரு காரியமும் எனக்கு எந்த வித பதிலையோ திருப்தியையோ தரவில்லை.என் தவறுகளில் இருந்து திருந்த எனக்கு தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
மும்பை சென்ற பொழுது விமானத்தில் அமர்ந்து இருந்த ஒரு நண்பர் என்னிடம் ஆன்மிகத்தை பற்றி பேசி கொண்டிருந்தார்.அவர் கேட்ட ஒரு கேள்வி " கடவுள் ஏன் கொடுக்க வேண்டும் ? ஏன் அவனே எடுத்து கொள்ள வேண்டும் ? " உண்மை தானே !
நான் என் விவரங்களுக்கு கடவுளை சொல்லவில்லை , என் செயல்களுக்கு நான் தான் காரணம் .அதற்கு மறுப்பு கிடையாது.
என்னுடன் மேலோடி கொண்டிருந்த எண்ணம் "எங்கே செல்கிறோம் என்ற அந்த எண்ணம்." ஒன்றுமே புலப்படாத ஒரு வழியில் கூடமாக இடித்து கொண்டு செல்ல குமட்டி கொண்டு வருகிறது.என்னை தேடுகிறேனா அல்ல எனக்கான உறவை தேடுகிறேனா அல்ல எனக்காக தேடுகிறேனா ? தெரியாமல் விடை தேடுவது என் தேடலா ?
சொல்லடி சிவசக்தி நிலசுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
