கண்முன்னே கமலுடன்
அரவிந்த் சாமியுடன்
பறந்து சென்ற
அந்த தாஜ் ஹோட்டல் முன்
வீடு கொண்டிருந்த
புறாகூட்டங்கள் எங்கே ?
எங்கே அமைதிக்கு
தூது செல்லவேண்டும்
என்று தெரியாமல் மாண்டுவிட்டனவோ ?
அல்ல அழிக்கபட்டனவோ ?
மனதில் தோன்றிய ஒரு கவிதை.
எனக்கு இந்த மூன்று நாள் விடுப்பை களிப்பாக கொண்டாட முடியவில்லை.எத்தனை முறை இப்படி நடந்து இருக்கும்.எத்தனை முறை நமக்கு மட்டுமே நேர்ந்து இருக்கும்.நாம் என்ன சகிப்பு தன்மையின் உச்சத்தில் நின்று கொண்டு இருக்கிறோமா அல்ல முட்டாள்தனத்தின் பிடரியில் அமர்ந்து இருக்கிறோமா ? எதுவும் விளங்க வில்லை.நான் இன்று உண்டு ,அமர்ந்து ,உறங்கும் சமயம் என்னை போல் ஒருவன் அந்த நகரத்தை அழிக்க மூளை சலவை செய்ய படுகிறான்.அவன் கண்களில் என்னை போல் ஒரு ஏக்கம் இருந்தாலும் அவன் ஒரு ஆழமான போராளியாக மாற்ற படுகிறான்.
இந்த மும்பை என்ன பாவம் செய்து விட்டது . செய்திகளில் தொலைக்காட்சிகளில் மும்பை தீவிரவாதத்திற்கு அன்னியம் கொண்டது அல்ல என்று சொல்லும் பொழுது எரிச்சல் வருகிறது.மும்பைக்கு என்ன தீவிரவாதம் நேர்ந்து விடப்பட்டதா ? இல்லையே.மும்பை ,வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஒரு சேர காட்டும் ஒரு அதிசியம்.
இந்துவும் முஸ்லிமும் கிறிஸ்துவனும் தன் கனவுக்கு போராடி கொண்டிருக்கும் ஒரு கூடாரம்.காலை உணவில் இருந்து இரவு உறங்கும் நேரம் வரை தன்னை யார் நோட்டம் இடுகிறார்கள் என்று கூட தெரியாமல் சுற்றி திரியும் ஒரு வாகனம். மும்பையில் கனவுகள் பல ஆரம்பம் ஆகி முடிவதால் தான் மும்பைக்கும் மற்ற நகரத்திற்கும் ஒரு வித வித்தியாசம் தெரிகிறது.மும்பை நகரம் என்பதை விட அது ஒரு தனி உலகம்.அதன் உள்ளே அடைந்து கிடக்கும் பல வித கனவுகளை தோண்டி எடுக்க தான் ஒவ்வொரு மனிதனும் தனக்குளே ஒரு வாழ்வை அங்கே அமைத்து கொள்கிறான்.சகிப்பு தன்மையும் சரி ,மதகொள்கையும் சரி அங்கே பெருக்கெடுத்து ஓடுவதற்கு காரணமும் இந்த பல தரப்பட்ட கனவுகள் மோதிகொள்வதால் தான்.
ஷேர் ,பாலிவுட் ,மாடலிங் ,ஹார்பர்,இன்ஜினியரிங் ,ஏற்றுமதி ,கிரிக்கெட் , நீதித்துறை ,பெட்டிங்,நுண்கலை எல்லாவற்றிற்கும் இருக்கும் ஒரே சரணாலயம் மும்பை.அந்த சரணாலயம் அவர்கள் எல்லோரிரடமும் கற்று கொடுக்கும் ஒரு விஷயம் வாழ்கையின் வேகம் ."வேகம்" அவர்கள் அத்தனை பேருக்கும் தொற்றிகொள்வதாலே வேலை தேடும் இளைஞனும் அருகில் இருக்கும் கோடீஸ்வர தொழிலதிபரையும் கண்டு கொள்ள நேரம் இல்லாமல் பயணித்து கொண்டிருப்பான்,ஏக்கத்தில் அலையும் இளைஞனும் அருகில் நிற்கும் பெண்ணை சீண்ட நேரம் இல்லாமல் சென்று கொண்டிருப்பான்,பேரம் பேச இடம் தராமல் ஆட்டோவும் டாக்சியும் நம் முன்னே பறந்து கொண்டிருக்கும்.டப்பாவாலாக்கள் ஊர் முழுக்க சாப்பாட்டு டப்பாவை கொண்டு செல்வது மக்களின் வேகத்தால் ஏற்பட்ட நேர பற்றாகுறையை தீர்க்க தான்.அது மும்பையில் மட்டுமே சாத்தியம் ஆக கூடிய உண்மை ,நிதர்சனம்.
மும்பை என்ற உலகம் வாழ்வின் தரத்தை வைத்து அல்ல ,வாழ்கையை வாழும் விதத்தில் எடை போட படுகிறது.அதன் இடமும் ,நேரமும் தரும் அடையாளங்கள் நம்மை போன்ற வெளி மாநிலத்தவருக்கு ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை தான் தரும்.மும்பை என்பது இந்தியாவின் வணிக தலைநகரம் என்பதை விட அங்கே புரளும் பணத்தை அடக்கி ஆளுவது அந்த மக்கள் அல்ல அவர்கள் கொடுத்த நேரம் என்ற பகடை.மும்பையில் பணத்தை தேக்கி வைப்பது என்பது ஒரு மறந்து போன விஷயம்.இதை என் பல மும்பை நண்பர்களிடம் பார்த்து இருக்கிறேன்.மும்பை பணம் இருந்தாலும் வாழ்வை தரும்,பணம் இல்லாவிட்டலும் வாழ்வை தரும்.அது தான் அதன் வீரியம்.மனிதனின் சொர்க்கபுரி ,மிருகத்தின் நரகம்.அது தான் இங்கு நடந்தது.
நான் ஒவ்வொரு முறை மும்பை செல்லும் பொழுதும் நான் சென்ற விமானம் அந்த தாராவி மேல் பறந்து சாண்டா க்ருஸ் விமான நிலையத்தில் இறங்கும் பொழுதும் என் நேரங்கள் அளவிட படுவதை உணர்ந்து இருக்கிறேன்.மும்பையில் மட்டும் நேரத்தை சரியாக கணக்கு செய்யாமல் தரை இறங்கினால் கேலிக்குள் ஆவது நாம் தான்.நம் அத்தனை உலகமும் செயல் இழந்து அப்படியே நிற்க வேண்டியது தான்.
இப்படி பட்ட நகரம் ஸ்தம்பித்து நிற்கிறது.ஒரு முறை அல்ல மூன்று நாட்களாக நிற்கிறது.அந்த கொடூர பழிகள் நீங்க நாட்கள் ,மாதங்கள்,செலவுகள்,நிதிகள்,மனங்கள் ,சந்திப்புகள் எடுக்கும்.மும்பை என்ற நகரம் மீண்டும் திரும்பி பழைய நிலைக்கு சுழலும் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.ஆனால் அப்படி திரும்பும் பொழுது மனங்கள் பெற்ற மாற்றங்களும் அவர்கள் எலும்புகளில் தெரியும் ஒரு வித நடுக்கமும் இந்த மூன்று நாட்கள் நடந்தவற்றை நினைவு படுத்தி கொண்டே இருக்கும்.அது அவர்கள் கண்களிலோ ,அல்ல செயல்களிலோ தெரியா விட்டாலும் அவர்கள் உள்ளே எங்கோ ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டு நடுக்கம் கொடுக்கத்தான் செய்யும்.
மூன்று நாட்களாக யோசித்து கொண்டும் ,படித்து கொண்டும் இருக்கும் இந்த விஷயங்கள் எழுத்துக்களாக ! இதில் ஒரு விஷயம் என்னவென்றால் புதன்கிழமை இரவு சென்னையில் மழை அதிகம் பெய்தமையால் இரவு பதினோரு மணி அளவில் வீடு சென்று நேராக தூங்க சென்று விட்டேன்.காலை ஏழு மணி அளவில் அலுவலகம் கிளம்பி விட்டதால் என் நண்பர்களுடனும் பேச முடியவில்லை.என் இன்பாக்ஸ் ஐ திறந்து பார்த்தால் என் கம்பெனி சி .ஈ .ஒ அமெரிக்காவில் இருந்து மும்பையில் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவம் என்று மெயில் அனுப்பி இருந்தார்.நான் அதை திறந்து படித்த உடன் தான் விபரம் அறிந்தேன்.கேவலமாக இருந்தது.இந்த ஐந்து நாட்களாக நான் டி .வீ சேனல் அருகில் செல்லவே இல்லை.ஒரு விநாடி கூட அந்த காட்சிகளை பார்க்க வில்லை.நான் அறிந்தது எல்லாம் நாளிதழிலும் ,இன்டர்நெட் செய்திகளும் தான்.இந்த நேரத்திலும் இந்த பாழாய் போன அரசியல் இப்படி விளையாடுகிறது.

3 comments:
Damn the politics..Nothin to say, People should act..
now-a-days resigning for his/her CM / MP position is said to be the biggest solution for these killings..
Man we indians have short term memory lose,which is the investment for greedy, stupid and lousy politicians.
FBI has come in for investigation.. Shame for our nation's intelligence and security.. Its nice that u didn't watch those live coverages.. Man each and every mumbai police men were acting like goose.. until the NSG and other commando force in these police men were just running from one place to other :(
Fine lets all come out of these shit.. we cant do anything and we will not do anything for sure.... Only these politicians gain in flood and blood :(
when i was watching these live coverages, i coud see these birds flying here and there after each gun shot... Nice title dude.. i liked it :)
I differ a little from Vinoth's POV. The policemen are not to be blamed, but the system is. When your opponent has a AK series rifle, a few grenades, night-vision goggles, loads of RDX, etc. and you are not even armed with a good enough bullet-proof vest (which would have saved the life of Hemant Karkare - the ATS chief), what do you expect them to do.
We would have seen repeated e-mail making a mock of the transport that Policemen inb India have as compared to foreign countries.Same is the case with the weapons as we well. Lot of senior police officers have stripped apart the system's failure which they have asked for reforms.
When politics comes in the way of every good in life, you are not to blame that those good things happened to us.
Post a Comment