பாரதி 1919 இல் எழுதிய ஒரு வித்தியாசமான ஒரு பாடல் இன்றைய காலகட்டத்தில் மிக மிக தேவையாக இருக்கிறது.இந்த பாடல் என்றுமே இந்த உலகத்தில் ஒரு தேவையாக மட்டுமே நிலைத்து இருக்கும்.பாரதிக்கு பராசக்தி மீது இருந்த ஒரு நம்பிக்கை மதத்தை தாண்டிய ஒரு நம்பிக்கை.அவர் சுற்றமும் சுழலும் சுகம் பெற வேண்டியது அவளை தான்.மகாசக்தியாக அவர் பார்த்து இருந்த ஒரு நம்பிக்கை அவர் பாடல்களில் ஒரு தரிசனமாக இருந்தது.இருக்கிறது.இந்த பாடல் ஒரு நட்டுப்புறது குறவர் பாடலாக இருப்பது மேலும் வித்தியாசத்தையும் ,அழகையும் கூட்டுகிறது.என் பாரதியார்கவிதைகள் பக்கங்களில் எழுத தேடி கொண்டிருந்த பொழுது இந்த பாடல் மிகவும் ஈர்த்தது.இதற்கு ஒரு ராகம் போட்டு பாடினால் சுகமாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------
குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது ;நல்ல காலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி ,சொல்லடி ,சக்தி மாகாளீ
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு
தரித்திரம் போகுது ;செல்வம் பெருகுது
படிப்பு வளருது ,பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் ,
போவான் ,போவான் ஐயோவென்று போவான் !
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது ;தொழிலாளி வாழ்வான் ;
சாத்திரம் வளருது ;சூத்திரம் தெரியுது ;
யந்திரம் பெருகுது ;தந்திரம் வளருது;
மந்திரமெல்லாம் வளருது ,வளருது ;
சொல்லடி ,சொல்லடி,மலையாள பகவதீ
அந்தரி ;வீரி ,சண்டிகை ,சூலி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது ;
தொப்பை சுருங்குது ;சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது ;
பயந் தொலையுது ,பாவந்தொலையுது
சாத்திரம் வளருது சாதி குறையுது ;
நேத்திரம் திறக்குது ,நியாயம் தெரியுது ;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது ;
வீரம் வருகுது ;மேன்மை கிடைக்குது ;
சொல்லடீ சக்தி மலையாள பகவதி
தர்மம் பெருகுது ;தர்மம் பெருகுது.

2 comments:

Vinoth Pradeep said...

Nice one buddy.

Bharathi..grrrrrr..we are missing u a lot :(

Karthik said...

Yeah man...Every body who have read him misses him