இந்த பகுதிக்கு வந்து வெற்று கையுடன் திரும்பிய என் நண்பர்களுக்கு !

நீண்ட பயணத்திற்கு பிறகு ஒரு நிறுத்தம் தேவை.மூண்ட கனவின் பிறகு ஒரு விழிப்பு தேவை.அழைப்புகளுக்கு ஒரு நாள் திரும்பி தான் ஆக வேண்டும்.இந்த வருடம் ஒரு பயணம் .ஒரு வருடத்தில் எதுவும் மாறாமல் இருந்தது.வாழ்க்கை சக்கரம் சுழலும் விதத்தில் நான் என் பிம்பத்தை கூட வெறுத்து கொண்டிருந்தேன்.இன்பங்களும் ,களிப்பும் போலியாக எனக்குள் தெரிந்து கொண்டிருந்தது.என்னை மீறிய ஒரு வித வயது என்னை ஆக்ரமித்து கொண்டிருந்தது.என்னை ஆர்பரித்து கொண்டிருந்த ஒவ்வொரு காலகட்டங்களும் விடை இல்லாமல் என்னை பார்த்து கொக்கரித்து கொண்டிருந்தது.

இன்று கேட்கலாம் இந்த பகுதியில் இந்த வருடத்தில் எழுதாமல் போன காலங்கள் என்று எடுத்து கொண்டால் இந்த ஒரு மாதம் மட்டுமே .எழுதாமல் போனதற்கு காரணங்கள் இல்லை.ஆனால் மாற்றங்கள் இருக்கின்றன.மாற்றங்கள் நிலையானது இல்லை என்று தெரிந்தே இந்த மாற்றத்தை ஏற்று கொண்டிருக்கிறேன்.என்னை பற்றி படித்து படித்து சலித்து போனவர்களுக்கு இந்த பகுதியில் புதியதாக நான் ஒன்றும் சொல்ல போவதில்லை.

குழப்பவில்லை .இந்த வருடம் மிக மிக தெளிவான ஒரு படிப்பினை எனக்கு.பல விஷயங்கள் எனக்குள் தெளிந்து இருக்கின்றன.சில காயங்கள் ஆறி போகும் என்று தெரிந்து இருக்கிறது.ஒரு முல்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்ற கூற்று உண்மை என்று புரிகிறது.தெரிந்தே ஒரு முள்ளை நான் கையில் எடுத்து இருக்கிறேன்.ரோஜாவை ரசிக்கும் வரை எனக்கு வலி தெரிய போவதில்லை.இந்த வருடம் அதிகமாக யோசித்து இருக்கிறேன்.அதிகமாக தேடி இருக்கிறேன்.தேடல்கள் எனக்கு வடிகாலாக அமைந்து இருந்தது.அதில் இருந்து வழிந்தது எல்லாம் எனக்குள் இருந்த ஒரு வித தேங்கிய வெற்று நிஜங்கள்.


ஒரு சில நாட்கள் என்னால் எழுத தோதாக அமையாமல் போனபோது புலம்பி இருக்கிறேன்.கண்ணீரையும் ,காணலையும் துணையாக கொண்டு நிம்மதியை தொலைத்து கொண்டிருந்தேன்.வித்தியாசமாக செய்கிறேன் என்று நினைத்து கொண்டு ஆதி காலம் முதல் மனிதன் செய்து வந்த அதையே செய்து வந்திருக்கிறேன்.எங்கெல்லாமோ இளைப்பாறி இருக்கிறேன்.எங்கும் தாகம் தீராமல் சுற்றி வந்து இருக்கிறேன்.என்னை சுற்றி இருக்கிறவர்கள் எல்லாம் வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள்.அது தான் அடுத்த கட்டமா என்று கூட ஏற்று கொள்ள மனம் தயங்கி கொண்டிருந்தது.ஆனாலும் அவர்களின் தீர்மானங்கள் மேடை ஏறும் பொழுது நான் உடன் இருந்து வாழ்த்தி வந்து இருந்தேன்.வாழ்த்துக்களில் எத்தனை உண்மை இருந்ததோ அதனை ஏக்கமும் இருந்தது.அந்த ஏக்கங்கள் எல்லாம் என் சிந்தனைகளில் ஊறி கொண்டிருந்தது.என்னால் அந்த தீர்மானங்கள் எடுக்க முடியவில்லை என்று அல்ல ! அந்த தீர்மானங்கள் அவர்களுக்கு கட்டாயமாக படும்பொழுது எனக்கு ஏன் படவில்லை என்று.பல புதிய உறவுகளை அவர்கள் ஒரே நாளில் ஊரறிய உருவாக்கும் பொழுது பரவசம் இருந்தது.ஆனால் என்னால் என்னை அதே போல் ஒரு மேடையில் வைத்து பார்க்க முடியவில்லை.


நான் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு காரியமும் முட்டாள்தனமான ஒரு வித பத்தாம் பசலித்தனமாக இருந்தது.சினிமாவில் வரும் கதாபாத்திரத்தை உருவாக்கி கொண்டு நான் ஏன் அந்த தியாகி வேஷம் போட்டு கொண்டு அலைந்தேன் தெரியவில்லை.ஏன் அந்த வேட்டை நாய் வேஷம் போட்டு கொண்டு வேட்டை ஆடினேன் தெரியவில்லை.கண்கள் பார்த்த எல்லாம் மாயை என்ற கட்டாயமான மன நிலையில் தள்ளப்பட்டு கொண்டிருந்தேன் என்பதை ஒத்து கொள்ளவேண்டும்.உண்மை எதிலும் இல்லை என்பதை முழுமையாக உண்மை என்று கொண்டிருந்தேன்.


எழுதியதும் ,படித்ததும் ஒரு விதத்தில் என்னை பலவாறாக அலசி கொண்டிருந்தது என்று சொல்லவேண்டும்.மாற்றங்கள் ஒரு நாளில் நடக்கலாம் ஒரு யுகத்தில் நடக்கலாம்.பல கருத்துக்கள் எனக்குள் ஒரு வித தேக்க நிலையை மாற்றி ஒரு வித சீரான சிந்தனையை தந்து இருக்கிறது.என் செயல்களுக்கு விளைவுகளை அந்த செயல் செய்யும் முன்னவே எனக்கு தெரிகிறது.இது எவ்வளவு பெரிய மாற்றம்.என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும் என்று நம்புகிறேன்.மிக மிக அற்பமான சிந்தனைகள் அற்பமாக தெரிகிறது.


இவ்வளவையும் சொல்லிவிட்டது இதை சொல்லாமல் போனால் எப்படி ? இன்று கட்டுண்டு இருக்கிறேன்.என்னை என்னால் ரசிக்க முடிகிறது.நேரங்கள் மீதமான பொழுதுகள் போய் நேரங்களை தேடி கொண்டிருக்கிறேன்.நான் கண்காணிக்க படுகிறேன்.ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறேன் .அதிகம் அலட்டி கொள்ளாமல் ,கட்டாயமும் கால கட்டமும் இல்லாமல்
நான் ரசிக்கப் படுகிறேன். எனக்கு புதிய அத்தியாயம் எழுத படுகிறது.யாரோ என் தூக்கத்தை தட்டி எழுப்பி இருக்கிறார்கள்.தூர இருந்தாலும் நெருக்கம் மீண்டும் தெரிகிறது.


முதல் வரியில் சொன்னது போல் ,என் பயணமும், என் தூக்கமும், அழைப்புகளுக்கு திரும்பாமையும் தொடரலாம்.


ஆனால் இப்பொழுதைய நிலவரப்படி


"தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்குநின்செயல் செய்து நிறைவு பெரும் வணம்
துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்பில்லை "

6 comments:

Chriz said...

welcome back... naanum leave poattu thirumba naalaiku varugirein

Vinoth Pradeep said...

vaa raja... couldn't understand lot of things.. this doesnt mean that i am poor at understanding things :P

Karthik said...

@ Chris
vaanga sir vaanga

Karthik said...

@ Vinoth

purinjukitta sari...anaa naan nalla kulappi irukkennu nalla theriyum

Karthik said...

Nijama kulappi thaan irukeenga!!

Karthik said...

@ Karthik

Naan kuzhappavillai..unmaiya solli erukken..last five lines will tell u whats the truth....