சில நேரம் மனிதர்கள் தராத சில சுகம் சில பொருட்கள் தரும்.நான் அடிக்கடி என் தம்பியிடம் சொல்லும் ஒரு விஷயம் " உனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்தா போய் எதாவது ஷாப்பிங் பண்ணு " என்று. நான் கல்லூரி சென்ற நாள் முதல் எனக்குள் அந்த பழக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்து வந்தது.இன்று வரை அது குறைய வில்லை.
வெளியில் சென்று எதாவது நமக்கு பிடித்த ஆடையோ அல்ல எதாவது ஒரு இசை தட்டோ வாங்கினால் உண்மையில் மனம் கொஞ்சம் இளசாக ஆகும் என்பது நான் இந்த பத்து வருடத்தில் கண்டு கொண்டது.சில வருடங்களாக நான் புத்தகமும் அதிகம் வாங்கி வருகிறேன்.அதனையும் மனிதர்களின் துணையை விட அதிக அளவில் சந்தோசம் தருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதில் செலவு இருக்கிறது என்பது உண்மை தான் ஆனால் அதில் ஒரு விதத்தில் நம் மனதை ரசிக்க உடன்படுத்துகிறோம் என்பது உண்மை.இந்த மாதம் எல்லா கடைகளும் தள்ளுபடி விற்பனை விளம்பரம் போட்டிருப்பது கொஞ்சம் அதிகம் செலவு வைக்கும் காரியம் தான்.இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பிராண்ட் வாங்கி முடித்த அடுத்த நாளே நமக்கு பிடித்த அடுத்த பிராண்ட் தள்ளுபடி விற்பனை ஆரம்பித்து இருக்கும்.இதை தவிர்க்க முடியாது.
சில நேரங்கள் நமக்கு பிடித்த ஆடையோ அல்ல எந்த பொருளையோ அணியும் சுகம் வருகிறது அல்லவா .அது ஏன் ? என்று யோசித்து பார்த்து உண்டா ? அதற்கு காரணம் இது தான்.நமக்கு பிடித்தவற்றை செய்யும் பொழுது நமக்கு சந்தோஷம் நேருகிறது.அது பொருட்களிலும் தான் .
இந்த ஒரு மாதத்தில் நான் வாங்கிய சில பொருட்கள் பாசில்(Fossil) கடிகாரம் ,IVth generation IPOD ,நண்பன் அசலம் வாங்கி வந்த போஸ் (Bose Headphone)மற்றும் சென்னை புத்தக கண்காட்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் .

1 comments:
Total agreement. Sometimes, just the trip out of the shell helps to do wonders. As you said, the expense that you incur in the shopping will be miniscule when compared to the relief that you get from your boredom or sadness, and the joy that creeps in.
Bose headset, huh!!! Amazing!!!
Post a Comment