இந்த விழிப்பு கொஞ்சம் கனமாக இருக்கிறது ,காரணங்கள் தெரியவில்லை.ஆனால் தெளிவாக இருக்கிறது. பல விடைகள் தேட வேண்டும் என்ற நினைப்பு இல்லாமல் பல நாள் தேடி துரத்தி கொண்டிருக்கும் கேள்விகள் எல்லாம் எங்கோ தூரத்தில் நின்று முகம் தெரியாமல் முழித்து கொண்டு இருப்பது போல் தெரிகிறது. கனமாக இருந்தால் தெளிவாக இருக்க கூடாது என்று பொருள் இல்லையே .ஆனால் என்னால் என் எண்ணங்களை ஒரு சேர கொண்டு வர முடியவில்லை.நேரம் எங்கோ சென்று இருக்கிறது என்று தெரிகிறது ஆனால் எங்கே என்று தெரியவில்லை. இதோ நான் முழித்து விட்டேன் .

இன்னும் ஒரு காலை என்று நினைக்க முடியாமல் அது என்னை வாட்டி எடுக்கிறது அதற்கு என்னிடம் எந்த காரணமும் தேட முடியாத நிலையில் காற்று வீசி கொண்டிருக்கிறது..இது என்ன விதமான காலை என்று எனக்கு பரிச்சயம் இல்லை.அதை பார்க்க கூட முடியாமல் நான் சோம்பலாக தெரிகிறேன் ,என்னை பார்க்க கூட விருப்பம் இல்லாமல் காலை வேளை அழகாய் தோன்றுகிறதாம். காலையின் அழகை நான் அதிகம் ருசித்தது இல்லை. ஆனால் சில நேரத்தில் அது உண்மை என்று தெரிகிறது.


காலை எழுந்து குளித்துவிட்டு நான் கடவுள் முன் நிற்பது ஒரு வழக்கமான செயல் அல்ல ! சில நாட்கள் அப்படி நிகழும் .அது தான் அன்றும் நடந்தது .நான் எழுந்து கிளம்பிவிட்டேன் .தெளிவாக தெரிகிற வானம் என்னை எந்த விதத்திலும் யோசிக்க வைக்க வில்லை.அலுவலகத்திற்கு இன்னும் அரை மணி நேரம் பறக்க வேண்டி இருக்கிறது.காலை கொஞ்சம் சீகிரமாக கிளம்பிவிட்டோமா என்று நினைக்கிறேன்.

ஒருவிதமாக எல்லாம் சாந்தமாக தெரிகிறது.என் வீட்டை நான் தான் முதலில் திறக்கிறேன்.வெளியே இருந்த நாழிதலை எடுத்து உள்ளே வீசுகிறேன்.காலை உணவருந்தி பல காலம் ஆனது போல் நினைவு.எல்லோரும் வீட்டின் உள் அடைபட்டு இருக்கிறார்களா? .சிலர் மட்டும் வெளியே வருகிறார்கள்.

இதோ

வானம் தெளிவாக இருப்பது அந்த ரோடுகளில் தெரிகிறது .ஆனால் எனக்கு ஒன்றும் பெரிய அளவில் அதில் ஆர்வம் இல்லை.பெண்கள் எல்லாம் மலர்ச்சியாக தெரிகிறார்கள்.ஆண்கள் எல்லாம் வேகமாக தெரிகிறார்கள்.அதற்கு காரணங்கள் தேட நான் முனையவில்லை.யாரோ அழைத்து போல் சிலர் திரும்பி பார்த்து கொண்டு செல்கிறார்கள்.இவர்கள் எல்லோரையும் சுற்றி பார்த்து கொண்டே நான் செல்கிறேன்.என் வாகனத்தை பார்த்து கொண்டே செல்லும் ஒரு சில பள்ளி சிறுவர்கள்.

சில பல சிக்னல் கடந்து சென்று கொண்டிருக்கிறேன்.என்னை துரத்தும் ஒரு ஷேர் ஆட்டோவை நான் வழி விட்டு செல்ல சொல்கிறேன்.வழி எங்கும் வாகனங்கள் நேரம் எடுத்து படை எடுத்து கொண்டிருந்தன.எனக்கு நேரம் ஆகி கொண்டிருந்தது.

இந்த சிக்னலில் தப்பித்தால் நான் சீக்கிரம் போய் சேர்ந்து விடலாம் என்று எனக்கு தெரியும்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக நேரம் ஆகி கொண்டிருக்கிறது.என் கண்ணாடி நனைந்து கொண்டிருக்கிறது.இதோ அந்த நபர் என்னை பார்க்க தன் ஹெல்மட்டை கழட்டுகிறார்.அவர் ஹெல்மட் நனைந்து இருக்கிறது.ஏன் என்று மேலே கண்ணை சுழட்டுவதற்குள் இதோ நாங்கள் எல்லோரும் நனைகிறோம்.காலம் நேரம் இல்லாமல் வரும் ஒரு விஷயத்தில் இந்த மழை எப்படி எல்லாம் முன்னே நிற்கிறது.

மழை சென்னையின் விருந்தாளி,வந்தால் வீட்டை அலங்கோல படுத்தும் ஒரு விருந்தாளி,விருப்பம் இல்லாமல் வரும் ஒரு மனிதன்.பலருக்கு கொண்டாட்டம் ,என்னை போல் வீட்டில் இருந்து அலுவலகம் செல்பவர்களுக்கு கொண்டாட்டம் இல்லாமல் ஒரு வித ஜாக்கிரதை உணர்வுடன் ரசிக்க படும் ஒரு விஷயம்.நனையாமல் அலுவலகம் செல்ல வேண்டும்,சினிமா செல்லவேண்டும்,ரயிலை பிடிக்க வேண்டும்.எல்லாம் மழை இருந்தால் நடக்க சாத்தியம் ஏது?

இதோ இந்த சிக்னலில் நகர கூட முடியாமல் நடுவில் மாடி கொண்டிருக்கிறேன்.சிக்னல் விளக்கு மூன்று நிமிடத்திற்கு ஓடி கொண்டிருக்கிறது.பக்கவாட்டில் உள்ள ரோட்டில் மக்கள் தெறிக்க சிக்னலை தாண்டி விரைகிறார்கள்.வேடிக்கை என்னவென்றால் எல்லோரும் காரில் செல்கிறார்கள்.பைக்கில் உள்ளவர்கள் மெதுவாக செல்கிறார்கள்.பாதுகாப்பு கருதி கூட இருக்கலாம்.ஆனாலும் எல்லாம் நடக்கிறது மணி பத்தை தாண்டி கொண்டிருக்கிறது.எனக்கு வேலை இருக்கிறது.

மழை என்னிடம் எதோ ஒருவித உணர்வுடன் மேலிடுவது என்னால் உணரமுடிகிறது.என்னை கட்டுகோப்பில் சிறை இட்ட சந்தோசம் போல் இருந்தது.என் அலங்காரங்கள் எல்லாம் கரைக்க பட்டுவிட்டன.எதோ நான் கரைந்து போனாலும் என்னுடை ஆடைகள் எடை கூடியது போல் தோன்றுகிறது.நனைந்த பொழுது எதற்கு நாணம் என்ற வரிகள் நினைவில் வருகிறது.வெள்ளை வெளேர் சட்டை என்ன நிலைக்கு ஆளாக போகிறது என்ற கவலை தொற்றி கொள்கிறது.என் செல்போனை எடுத்து என் பைக் பாக்கெட் இல் வைக்கிறேன்.என் பர்ஸ் பத்திரமாக உள்ளே வைக்க படுகிறது.என்னவெல்லாமோ நனையாமல் ஒளிக்க படுகின்றது.என் பையை முன்னே வைத்து என் சட்டையின் முன் பாகம் நனையாமல் இருக்க ஏதோ செய்கிறேன்.

எத்தனையோ முறை மழைக்கு பயந்து ஓடி ஒளிந்து இருக்கிறேன்.இன்று ஓடவும் முடியவில்லை,நகரவும் முடியவில்லை.இப்படி அப்படி முனைகிறேன் முடியவில்லை.இந்தியாவின் வளர்ச்சிக்கு அடையாளமாக ஒரு அயல்நாட்டு கார் கருப்பு நிறத்தில் நின்று கொண்டிருக்கிறது என்னை நகர விடாமல் !

எதை ரசிப்பது ,நனைந்து விட்டேன்,முற்றிலும் அதனையும் நனைந்து கொண்டிருக்கிறது.என் பட்டணதனமும் ,நான் ஒரு போலி மேல் தட்டு இளைஞன் என்ற நினைப்பும் நனைந்து கரைந்து கொண்டிருக்கிறது.என் அந்த பொழுதைய ஆடை ,வேலை பற்றிய கவலைகள் எல்லாம் கரைந்து இதோ என்னை அறியாமல் நான் ரசித்து கொண்டிருக்கிறேன்.

இந்த மழை ஒரு எதிர்பார்க்காத ஒரு மழை ,இது மழை காலமும் அல்ல ,நான் ரசிக்க வேண்டும் என்று பெய்கிறதா.போடா முட்டாளே உன்னை விட நான் பலமானவன் என்ற சப்தத்தில் என்னை நனைத்து விட்டது.நானும் ஒன்றி போகிறேன்.

சிக்னல் விழுகிறது.நகர மனம் வரவில்லை.மழை என் உஷ்ணத்தை குறைத்து விட்டது.எரியும் ஒரு போலி தனத்தை குளிர்வித்து விட்டது.ஆச்சரியம் நான் நனைய விரும்புகிறேன்.இந்த பாலத்தின் அடியில் செல்கிறேன்.மேலே மழை ராக் இசை போல் சப்தம் கூட்டி பெய்து கொண்டிருப்பது கேட்கிறது.அடுத்த விநாடி பாலத்தை தாண்டி வெளியே வருகிறேன்.மழையில் ஒன்றுகிறேன்.

நண்பன் ஆகி விட்டான் மழை.என் கண்ணாடி நனைந்து வழிகிறது.எனக்கு தெளிவாக தெரிய என் கண்ணாடியை துடைத்து கொள்கிறேன்.அலுவலகம் செல்ல மனம் வரவில்லை.திரும்பாமல் நேராக செல்கிறேன்.பெட்ரோல் பங்கில் கூட்டம் கூடமாக மக்கள் என்னை பைத்தியம் என்று நினைத்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்,நான் அசரவில்லை .காரணம் தெரியாமல் எனக்கு மௌனராகம் படத்தில் வரும் ரேவதி நினைவில் வருகிறார்.மழையின் ஆனந்தத்தை ரசிக்கிறேன்.மழையின் வேகத்தில் பயணிக்கிறேன்.மழையின் சமத்துவத்தை ஆர்பரிக்கிறேன்.பயணித்து எங்கோ வந்து இருக்கிறேன்.அவனும் நானும் மாறி மாறி தொடர்ந்து கொள்கிறோம்.கூட்டம் இல்ல்லாமல் சாலைகள் மிதக்கின்றன.

மழை நீர் தெறித்து சாலையில் விழும் பொழுது நட்சத்திர வடிவில் உருபெற்று மறைகிறது.நட்சத்திரத்தை தான் கொண்டு வருகிறதோ மழை? ஒன்று இரண்டு மரங்கள் " வருக வருக " என்ற சப்தம் கூட்டுவது போல் அதன் கீழே செல்லும் பொழுது பன்னீர் தெளிக்கும் ஒரு உணர்வு.

திரும்பி ஒரு சிக்னலில் நிற்கிறேன்.நண்பன் நேரம் ஆகிவிட்டது போல் குறைகிறேன்.சிக்னலை தாண்டுகிறேன்.காணவில்லை.கூட்டம் திடீர் என்று கூடுகிறது.மணி பதினொன்றை நெருங்கி கொண்டது.அலுவலகம் செல்லலாம் என்று திரும்பி வருகிறேன்.

அலுவலகம் வந்து அடைந்து .பைக்கை நிறுத்தி என் வெள்ளை சட்டையை பார்க்கிறேன் ,சொல்ல முடியாத ஒரு நிறத்தில் இருக்கிறது.

" என்னடா நனைஞ்சு போய்டியா ! நாங்க தப்பிச்சிட்டோம் ,என்னைக்கு முழுசும் உனக்கு கஷ்டம் தான் ,சட்டை சூப்பர் மாமு "

போலித்தனம் மீண்டும் தொற்றிகொண்டது.சட்டையை சுத்தம் செல்ல கிளம்புகிறேன்.

என் வெள்ளை சட்டையை பார்க்கிறேன்

2 comments:

Aslam said...

Anna waiting for your posts....why so long breaks???

Karthik said...

sorry to keep u waiting man...really under tremendous pressure...not well also...so had to take a break...it wasnt planned also.:(