ஒரு தொடர்பற்ற தொலைவில் இருப்பது போல் உணர்கிறேன்,யாரையும் காணாமல் எதுவும் பேசி கொள்ளாமல் மனதுக்குள் எதையும் போட்டு அசை போட்டு கொள்ளாமல் இருப்பது போல் வாழ்ந்து எனக்கு பழக்கம் இல்லை தான்.ஆனால் அது தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை என் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.நன்றாக செல்லும் எல்லாம் ஒரு வகையில் முடிய வேண்டும் என்பது ஒரு விதத்தில் உண்மை தான்.
தனிமை முடிந்தது என்று சொல்லலாம் .அதற்கு காரணம் அடுக்கி கொண்டும் போகலாம்.ஆனால் நான் பதிவுகள் கூட போட முடியாமல் திணறி இருக்கிறேன்.நேரம் இல்லை என்று சொல்ல முடியாது .ஆனால் ஒரு வித உணர்வு என்னை தின்று கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.எதை பற்றி எழுதலாம் என்ற பசி என்னை தேட வைத்து கொண்டிருந்தது இவ்வளவு நாளும். உண்மை என்னவென்றால் நான் செல்லும் இடங்களில் எல்லாம் கதையை தேடி இருக்கிறேன்.இன்று ஏன் என்னால் முடியவில்லை ?
ஒரு வித உணர்வு என்று சொல்வது ,இயலாமை என்று கூட சொல்லலாம்.உருப்படியாக செய்ய முடியவில்லை என்ற எண்ணம் இல்லை.அதற்கு அவசியமும் இல்லை.ஏன் என்றால் நான் உருபடியாக எதுவும் செய்யவில்லை என்று எனக்கு தீர்மானம் ஆகி போன ஒரு விஷயம்.இதில் தோன்றும் இயலாமை என் தேக்க நிலையை பற்றி சொல்கிறேன்.
என் கனவுகளை நான் துரத்த தவறிவிட்டேனா என்று தெரியவில்லை.ஆனால் ஒன்று தெளிவாக தெரிகிறது.நான் இன்று செய்து கொண்டிருக்கும் வேலை எனக்கு உரித்தானது இல்லை .வேறு வகையில் சொல்லவேண்டும் என்றால் நான் இதை செய்ய வந்தவன் இல்லை.என் களம் வேறு என்று தெரிகிறது.ஆனால் என் இடர்களும் ,என் தயக்கங்களும் நியாயமாக தோன்றுவதால் என்னால் அதை விட்டு மீண்டு வரவும் முடியவில்லை.கட்டாயங்களை மிதித்து கனவுகளை மதிக்கும் பக்குவமோ அல்ல தைரியம் எனக்கு இன்னும் வரவில்லை என்று தோன்றுகிறது.அதனாலையே என்னால் புத்தகம் வசிக்க முடியவில்லை,அழகான பெண் என்னிடம் பேசி கொண்டிருக்கும் பொழுது என் எண்ணம் எதையோ யோசித்து கொண்டிருக்கிறது . " கார்த்திக் நீ எதையோ யோசிச்சிட்டு இருக்க ? " என்ற வார்த்தை நான் தினமும் கேட்கும் ஒரு விஷயமாக ஆகி விட்டது.
எதை யோசிக்கிறேன் என்றும் தெரியவில்லை,கருமம் ஆனால் பாடாய் படுத்துகிறது என்று தான் சொல்லவேண்டும்.உத்வேகம் குறைந்து காணப்படுகிறேன்.நிலை இல்லாமல் என்று சத்தியமாக சொல்ல மாட்டேன் .சோகமாக இல்லை .எல்லாம் சாதரணமாக தான் இருக்கிறது ஆனால் ஒரு வித தேக்க நிலை எல்லாவற்றிலும் தோன்றுகிறது.சோம்பல் கொஞ்சம் தொனிக்கிறது.
ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள நேரம் பிடிக்கிறது.நான் ஏன் இப்படி ஆனேன் அல்ல நான் இப்படி தானா ? என் குட்டு வெளி பட்டு விட்டதா தெரியவில்லை.

4 comments:
mudiayala!!
????
Sometimes committments will weigh down your ambitions to a halt, but that will not have the final say. Be yourself, work towards your goal (you might not be able to dedicate yourself completely on that) at least in parts. You'll reach your destination in 5 years rather than the 2 that you were aiming at.
May be your bad health would have driven you so...ippo than ellam nallapadiya mudinjathulla..inimel enna kavala?? :)
Cheer up pal..we are there for you!..
Post a Comment