May 18, 2008

பயணம்

இதோ இந்த கால்கள்
சொல்லும் பாதையில் நடந்து செல்கிறேன்
கண்கள் திரும்பும் காட்சிகளை
பார்த்து கொண்டிருக்கிறேன்.
உண்மைகளும் பொய்களும் ஒரு சேர தெரிகின்றது
உரிமை மீறி சில விஷயங்கள் முன்னேறுகிறது
பாதைகளும் காட்சிகளும்
எனக்கு மட்டும் சொந்தம் அல்ல
ஆனால் எனக்கும் சொந்தம்
என்னுடன் எத்தனையோ பேர் வருகின்றார்
யாரையும் எனக்கு தெரியவில்லை ,
தெரிந்து கொள்ள முகவரியும் இல்லை
முகமூடிகள் கிழிக்க படும் போது
என் தலையும் தொங்கிவிடுகிறது
களிப்பும் கட்டளையும் அங்கே குழுமி இருக்கின்றது
விட்டு போன உறவுகள்
விடை பெரும் கனவுகள் எல்லாம் நினைவாகிவிடுகிறது

எல்லாம் என் பயணம் பொய் என்று ஒரு சேர சொல்லி விடுகிறது

2 comments:

Vinoth Pradeep said...

Nice one da mamu.. Keep it up..

PS: any issues for ya??.. could see some flares in words...

Karthik said...

no issues ,felt writing it,,poetry is after all ur mood